வியாழன், 3 டிசம்பர், 2020

இமயமலையா? அல்லது சிமையமலையா?

இமயமலையா? அல்லது சிமையமலையா?


இம என்றால் பனி என்று பொருள். இமயமலை என்றால் பனிமலை என்று பொருள்.

சிமையம் என்றால் Knap,குன்றின் குடுமி, மேட்டுச்சரிவான நிலம், Mount, மலைக்குவடு, சிமையம், Peak, மலைமுகடு என்று பொருள்.

இமயமலையானது பனிபடர்ந்த உயர்ந்த குன்றுகள் நிறைந்த மலைத்தொடர் ஆகும்.

இதை நமது சங்கப் புலவர்கள் நன்கு அறிந்திருந்துள்ளனர்.

சங்கப்பாடல்களில், "இமய" 15 இடங்களில் காணப்படுகின்றது.  "சிமைய" 39 இடங்களில் காணப்படுகின்றது.

-----------------------

"இமய" 15 இடங்களில் காணப்படுகின்றது.

கூடுதல் விளக்கம் வேண்டின் அந்த வரிகளை அழுத்தவும்

வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த - சிறு. அடி 48

பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற்றிணை 356/3

இமயமும் துளக்கும் பண்பினை - குறுந் தொகை 158/5

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - பதிற்றுப் பத்து 11/23

வட திசை எல்லை இமயம் ஆக - பதிற்றுப் பத்து 43/7

நிலனும் நீடிய இமயமும் நீ - பரி பாடல் 1/51

நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி பாடல் 5/48

பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் - பரி பாடல் 8/11

இமய குன்றினில் சிறந்து - பரி பாடல் 8/12

கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி - பரி பாடல் 23/83

முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து - அக நானூறு 127/4

பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புற நானூறு 2/24

வட திசையதுவே வான் தோய் இமயம் - புற நானூறு 132/7

கழை வளர் இமயம் போல - புற நானூறு 166/33

மாறி பிறவார் ஆயினும் இமயத்து - புற நானூறு 214/11


---------------------------


சங்கப்பாடல்களில் "சிமைய" 39 இடங்களில் காணப்படுகின்றது.

1) நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை - திரு. அடி 253

2) இமையவர் உறையும் சிமைய செ வரை - பெரு. அடி 429

3) தேன் தூங்கும் உயர் சிமைய - மதுரை. அடி 3

4) பனி வார் சிமைய கானம் போகி - மதுரை. அடி 148

5) கலை தாய உயர் சிமையத்து - மதுரை. அடி 332

6) நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா - நெடு. அடி 27

7) மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் - பட்டின. அடி 138

8) கணம் கொள் சிமைய உணங்கும் கானல் - குறுந் தொகை 372/3

9) மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் - ஐங்குறு நூறு 100/2

10) வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் - ஐங்குறு நூறு 268/3

11) நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் - பதிற்றுப் பத்து 66/11

12) வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை - பதிற்றுப் பத்து 88/34

13) துளியின் உழந்த தோய்வு அரும் சிமை தொறும் - பரி பாடல் 7/13

14) வளி பொரு சேண் சிமை வரை அகத்தால் - பரி பாடல் 8/90

15) உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட - பரி பாடல் 9/3

16) தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து - பரி பாடல் 23/2

17) வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - அக நானூறு 3/6

18) தேம் படு சிமய பாங்கர் பம்பிய - அக நானூறு 94/1

19) மை தோய் சிமைய மலை முதல் ஆறே - அக நானூறு 119/20

20) அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் - அக நானூறு 138/8

21) மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் - அக நானூறு 143/13

22) உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் - அக நானூறு 145/9

23) பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை - அக நானூறு 153/11

24) விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை - அக நானூறு 159/13

25) விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - அக நானூறு 179/1

26) உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க - அக நானூறு 182/15

27) அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் - அக நானூறு 185/10

28) அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை - அக நானூறு 190/6

29) உரும் இறைகொண்ட உயர் சிமை - அக நானூறு 192/14

30) தேம் முதிர் சிமைய குன்றம் பாடும் - அக நானூறு 208/2

31) விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர் - அக நானூறு 215/1

32) பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து - அக நானூறு 218/5

33) பிரசம் தூங்கும் சேண் சிமை - அக நானூறு 242/21

34) பாறு கிளை சேக்கும் சேண் சிமை - அக நானூறு 247/12

35) ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் - புற நானூறு 120/18

36) உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந - புற நானூறு 139/8

37) விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - புற நானூறு 151/2

38) சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை - புற நானூறு 152/30

39) அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புற நானூறு 158/11

நன்றி .. பாடல் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/

சனி, 28 நவம்பர், 2020

பன்றி

நண்பரின் முகநூல்பதிவு இது. நன்றி

உதயகிரி குகைகள்:

குகை 5 என்பது மற்ற குகையை விட பிரபலமான இடமாகும், மேலும் உதயகிரி குகைகளில் மிகவும் புகழ்பெற்ற வராஹா அவதாரத்தின் சிறப்புகளை கொண்டது. விஷ்ணு தனது வராஹா அவதாரத்தில் பூமியை இன்னல்களிள் இருந்து மீட்கும் கதை இது. இந்த சிற்பங்களை "உதயகிரியின் நடுநாயகமாகவும், கண்களை கவரக்கூடியதாக உள்ளது" என்று வில்லிஸ் விவரித்தார். இந்து புராணக்கதை வேத இலக்கியங்களான டைட்டாரியா சம்ஹிதா மற்றும் சதாபத பிராமணத்தில் வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் பல வேதத்திற்கு பிந்திய நூல்களில் இது காணப்படுகிறது. புராணக்கதை தெய்வம் பூமியை (பூமாதேவி, பிருதிவி)  மிகுந்த இன்னல்களை சித்தரிக்கிறது, அவர் அடக்குமுறை அரக்கன் ஹிரண்யக்ஷாவால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டபின், அவளோ அவள் சுதந்திர  வாழ்க்கையை வாழ முடியாது. அவள் அண்டக் கடலில் மூழ்கடித்து இருக்கிறாள். விஷ்ணு வராஹா அவதாரம் வடிவில் வெளிப்படுகிறார். அவர், புராணக்கதையில் கதாநாயகன்னாக, கடலில் இறங்கி, அவளைக் கண்டுபிடித்து, அவள் அவரது கொம்பு  மீது அமர்ந்து கொள்கிறாள், அவர் அவளை பாதுகாத்து வெளியே தூக்குகிறார். மகத்தான வெற்றி பெற்று, பூமாதேவியின்  இன்னல்கள்  முடிவுக்கு வந்தது.

விஷ்ணு மீண்டும் தனது கடமையை நிறைவேற்றுகிறார். வராஹா புராணக்கதை இந்து உரையில் பல வரலாற்று புராணக்கதைகளில் இதுவும் ஒன்றாகும், இது சரி மற்றும் தவறு, நல்லது மற்றும் தீய அடையாளங்களை மற்றும் அடி ஆழத்திற்குச் சென்று நல்ல, சரியான தர்மத்தை மீட்பதற்கு  தேவையானதைச் செய்ய விரும்பும் ஒருவரின் மன ஆற்றலை எழச் செய்கிறது. வராஹா அவதார புராணத்தில்  விவரிக்கும் பூமாதேவியை  அந்தரத்தில் தொங்கும் பெண்ணாகவும், கதாநாயகன் மற்றும் கொடூரமான அரக்கனை உருவகப்படுத்தப்படுகிறது. அவரது வெற்றி 4 ஆம் நூற்றாண்டில் மதிப்பிடப்பட்ட மற்றும் போற்றப்படும் தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களின் ஒரு விண்மீன் மூலம் உற்சாகப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட கதாபாத்திரங்களின் அவர்களின் உருவப்படம் இந்து நூல்களில் காணப்படுகிறது.

நீங்கள் பார்க்கக்கூடிய படத்தில் எண் இணைக்கப்பட்டு படத்தை புரிந்துகொள்ள உதவுகிறது:

01. வராஹாவாக விஷ்ணு
02. பிருதிவியாக பூமாதேவி 
03. பிரம்மா (தாமரையில் அமர்ந்து)
04. சிவன் (நந்தியில் அமர்ந்து)
05. ஆதித்யாஸ் (அனைவருக்கும் சூரிய ஒளிவட்டங்கள் உள்ளன)
06. அக்னி (நெருப்பில் முடி)
07. வாயு (முடி காற்றோட்டமானது, பொங்கியது)
08. அஷ்டவாசஸ் (6 & 7 உடன், விஷ்ணு புராணம்)
09. ஏகதாச ருத்ராஸ் அல்லது பதினொரு ருத்ராக்கள் (இத்திஃபாலிக், மூன்றாவது கண்)
10. கணதேவதாஸ்
11. ரிஷிகள் (வேத முனிவர்கள், மரங்களின் பட்டைகளை அணிந்து, ஒரு தாடி, தண்ணீர் பானை மற்றும் தியானத்திற்காக ஜெபமாலை)
12. சமுத்ரா
13. குப்தா பேரரசு அமைச்சர் விரசேனா
14. குப்தா பேரரசின் மன்னர் சந்திரகுப்தா II
15. நாகதேவா
16. லட்சுமி
17. அதிகமான இந்து முனிவர்கள் (முழுமையற்ற புகைப்படம்; இவர்களில் வேத சப்தரிஷிகளும் அடங்கும்)
18. முனிவர் நாரதா மகாதி (தம்புரா) விளையாடுகிறார்
19. முனிவர் தம்புரு வீணா விளையாடுகிறார் கதாபாத்திரங்கள் பாரம்பரிய உடையில் அணிந்திருக்கின்றன.

ஆண் தெய்வங்கள் வேட்டி அணிந்தும் பெண் தெய்வங்கள் புடவை அணிந்து இருப்பது போல் ​​வராஹா சிற்பங்கள் காட்சி தருகிறாது.

Udayagiri Caves:

Cave 5 is a shallow niche more than a cave and contains the much-celebrated colossal Varaha panel of Udayagiri Caves. It is the narrative of Vishnu in his Varaha avatar rescuing goddess earth in crisis. Willis has described the relief as the "iconographic centre-piece of Udayagiri".

The Hindu legend has roots in the Vedic literature such as Taittariya Samhita and Shatapatha Brahmana, and is found in many post-Vedic texts. The legend depicts goddess earth (Bhudevi, Prithivi) in an existential crisis after she has been attacked and kidnapped by oppressive demon Hiranyaksha, where neither she nor the life she supports can survive. She is drowning and overwhelmed in the cosmic ocean. Vishnu emerges in the form of a Varaha avatar. He, as the hero in the legend, descends into the ocean, finds her, she hangs onto his tusk, he lifts her out to safety. The good wins, the crisis ends, and Vishnu once again fulfills his cosmic duty. The Varaha legend has been one of many historic legends in the Hindu text embedded with right versus wrong, good versus evil symbolism, and of someone willing to go to the depths and do what is necessary to rescue the good, the right, the dharma. The Varaha panel narrates this legend. The goddess earth is personified as the dangling woman, the hero as the colossal giant. His success is cheered by a galaxy of the divine as well as human characters valued and revered in the 4th-century. Their iconography of individual characters is found in Hindu texts.

The panel shows (the number corresponds to the attached image):

01. Vishnu as Varaha
02. Goddess earth as Prithivi
03. Brahma (sitting on lotus)
04. Shiva (sitting on Nandi)
05. Adityas (all have solar halos)
06. Agni (hair on fire)
07. Vayu (hair airy, puffed up)
08. Ashtavasus (with 6&7, Vishnu Purana)
09. Ekadasa Rudras or eleven Rudras (ithyphalic, third eye)
10. Ganadevatas
11. Rishis (Vedic sages, wearing barks of trees, a beard, carrying water pot and rosary for meditation)
12. Samudra
13. Gupta Empire minister Virasena
14. Gupta Empire king Chandragupta II
15. Nagadeva
16. Lakshmi
17. More Hindu sages (incomplete photo; these include the Vedic Saptarishis)
18. Sage Narada playing Mahathi (Tambura)
19. Sage Tumburu playing Veena

The characters are dressed in traditional dress. The gods wear dhoti, while the goddess is in a sari, in the Varaha panel.

சனி, 17 அக்டோபர், 2020

நேமியும் ஊழியும்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் 

நேமியும் ஊழியும்



"நேமி" 29 இடங்களில் காணப்படுகின்றது.

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு - சிறு. அடி 253

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு - முல்லை. அடி 1

நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த - மலை. அடி 238

நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் - மலை. அடி 525

வன் பரல் முரம்பின் நேமி அதிர - நற்றிணை 394/5

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி - குறுந் தொகை 189/3

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி - குறுந் தொகை 227/1

கடு மா நெடும் தேர் நேமி போகிய - குறுந் தொகை 336/4

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய - பரி பாடல் 1/55

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை - பரி பாடல் 1/61

தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே - பரி பாடல் 3/94

நோனார் உயிரொடு முரணிய நேமியை - பரி பாடல் 4/9

தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் - பரி பாடல் 13/6

நேமியும் வளையும் ஏந்திய கையான் - பரி பாடல் 13/9

தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் - பரி பாடல் 15/3

வலம்புரி வய நேமியவை - பரி பாடல் 15/59

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி - பரி பாடல் 19/46

பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி - கலித் தொகை 104/9

வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல - கலித் தொகை 105/9

ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு - கலித் தொகை 105/71

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர - கலித் தொகை 119/3

செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் - கலித் தொகை 127/4

கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - அக நானூறு 14/19

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - அக நானூறு 175/14

புனை தேர் நேமி உருளிய குறைத்த - அக நானூறு 251/13

நேமி உய்த்த நேஎ நெஞ்சின் - புற நானூறு 3/4

இனிது உருண்ட சுடர் நேமி - புற நானூறு 17/7

நீல் நிற உருவின் நேமியோனும் என்று - புற நானூறு 58/15

நிலம் தவ உருட்டிய நேமியோரும் - புற நானூறு 270/3
_--------+

"ஊழி" 34 இடங்களில் காணப்படுகின்றது.
தாமரை பயந்த தா இல் ஊழி - திரு. அடி 164

ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி - பொரு. அடி 106

நல் ஊழி அடி படர - மதுரை. அடி 21

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே - மதுரை. அடி 782

உரு கெழு தாயம் ஊழின் எய்தி - பட்டின. அடி 227

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - நற்றிணை 93/6

வாழலென் வாழி தோழி ஊழின் - நற்றிணை 364/6

வீழ் உறை இனிய சிதறி ஊழின் - குறுந் தொகை 270/2

வெள்ள வரம்பின் ஊழி போகியும் - ஐங்குறு நூறு 281/1

நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே - ஐங்குறு நூறு 482/4

நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக - பதிற்றுப் பத்து 21/31

ஊழி உய்த்த உரவோர் உம்பல் - பதிற்றுப் பத்து 22/11

ஆயிர வெள்ள ஊழி - பதிற்றுப் பத்து 63/20

திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி - பதிற்றுப் பத்து 71/24

நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக - பதிற்றுப் பத்து 89/8

ஊழி அனைய ஆக ஊழி - பதிற்றுப் பத்து 90/53

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - பரி பாடல் 2/4

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் - பரி பாடல் 2/6

உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும் - பரி பாடல் 2/7

செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு - பரி பாடல் 2/8

தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று - பரி பாடல் 2/9

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் - பரி பாடல் 2/12

ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு - பரி பாடல் 2/17

ஊழி யாவரும் உணரா - பரி பாடல் 2/18

ஊழி ஆழி கண் இரு நிலம் உரு கெழு - பரி பாடல் 3/23

நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை - பரி பாடல் 3/80

தானையின் ஊழி தா ஊக்கத்தின் - பரி பாடல் 22/10

மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் - கலித் தொகை 99/5

தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் - கலித் தொகை 129/1

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் - கலித் தொகை 130/4

ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் - புற நானூறு 29/22

அன்ன ஆக நின் ஊழி நின்னை - புற நானூறு 135/19

கூழும் சோறும் கடைஇ ஊழின் - புற நானூறு 160/20

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - புற நானூறு 237/1

நன்றி  http://tamilconcordance.in/

வெள்ளி, 9 அக்டோபர், 2020

Gangan, Formation of Himalaya, Formation of granite mountains, Formation of inner core of the earth,


1) Gangan, a 2000 k.m. diameter celestial hot rock planet collided on the earth.

2) Due to its collision, A rim of 2000 k.m. diameter was formed, that is Himalaya Mountain Ranges, 

3) While Collision, hot rocks were thrown out, these hot rocks are Granite mountains, 

4) The Gangan is staying in earth as Inner core (2000 k.m. diameter) of the earth.

5) The surface of the Earth was broken as Continentals, and these Continentals were moved.

6) There is no surface on the opposite side the of the Himalaya, the wide and deep Pacific Ocean was formed.

7) Diameter of the Gangan is measured as approximately 2000 k.m.
 Hence the of volume of the Gangan is ≈ 4.18879×109 km³, 
approximately 4.2×109 km³ 

8) Hence it is presumed that the mass of the earth was increased by 4.2×109 km³ (equal to the Volume of  Gangan)

9) Note : the volume of the atmosphere at sea level 4,200,000,000 cubic kilometers.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கங்கன்

கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட "விண் எரி கோள்" பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து, பூமியின் மையப் பகுதிக்குச் சென்று உள்ளது.

கங்கன் பூமியை மோதித் துளைத்துச் சென்றதால் உண்டான வளையம் (Rim) சுமார் 2000கி.மீ.  இதுதான் வட்ட வடிவமான இமயமலைத் தொடர் (நேமி மால் வரை).

பூமியின் உள்ளே சென்ற கங்கன் அங்கே இன்றளவும் கனன்று கொண்டுள்ளது.  இதனால் பூமியின் மையப் பகுதி (inner dia) சுமார் 2000 கி.மீ. எரி குழம்பாக உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

6) ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்

ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்



கங்கைக்கு திரிபதகை என்றொரு பெயரும் உண்டு.

மூன்று உலகங்களிலும் பாயும் நதி எனப்பொருள்.

ஆகாயத்தில் பாய்ந்து திரிந்த கங்கையானது பூமியில் இறங்கியது.  இறங்கிய வேகத்தில் பாதாளத்திற்குள்ளும் பாய்ந்து சென்றது.  இதனால் ஆகாயம், பூமி, பாதாளம் என மூன்று உலகிலும் பாயும் நதி என்பதால்  இதற்குத் திரிபதகை என்றரொரு பெயரும் உண்டு.

புகழ்ப் பாடல்களில் கங்காகுலதிலகர் என்றோ, திரிபதகை குலசேகரர்/வங்கிசத்தார்  என வருவதும் இங்கே காண்க.


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகள்

 


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன்.

1) 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் விழுந்தது,
பலகாலம் கழித்து அதே இடத்தில்
2) 300-420 கி.மீ. விட்டம் கொண்ட கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்தது.
பலகாலம் கழித்து அந்தமான் அருகே
3) தமிழகத்தின் பரப்பளவிற்குச் சமமான நிலத்திட்டு பிரண்டு விழுந்து பெரும் சுனாமி உண்டாகி தென்னிந்தியாவை அழித்தது.

கங்கன் விழுந்த காரணத்தினால்,
1 அ) உலகிலேயே அதிகமான, உயரமான மலைச் சிகரங்களைக் கொண்ட இமயமலைத் தொடர் உருவானது,
1 ஆ) உலகிலேயே அகலமான கடல்பகுதி உருவானது,
1 இ) உலகின் பரப்பளவில் 29% பகுதியே நிலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 71% நிலப்பகுதிகள் காணாமல் போனது,
1 ஈ)  29% நிலப்பகுதி கண்டங்களாகப் பிளவு பட்டு, இடப்பெயர்ச்சி அடையத் துவங்கியது,
1 உ) உலகிலேயே நீண்ட மலைத்தொடர் அமெரிக்கக் கண்டத்தில் உருவானது,
1 ஊ) உலகிலேயே நீண்ட “ ring of fire “ எரிமலைத் தொடர் உருவானது,
1 எ) பூமியின் கனஅளவு கூடியுள்ளது.


கங்கை விழுந்த காரணத்தினால்
2 அ) உலகிலேயே பெரும் பாலைவனங்கள் உருவானது.
2 ஆ) உலகிலேயே ஆழமான தக்களமேகன் பாலைவனம் உருவானது
2 இ) கங்கன் விழுந்த காரணத்தால் உண்டான (2000 கி.மீ. விட்டம் கொண்ட) பள்ளதாக்கின் பெரும் பகுதி மேடானது.
2 ஈ) உலகிலேயே ஆழமான கடல் பகுதிகள் உருவானது.
2 உ) இந்தோனேசியா சப்பான், துருக்கி முதலான சவடுமண் நிலப்பரப்புகள் உருவானது,
2 ஊ) ஏழு பெரும் நதிகள் உருவானது,
2 எ) உலகில் உள்ள மடிப்பு மலைகள் தோன்றியது.
2 ஏ) கடல் நீரின் அளவு கூடியது, கடல் உப்பு நீரானது.
2 ஐ) சிம்சுமாரம், ஆமை, முதலை முதலான உயிரினங்கள் பூமியில் இறங்கியது,
2 ஒ) உலகெங்கும் வண்டல்மண் திட்டுக்கள் உருவானது,

பெரும் நிலப்பரப்பு பெயர்ந்து விழுந்த ( அந்தமான் அருகே பிரளயம் ஏற்பட்ட ) காரணத்தினால்,
3 அ) மதுரையை மையமாகக் கொண்டு பெருஞ் சுனாமி தென்னிந்தியாவைத் தாக்கி அழித்தது,
3 ஆ) பண்டைய மதுரை அழிந்தது, குமரிக்கோடு அழிந்தது,
3 இ) நாகமலை பசுமலை உருவானது
3 ஈ) சிவகளை மலை உருவானது
3 உ) தென்னிந்தியா தக்கான பீடபூமியாக மாறியது
3 ஊ) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வண்டல்மண் படிந்தது
3 எ) பிரளயப் பிளவுப் பாறைகள் உருவானது
3 ஏ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் முழுவதும் bedding sedimentary திட்டுகள் உருவாகியுள்ளது
3 ஐ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள குன்றுகளின் உச்சியில் எல்லாம் பொக்குப்பாறைகள் உருவாகி இருப்பது,

மேற்கண்ட காரணிகளை புராணத்தின் அடிப்படையில் விளக்கினால், விளக்கக் கோட்பாட்டில் பிழைகள் இருக்காது.  எனவே வரும் நாட்களில், மேற்கண்ட காரணிகளுக்கான விஞ்ஞானிகளின் கோட்பாடுகளில் காணப்படும் பிழைகளை மட்டும் சுட்டிக்காட்டி இந்த மூன்று இழைகளையும் தீபாவளியோடு முடித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
..........................................

கங்கன் என்ற சொல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
வில்லிபாரதத்தில் இடம் பெற்றுள்ளது..

துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி - அகம் 44/8

உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய - வில்லி:21 34/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் - வில்லி:22 22/1
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/1,2
நன்றி - http://tamilconcordance.in/

.................................................

Hari Krishnan to mintamil
25 Jun 2015, 12:05:45
விராட பர்வத்தில் தர்மபுத்திரன் புனைந்த பெயர் கங்கன்.  ஆனால் அதன் உச்சரிப்பு Kanka.  கங்க என்பது கழுகு, பருந்து, கருடன் எல்லாவற்றுக்கும் வழங்கி வரும் பெயர்.  கருடவாகனன் என்பதால் கங்கன் என்கிறார். 
..........................................