ஊரும் பேரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரும் பேரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூலை, 2025

reasons for the names of ''Aala-vaai'' and ''Alai-waai''

The consecration of the temple of Subban @ Subramanian taken place on 7th Jul 2025.

On these auspicious days, shall we examine the reasons for the names of ''Aala-vaai'' and ''Alai-waai''. "Thiru-Aala-vai" is a name of Madurai.  "Thiru-Cheer-Alai" is a name of Thiruchendur.




"Aala-waai" - the tamil word 'Aalam' means the Sea.  the tamil word 'Vaai' means mouth. A Huge Tsunami occurred in the Bay of Bengal, in the east of the Pandyan country.  That Tsunami destroyed the Ancient Madurai. The soil carried by the Tsunami was deposited, and Nagamalai mountain range was formed in the west of Madurai. Because the Sea-flood (Aalam) opened its (waai) mouth, the Tamils ​​had named the City Madurai as "Aala-waai". The epithet "Thiru" is added to form the name Thiru-Aalaa-waai.




The Huge 'Tsunami waves’ formed in the ocean have crashed near Tiruchendur. Because of that reason, the Tamils ​​have given name to this place as “Alai-waai”.  'Thiru' has been added, and name became as  'Thiru-cheer- alaai-waai'. The soil carried by this Huge Tsunami has deposited as a long sedimented hills in the northwest of Tiruchendur. That hill is named as "Shiva-kalai hills".

The name Thiruvalavai for Madurai, and the name Thiruchiralaiwai for Tiruchendur are causal names. The Tamils ​​are clearly aware of the  Tsunami, and its causes. The names ''Aala-waai", "Alai-waai" are geographically based causal names.

Let us praise Aala-waai @ Madurai and the Nagamalai hills.

Let us praise Shiva-kali Hills, and the Alai-waai @ Thiruchendur.

Let us praise the ancient Tamils,

Let us praise the archaeologists.

Further explanation is in the link with images.

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/03/blog-post.html

ஞாயிறு, 8 மார்ச், 2020

திருவாலவாய் திருச்சீரலைவாய் பெயர்க்காரணம் - ஊரும் பேரும்

ஆலவாயும் அலைவாயும்
(திருவாலவாய் , திருச்சீரலைவாய் - பெயர்க்காரணம் )

அப்பன் சோமசுந்தரபாண்டியன் ஆளும் மதுரைக்குத் திருவாலவாய் (திரு ஆலவாய்) என்றொரு பெயரும் உண்டு.  அப்பன்மகன் சுப்பனான  உக்கிரபாண்டியன் ஆளும் திருச்செந்துருக்குத் திருச்சீரலைவாய் (திருச்சீர் அலைவாய்) என்றொரு பெயரும் உண்டு.  இவை இரண்டும் காரணப் பெயர்கள் ஆகும்.

பிரளயம் - பிரளயம் என்றால் அயனங்கள் பிரள்வது அல்லது பெரும் நிலச்சரிவு என்று பொருள்.  கடலிலுள்ள பெரும் நிலத்திட்டுகள் சரிந்து விழுகின்றன.  இதனால் கடல்நீர் அடித்துச் செல்லப்பட்டுக் கடல்கோள் (பெருஞ் சுனாமி, Tsunami) உண்டாகிறது.


----------------------------------------------------------------
ஆலவாய் - 
பாண்டிய நாட்டிற்குக் கிழக்கே உள்ள வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்துள்ளது.  கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட மண் படிந்து, மதுரைக்கு மேற்கே நாகமலை உருவாகியுள்ளது.  கடல்வெள்ளம் (ஆலம்) வாய்வைத்த காரணத்தினால், இத்தலத்திற்கு “ஆலவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர்.  திரு என்ற அடைமொழி சேர்ந்து திருவாலவாய் என்று பெயராகியுள்ளது.




-----------------------------------------------------------------------------

அலைவாய் -  
வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) உண்டாகிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளது.  கடல்கோளில் உண்டான ‘கடலலைகள்’ திருச்செந்தூர் அருகே மோதித் தாக்கியுள்ளன.  கடலின் அலைகள் வாய் வைத்த காரணத்தினால் இத்தலத்திற்கு “அலைவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர்.   திரு என்ற அடைமொழி சேர்ந்து திருச்சீரலைவாய் என்று பெயராகியுள்ளது.  இந்தக் கடல்வெள்ளத்தினால் (சுனாமி) அடித்துவரப்பட்ட மண் படிந்து, திருச்செந்தூருக்கு வடமேற்கே சிவகளை மலைகள் உருவாகியுள்ளன.  




மதுரைக்குத் திருவாலவாய் என்ற பெயரும், திருச்செந்தூருக்குத் திருச்சீரலைவாய் என்ற பெயரும் காரணப் பெயர்களாகும்.   பிரளயம் கடல்கோள் கடல்வெள்ளம் (சுனாமி, Tsunami) ஆழிப்பேரலை பற்றியும் அதனால் உண்டான புவியில் மாற்றங்கள் பற்றியும் தெளிவாகத் தமிழர் அறிந்திருந்து உள்ளனர்.    ஆலவாய் அலைவாய் என்ற பெயர்கள் புவியியல் அடிப்படையிலான காரணப் பெயர்களாகும்.

நாகமலைத்தொடரிலும், சிவகளை மலைத்தொடரிலும் தமிழரின் தொன்மையான வாழ்வியல் எச்சங்கள் புதைந்து கிடக்கின்றன.  இவற்றைத் தோண்டிக் கண்டறியும் தொல்லியலாளரைப் போற்றுவோம்.

நாகமலை சிவகளை போற்றுவோம்,
ஆலவாய் போற்றுவோம்,
அலைவாய் போற்றுவோம்,
தொல் தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 26 (09.03.2020) திங்கள் கிழமை.








ஞாயிறு, 18 மார்ச், 2018

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?


சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?



நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1].  பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர்.  இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும்,  மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.

கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல.  அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.

இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும்,  மீண்டும்  
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.

பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன்.  பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.

இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது, 
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.

பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில்  54 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

1)      கடலூர்
2)      கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
கொண்ட சமுத்திரம்  Kondasamudram కొండసముద్రం Andhra Pradesh 523113 (No lake)
3)      செக சமுத்திரம்,  Jakka samudram 636805, Dharmapuri
செக சமுத்திரம்,   Jakkasamudram జక్కసముద్రం Andhra Pradesh 515231
4)      வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri (0.75m lake)
5)      பாலசமுத்திரம்  Bala samudram 624610, Dindigul Dist (0.75m lake )
பாலசமுத்திரம் Balasamudram Tamil Nadu 641664 (No lake)
பாலசமுத்திரம்  Balasamudram, Hanamkonda, Telangana 506001 (2.0 km lake)
பாலசமுத்திரம்  Balasamudram బలసముద్రం Andhra Pradesh 515571 (No lake)
பாலசமுத்திரம் Palasamudram పాలసముద్రం Andhra Pradesh 515241 (600m lake)
6)      சமுத்திரா பட்டி,  Samudrapatti 624402, Dindigul Dist (No lake)
7)      கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist (No lake)
8)    ரெங்க சமுத்திரம், Rangasamudram Sathyamangalam, Tamil Nadu 638402, Erode Dist (No lake, Bhavani river bank)


முத்து சமுத்திரம்  Muthusamuthiram Tamil Nadu 642201 (No lake)
ரெங்க சமுத்திரம்  Rangasamudram Tamil Nadu 641662 (No lake)
ரெங்க சமுத்திரம் Rangasamudram రంగసముద్రం Andhra Pradesh 517370 (No lake)
ரெங்க சமுத்திரா Rangasamudra ರಂಗಸಮುದ್ರ Karnataka (No lake, forest)
9)      திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist (No lake, near river, near sea)
திம்ம சமுத்திரம் Thimmasamudram తిమ్మసముద్రం Andhra Pradesh 523185 (No lake, near sea)
10)   எல்.என்.சமுத்திரம்,  L.N.Samudram 639002, Karur Dist
சமுத்திரம், Samudram, Tiruvannamalai, Tamil Nadu (No lake, near  Tiruvannamalai mountain) 
சமுத்திரம், Samudram Tamil Nadu 636306, (No lake, )
ஜலகண்டபுரம் Jalakandapuram Tamil Nadu 636501 (No lake)
ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ஒரே பெயரில் ஊர்கள் உள்ளதைக் காண முடிகிறது.  இன்னும் கூடுதலாகத் தேடிப் பார்க்க வேண்டும்.

11)   வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12)   கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13)   வில்லந்திட சமுத்திரம்,  Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14)   பூமா சமுத்திரம்,  Bomma samudram 637001, Namakkal Dist
15)   மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16)   நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17)   அப்பம்மா சமுத்திரம்,  Appama samudram 636108, Salem Dist
18)   சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19)   கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20)   சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21)   சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22)   திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23)   தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24)   ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25)   பாலசமுத்திரம்  625512
26)   திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27)   திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28)   சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29)   மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30)   பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31)   தாண்டவசமுத்திரம்  Thandava samudram 604151, Villupuram Dist
32)   அப்பம்மாசமுத்திரம் 616108
33)   அம்பா சமுத்திரம்  Amba samudram 627401, Tirunelveli Dist
34)   அம்பா சமுத்திரம்  Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
35)   தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36)   கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37)   இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38)   இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
நீலகண்ட சமுத்திரம் (பாலமடை)

39)   கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40)   கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41)   இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42)   கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43)   வடமலை சமுத்திரம், Vadamalai samudram  628907 Thoothukudi Dist
44)   வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45)   சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46)   சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47)   கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48)   காம சமுத்திரம்,  Kamma samudram 632319, Vellore Dist
49)   சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50)   திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51)   வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52)   மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53)   சங்கம்மாசமுத்திரம் 636113
54)   கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55)   நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)

கடலூரையும் சேர்த்து மொத்தம் 55 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
kalairajan26@gmail.com

1) காமசமுத்திரம் ஏரி உள்ளது . இது கோலார் மாவட்டம் பங்கார்பேட் ஜங்ஷன் அடுத்துள்ள சிறிய ஊர்

2) சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம்,  வளருருவாக்கம்,  புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களாக இருக்கலாம்.
நன்றி = பழைமைபேசி அவர்கள், மின்தமிழ் 
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/en3pO8R0BwAJ

3) தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது நீலகண்ட சமுத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).  4) மைசூரில் சிவசமுத்திரம்,  திருக்குற்றாலத்தில் பொங்குமா கடல்
நன்றி = நா.கணேசன் அவர்கள், மின்தமிழ்  5) தொழுவூர் அருகே சிறுகடல் உள்ளது.
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/gzux2kYmCgAJ




[1] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_7.html
[2] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_17.html