Thiruvillayadal Puranam is narrating about Tsunamis. In this blog, I am giving some extracts of the puranam and explaining in details with Google Map and my photos.
பண்டைத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டைத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 6 மே, 2018
பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர், இந்தியாவை ஆண்ட தமிழர்
பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர்
இந்தியாவை ஆண்ட தமிழர்
1)
மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன் மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.
2)
“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல்.” ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.
3)
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமனன் போல ஒருதிறம்
பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!” ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும்,
4)
மதுரைக்காஞ்சியில்,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப” ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர்.
இந்தியர் என்றால், இந்துக்கள். இந்து என்றால் சந்திரன், பாண்டியர் சந்திரகுலத்தவர். இந்தியர்கள் என்றால் பாண்டியர் என்று பொருள்.
பண்டைத் தமிழர்போன்று, பாரதம் முழுமையையும் தமிழர் ஆள வேண்டும்.
----------------------------------
குடகடலை (அரபிக்கடலை) ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?
கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் அதிகம் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும், என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.
இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



