படிமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மார்ச், 2018

Theory of Tsunamis மணவூரில் ( கீழடியில் ) கிடப்பது கல்லா ? கல்மரமா ?

 Theory of Tsunamis
கல்லா ? கல்மரமா ? (is it a tree fossil ?)

மாசி 24, (08 மார்ச் 2018) வியாழக் கிழமை, நண்பர்களுடன் கீழடி அருகே ( பண்டைய மணவூரில் ) தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடத்தைச் சென்று பார்த்து வரும் வாய்ப்புக் கிடைத்தது.
அகழாய்வு நடைபெற்ற குழிகளை எல்லாம் தடம் தெரியாமல் மூடியிருந்தனர். அடுத்த கட்ட ஆய்வுகள் இன்னும் துவங்கப்படாத காரணத்தினால் அங்கே யாரும் இல்லை.
திரும்பும் போது, அருகில் இருந்த முனீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம். அங்கே இருந்த ஒரு கல் மட்டும் எங்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து கவனத்தை ஈர்த்தது.

கல்லா ? கல்மரமா ?

வருடாந்திர வலையத்தைச் (annual rings) சரியாகக் காணமுடியவில்லையே? என்றேன். எல்லா மரங்களுக்கும் வருடாந்திர வலையம் தெரியாது என்றார் நண்பர்.

Keeladi Manavoor Sri Munieswarar temple



மதுரையைத் தாக்கி அழித்த கடல்வெள்ளம் (சலதி வெள்ளம், ஆழிப் பேரரை, சுனாமி, Tsunami ) பண்டைய பாண்டிய சேர சோழ நாட்டில் இருந்த தருக்கள் அனைத்தையும் சாய்த்து கொத்தி எடுத்து எல்லாத் திசைகளும் அதிர்த்து எறிந்தது எனத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும் 
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப் 
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில் 
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

திருவிளையாடல் புராணம் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம் 
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி 
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப் 
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

புதன், 24 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (7) வேடசந்தூர் அய்யலூர் சாலையில், வேடசந்தூர் அருகே

Theory of Tsunamis  
அய்யலூர் அருகே உள்ள இது 
கல்லா? மரமா? கல்மரமா?

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.


வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே இந்தப் பாறையை ஆனி 28 (12 ஜுலை 2017) புதன் கிழமை காலையில் பார்த்தேன்.

இது பார்ப்பதற்கு ஒரு மரத்தின் படிமம் போல் எனக்குத் தோன்றியது.  நான் பாதயாத்திரையின் போது படங்கள் எடுத்த காரணத்தினால் மற்ற யாத்திரிகள் எல்லோரும் எனக்கு முன்னே சென்றுவிட நான் மட்டும் காலதாமம் ஆகிவருவதை அறிந்து மற்றபிற யாத்திரிகர்கள் எனக்கு அடிக்கடி அலைபேசியில் பேசி என்னை விரைந்து வருமாறு அழைத்தனர்.  அதனால் நேரமின்னை காரணமாகவும், மண்ணைத் தோண்டிப் பார்க்கும் வகையிலான ஆயுதங்கள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தினாலும் என்னால் இந்தப் படிமத்தின் மறுபக்கத்தைத் தோண்டிப் பார்த்துக் கண்டறிய முடியாமல் போனது. 



இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும்.  இவ்விரண்டையும் கண்டறிந்தால் மட்டுமே இது ஒரு மரத்தின் படிமம் என்பதை உறுதி செய்ய இயலும்.



பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள “தொப்பசாமி மலையில் “ பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ  கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

அன்பன்
கி.காளைரசான்