ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

Theory of formation of Himalayas இமயம் தோன்றியது எப்படி? பூமியில் கல் தோன்றியது எப்படி?

Theory of formation of Himalayas
இமயம் தோன்றியது எப்படி?
பூமியில் கல் தோன்றியது எப்படி?

தமிழ் இலக்கியங்களில் இமயமலை பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன.  இமயமலையானது பெருங்கல் எனவும், அதன் மேல் பனி படர்ந்துள்ளது எனவும், அது சக்கரவடிவில் உள்ளது என்றும் குறிப்புகள் உள்ளன.

1) இமயமலையில் பனி படர்ந்துள்ளது
என்பதை அகநானூறு பதிவு செய்துள்ளது.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் 
(அகநானூறு, 211:7-8)
2) இமயமலையின் வரை (விளிம்பு, rim) நேமி (சக்கரம்) வடிவில் ஆனது எனக்

கம்பராமாயணம் பதிவு செய்துள்ளது.
"நேமிமால் வரை " - கம்பராமாயணம்.

3) இமயமலை கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது என்ற கருத்தைப் புறநானூறும் மதுரைக் காஞ்சியும் ஒரே சொற்களால் பதிவு செய்துள்ளன.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71)
4) இமயமலையானது சிலம்பு வடிவில் உள்ளது

என்கிறது திருவிளையாடற் புராணத்தின் ஒரு பாடல்.
“கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு.”
5) இமயமலையானது ஒவ்வொரு
ஊழிக்காலத்திலும் உயர்கிறது என்கிறது திருவிளையாடற் புராணத்தின் மற்றொரு பாடல்.
“புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.
-------------------------








1) கங்கன் என்ற 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத்தொடர் உருவாகியுள்ளது.
2) கண்டங்கள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளன.
3) பூமியின் மேற்பரப்பில் சுமார் 30 சதம் நிலப்பரப்பே மட்டுமே தங்கியுள்ளது..
4) கங்கன் விழுந்த இடத்திற்கு நேர்எதிரே ring of fires உருவாகியுள்ளது.

5) பூமியின் பரிமாணம் மற்றும் எடை கூடியுள்ளன.


6) கங்கன் விழுந்த இடத்திற்கு நேர்எதிரே ring of fires  உருவாகியுள்ளது.
கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிய காரணத்தினால் இமயமலை தோன்றியுள்ளது.  பூமியில் உள்ள மிகவும் கடினமான கிரானைட் பாறைகள் எல்லாம் கங்கன் விழுந்தபோது தோன்றியவையே.  இதுவே பூமியில் "கல் தோன்றிய காலம்" என்பது எனது கருத்து.

“கங்கை அபரிமிதமான வேகத்துடன் பூமியில் இறங்கியுள்ளது.   அவ்வளவு வேகத்துடன் இறங்கிய கங்கை என்ற விண்ணீராலும் இமயமலையை அடித்துச் செல்லமுடியவில்லை” என்கிறது கங்கா புராணம்.  எனவே, இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது என்றும் அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான  அறிந்து கொள்ளலாம்.

இமயமலைத் தொடரில் (rim) உண்டாகும் எந்தவொரு நிலநடுக்கமும் ஆழமாக பகுதியில் இருந்து ஏற்படவில்லை.  

இமயமலையின் அடிப்பகுதி கங்கன் விழுந்ததால் உண்டானது.  இது கங்கை என்ற விண்ணீர் வேகமாக விழுந்தபோதும் நடுங்காமல் நின்றது.
இமயமலையின் மேற்பகுதி கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த களிமண் மற்றும் சவடுமண்ணால் ஆனது.  இது இமயமலையின் மீது போர்வைபோல் முடியுள்ளது.  இந்தப் பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கம் உண்டாகிறது.
இந்தியா பிளேட் திபெத்துடன் மோதுதலால் நிகழவில்லை.

பூமியில் உள்ள மிகவும் கடினமான கிரானைட் பாறைகள் எல்லாம் கங்கன் பூமியில் விழுந்தபோது தோன்றியவையே. இதுவே பூமியில் "கல் தோன்றிய காலம்" என்பது எனது கருத்து.
கங்கன் மோதியதால் உண்டானது இமயமலை. கங்கன் மோதியதால் பூமியின் மேற்பரப்பு கண்டங்களாகப் பிளவு பெற்று கண்டப் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா பெயர்ந்து செல்லவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கா பிரிந்து சென்றுள்ளது.  ஆப்பிரிக்காவும் அமெரிக்காவும் பிரிந்து சென்றுள்ளன.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

சனி, 10 பிப்ரவரி, 2018

தரணி ஆண்ட தமிழர்


தரணி ஆண்ட தமிழர் 

தடாதகை, தரணி ஆண்ட தடாதகைத் தாய்

அன்னை தடாதகையும்,  பண்டைத் தமிழ் மன்னர்களும் பாரத தேசம் முழுமையையும் ஒரு குடையின் கீழ் அரசாண்டுள்ளன.





“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல.”          ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
 தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
 குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
 குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
 …….       …….         …….       …..
 உருவும் புகழு மாகி விரிசீர்த்
 தெரிகோன் ஞமன்ன் போல ஒருதிறம்
 பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!”              ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும், மதுரைக்காஞ்சியில்,

“தென்குமரி வடபெருங்கல்
 குணகுட கடலா எல்லைத்
 தொன்று மொழிந்து தொழில்  கேட்ப”  ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் கூறுவதனால் தமிழரே தரணியை ஆண்டுள்ளனர் என்பது உறுதி ஆகிறது.  

மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியாம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
தமிழரின் வீரம் போற்றுவோம்,
தமிழரின் விவேகம் போற்றுவோம்,
தமிழர் தரணியை ஆள்வோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
---------------------------------------------------------------------
குடகடலை ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?

கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும்.
என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.


இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

Theory of Tsunamis, சுனாமி, கோளப் பாறைகள்


திண்டுக்கல்லில் இருந்து தாண்டிகுடி செல்லும் மலைப்பாதையில் உள்ள பாறைகளை வெட்டி யெடுத்துச் சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இந்தப் பாதை வழியாக கடந்த 21 மே 2017  தாண்டிகுடி செல்லும் போது படத்தில் உள்ள பாறைகளை கண்டேன்.  

இவ்வகையான பாறைகள் பற்றி பல்வேறுவிதமான அறிவியல் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  

ஆனால் இந்தப் பாறைகள்,  பெரும் கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) உண்டான களிமண் அல்லது சவடு மண்ணினால் (Tsunami deposited clay) உருவானவை என்பது எனது கருத்து.  

பண்டைக் காலத்தில் பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்தையும் குமரிக் கோட்டையும் பண்டைய பாண்டிய நாட்டையும் அழித்த  மாபெருஞ் சுனாமியினால் பெருமளவு கடல்சவடு அல்லது கடல்களிமண் அடித்து வரப்பட்டுள்ளது. சுனாமியின் போது இத்தகைய கடல்களிமண் நிலத்தில் பரவும் போது ஏதோ சில பொருட்கள் கடல்களிமண்ணைத் தடுத்துள்ளன.   பல காலத்திற்குப் பின்னர் இவைகள் பாறைகளாக மாறியுள்ளன.  

எனது இந்தக் கருத்துகளை அறிவியில் அடிப்படையில் ஆராய்ந்து நிறுவிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.




வியாழன், 1 பிப்ரவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (9) பழனி - திண்டுக்கல் சாலையில், விருப்பாச்சி அருகே

  Theory of Tsunamis

பண்டைத் தமிழகத்தைக் 

கடல்கொண்டதன் 

(சுனாமியின் )  சுவடுகளா இந்தப் பாறைகள் ?


பழனி - திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள மலையை வெட்டி சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இங்கே கடினமான பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் சேர்ந்து உள்ளதைக் காண முடிகிறது.  இந்தப் பொக்குப்பாறைகள் சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண் அல்லது சவடுமண்ணால் உருவானது என்பது எனது கருத்து.


.


பண்டைத் தமிழகத்தைக் கடல்கொண்டது எனத் தமிழ் இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன.  திருவிளையாடற் புராணம் கடல்வெள்ளத்தின் (சுனாமியின்)  தாக்கத்தைத் தெளிவாக விரிவாகக் கூறுகிறது.

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும் 
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப் 
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில் 
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

திருவிளையாடல் புராணம் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம் 
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி 
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப் 
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்