மணவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜூலை, 2018

இராமாயணம், மகாபாரதம் குறிப்பிடும் கபாடபுரம் மற்றும் மணலூர்

கீழடி அல்ல, இது ஆலவாய் அருகில் உள்ள மணலூர்.  மணலூருக்கு அர்ச்சுணன் வந்தான் என்கிறது மகாபாரதம்.

மகாபாரதத்தில் குமரிக்கோடு, மகேந்திரமலை, கவாடபுரம், மணலூர், ஆலவாய், மதுரை பற்றிய குறிப்புகள்.

Reference to Kavatapuram in Valmike Ramayana
"Pandya" "Dramind", "Manalur"
in the Mahabaratha

Page 7

Kumari was a great Thirtha resorted to by all. Sri Hanuman crossed over to Lanka from this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

चित्रसानुनगः श्रीमान् महेन्द्रः पर्वतोत्तमः।
जातरूपमयः श्रीमान् अवगाडो महार्णवम्॥ Kishkinda Kanda Ch. 41 St. 21.
(Citrsanung ḥ   shreemaan mahendr  parvatottamah)
(gyaaraaroopamayah shreemaan aghagaado mahaarnavam.)

This was the Second Sangam Age. The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in Sri Valmiki Ramayana (supra).

The Second Deluge.
Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean. Once more the Pandyas had to go further north and found a new capital. This time it was at Manalure. This was the city so constantly referred to in the Mahabaratha. References in the Mahabharata. The references to * Pandya" "Dramida", " Manalure" etc. in the following excerpts from the Mahabaratha are interesting.

समुद्र तीरेण शनैः मणलूरं जगामह ।  Adhi. 235–St. 20.
(samudr teere shanaih  samudr teere shanaih)

दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम् ।
ततोरत्नान्युपादाय पाण्ड्यस्यविषयं ययौ ॥Sabha 33-St. 20.
(dooten Tarācā cōḻaṉ vijitatrāmittaram)
(Ttortnanyupaday  Pāṇyasyaviṣayaṁ yayau.)

पाण्ड्यं द्रमिडराजानं श्वशुर मलयध्वजम् ।
सदूतैस्तं वशेकृत्वा मणलूरेश्वरं तदा ॥Sabha 33-St. 29.
(Paandyan  Dramiḍa rājānaṁ   Śvaśuraṁ  Malayadhvajam.)
(Sootasantan  Vaśēkr̥tvā  Maṇalūr ēśvaraṁ  tada)

ताम्रपर्णीं ततो गत्वा कन्यातीर्थमतीत्य च ।
दक्षिणां च दिशं सवाँ विजित्य कुरुनन्दनः ॥ Sabha 32-St. 75.
(Taamraparnee  Tatō  gatva  Kan'yātīrthamatīya   ch.)
(dakshinaan ch dishan   savau shijisy Kurunandanaḥ  )

Page 8

सतं (अगस्त्यालय) प्रदक्षिणं कृत्वा मलयं भरतर्षभ।
लङ्घयित्वा तु माद्रेयः ताम्रपर्णीं नदीं शुभाम् ॥ Sabha 33–St. 31.
(sant (agastyaalay) pradakshinan krtva Malayan  bharatarshabh.)
(langayitva  maadreyah taamraparnee nardee shubhaam)

The Maritime Greatness of the Pandyas.
It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya’ and the river was crossed by him. Note these words अतीत्य च (aadity ch) in the above excerpt; and then he goes and conquers the country further south also- दक्षिणाञ्च दिशंगत्वा (dakshinaanch dishegatva )  etc., going further south after crossing the Kumari. This was the Third Sangam age. How long was their capital situate in Manalure it is difficult to say. But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from and rechanged to this place more than once. Or it may be quite possible there might have been more than one city of that name There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital. There is another Manalure near Tinnevelly, and which Sri. P. V. Jagadeesa Iyer states was the Pandyan Capital. But the references to Arjuna having reached Manalure समुद्रतीरेण शनैः (samudrateeren shanaih)  make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas' Capital. Or could Manalure and Alaivai" be one and the same city? Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata. The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils.

i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்.
ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
(ஆனி 28 (12 சூன் 2018) வியாழக் கிழமை.)

http://thiruvilaiyadalpuranam.blogspot.com/2018/07/blog-post_12.html

சனி, 7 ஜூலை, 2018

இராமாயணம் கிசுகிந்தா காண்டத்தில் மணவூர் பற்றிய குறிப்புகள்

இது கீழடி அல்ல,
மணலூர் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பெறும் ஆலவாய் என்ற மதுரை.

கிஸ்கிந்தா காண்டத்தில் பாண்டியர், திராமிட, மணலூர் பற்றிய குறிப்புகள்.









Page 7
Kumari was a great Thirtha resorted to by all.  Sri Hanuman crossed over to Lanka form this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

..... .... .....
..... .... .....
                        Kishkinda Kanda Ch.41 St.21
This was the Second Sangam Age.  The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in sri Valmike Ramayana (supra).

The Second Deluge.
            Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean.  Once more the Pandyas had to go further north and found a new capital.  This time it was at Manalure.  This was the city so constantly referred to in the Mahabaratha.

References in the Mahabharata.
            The references to "Pandya" "Dramind", "Manalur" etc.  in the following excerpts from the Mahabaratha are interesting.

..... .... .....
                        Adhi.235-st.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.29

..... .... .....
..... .... ..... 
                         Subha 32-St.75




Page 8
..... .... .....
..... .... .....
                        Subha 33-St.31

The Maritime Greatness of the Pandyas.
            It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya' and the river was crossed by him. Note these words "........" in the above excerpt; and then he goes and conquers the country further south also - ....... ......etc., going further south after crossing the Kumari.  This was the Third Sangam age.  How long was their capital situate in Manalure it is difficult to say/  But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from the re-changed to this place more than once.  or it may be quite possible there might have been more than one city of that name.  There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital.  There is another Manalure near Tinnevelly,and which Sri. P.V.Jagadeesa Iyer states was the Pandyan Capital.  But the references to Arjuna have reached Manalure "........." make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas'Capital.  Or could Manalure and "Alaivai" be one and the same city?  Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata.  The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils..

            i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்
            ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)

Page 9 .....




சனி, 12 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) மணவூர், மணலூர்,

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2)

பிரளயம் (பெரும் சுனாமி)
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.  இருப்பினும், திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்படாமலேயே உள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து அரிக்கமேடு காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  


இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.  சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.
மணவூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆண்டுவந்தான்.  தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் கண்டுவந்து குலசேகர பாண்டிய மன்ன்னிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் அங்கே சென்று சிவலிங்கத்தை வணங்கி ஆலயத்தைக் கட்டுகிறான்.   ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு நகரை உருவாக்குகிறான்.  இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன?
( பெருஞ் சுனாமி ) கடல்வெள்ளம், பிரளயம், ஊழிக்காலம் என்கிறது திருவிளையாடற் புராணம்.
2004ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதைப்போலப் பலநூறுமடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி ஒன்று பண்டைக்காலத்தில் பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளது.  அந்நிகழ்ச்சி திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அழகுமிக்க அதுலகீர்த்தியும் போன்று, இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, பண்டைய பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர்.  
இவர்களுக்குப் பின்னர் ‘கீர்த்திபூடண பாண்டியன்‘ மன்னன் ஆட்சி செய்துவரும் நாளில், மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது.   கடல்கள் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி வெகுண்டு ஆரவாரித்து, காவலாக விளங்கிய கரையைக் கடந்து தமிழுகத்தை அழித்தன.  இந்தப் பிரளயத்தில்  எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும்  (சக்கரவாளமலை = இயமமலை) நிலைபெயர்ந்தன.  இப்பிரளயம் அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயமும் தோன்றி அளித்தது.  அந்தப்பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய நிலத்திட்டுகளும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன.
ஆனாலும், நீண்ட விழிகளையுடைய மீனாட்சியம்மையின் திருக்கோயிலும், வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை வாவியும், இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் சோலைகளையுடைய இடபமலையும் (அழகர்கோயில்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுவின் உருத்திரிந்த பசுமலையும்,  பன்றிமலையும் இந்தப் பிரளயத்தில் உண்டான கடல்நீரினால் அடித்துச் செல்லப்படாமல் அழியாமல் இருந்தன.
உயர்ந்த  அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து மரங்கள் முறியக்  கல்லி எடுத்து, அதிர்ந்து ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், கடற்கரைகளை எல்லாம் அகழ்ந்துத் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும்,  மலைகளை யெல்லாம் மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், ஊழிக்காலத்தில் தோன்றி பிரளயத்தில் உதித்து எழுந்து வந்தன“ என்கிறது திருவிளையாடற் புராணம்.
     
திருவிளையாடற் புராணம் பாடல்கள் :

“எழில்புனை அதுலகீர்த்தி என இருபத்திரண்டு
வழிவழி மைந்தராகி வையம் காத்த வேந்தர்
பழிதவிர் அதுலகீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்திபூடணன் புரக்குநாளில்

கருங்கடல் ஏழும் காவற்கரை கடந்து ஆர்த்துப் பொங்கி
ஒருங்கு எழுந்து உருத்துச் சீறியும் உம்பரோடு இம்பர் எட்டுப்
பொருங்கல் கரியும், எட்டுப் பொன் நெடுங்கிரியும் நேமிப்
பெரும் கடிவரையும் பேரப் பிரளயம் கோத்தவன்றே.

அப் பெரும் சலதி வெள்ளத்தில் அழுந்தின அழிவிலாத
எப்பெரும் பொழிலும் ஏழுதீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வவான திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறுபட்டனவாக அங்கண்.


“எழில்புனையதுலகீர்த்தியெனவிருபத்திரண்டு
வழிவழிமைந்தராகிவையங்காத்தவேந்தர்
பழிதவிரதுலகீர்த்திபாண்டியன்றன்பாலின்பம்
பொழிதரவுதித்தகீர்த்திபூடணன்புரக்குநாளில்
கருங்கடலேழுங்காவற்கரைகடந்தார்த்துப்பொங்கி
ஒருங்கெழுந்துருத்துச்சீறியும்பரோடிம்பரெட்டுப்
பொருங்கட்கரியுமெட்டுப்பொன்னெடுங்கிரியுநேமிப்
பெருங்கடிவரையும்பேரப்பிரளயங்கோத்தவன்றே.
அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.
தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.
வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்..



( குறிப்பு - படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  இப்படங்களைப் பதிவு செய்தோருக்கு நன்றி)


கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,
9443501912
நாள் - சித்திரை 28 (10.05.2017) வியாழக் கிழமை

சனி, 5 மே, 2018

பரிபாடலில் வைகை ஆற்றுப் பெருக்கு (மணலூர், மணவூர்,பண்டைய மதுரையை அழித்த ஆற்றுப் பெருக்கு ? )

பரிபாடலில் 
வைகை ஆற்றுப் பெருக்கு  


மணலூர் அல்லது மணவூர்,
கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள 
பண்டைய மதுரையை 
அழித்த ஆற்றுப் பெருக்கு ? 

புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்


20. வையை

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
(பரிபாடல்)
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்

பரிபாடல் குறிப்பிடும் இந்த வைகை ஆற்றுப் பெருக்கினால்தான் கீழடி அருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள பண்டைய மதுரை (அல்லது மணவூர்) அழிந்து இருக்குமோ?






அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி.காளைராசன்

வியாழன், 5 ஏப்ரல், 2018

Theory of Tsunamis கடல்கோள் உண்மையா?

Theory of Tsunamis  கீழடி அழிந்தது எவ்வாறு ?   
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?

Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.

கீழே உள்ள படங்களில் மலைகளில் இதே போன்ற மண்படிமங்களைக் காண முடிகிறது.


ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை.  எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.   

“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
 http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide

​வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,

மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
கி.காளைராசன்
----------------------------------------------------------------------

N. Kannan navannakana@gmail.com

07/10/2016
to மின்தமிழ்

2016-10-07 0:29 GMT+08:00 Singanenjam Sambandam <singanenjam@gmail.com>:



இருபுறமும் மலைகள் எனில் , கடல்நீர் உட்புகும் வேகம்  மிக மிக அதிகமாக இருக்கும். ஏன் எனில் கடல் நீர் பரவுவதை மலைகள் தடுத்து விடும்.

​இதைச் சொன்னவுடன் எனக்கொரு திருவாய்மொழி நினைவிற்கு வந்தது:

ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே

​உரை:​

மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம். கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷ்ணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸஹயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”

நன்றி = மின்தமிழ்
---------------------------------------------------------------------------------

செவ்வாய், 27 மார்ச், 2018

Theory of Tsunamis கீழடி அழிந்தது எவ்வாறு ?

 Theory of Tsunamis 
கீழடி அழிந்தது எவ்வாறு ?   
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?

Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.

கீழே உள்ள படங்களில் மதுரைக்கு அருகே கீழடியில் இந்தியத் தொல்லியல்துறையினாரால் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மண்படிமங்களைக் காண முடிகிறது.


ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை.  எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.   

“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
 http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide

​வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,

மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
கி.காளைராசன்

சனி, 17 மார்ச், 2018

Theory of Tsunamis மண்ணுக்குள் மணவூர் (கீழடி)

Theory of Tsunamis பண்டைய மணவூரும் 

இன்றைய மதுரையும்






மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site
மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site


 அன்று “சித்திரா பௌர்ணமி“ நன்நாள். அந்த நன்நாளில், தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் காண்கிறான்.  தான் கண்டதை மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுகொண்டிருந்த மன்னன் குலசேகர பாண்டியனிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் கடம்வனத்திற்குள் செல்கிறான். அங்கே தொன்மையான சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு அதை வணங்குகிறான்.  இந்தச் சிவலிங்கம் உள்ள இடமே பண்டைத் தமிழர் வாழ்ந்த மதுரையம்பதி என்பதை உணர்கிறான். குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட பிரளயகாலத்தில், கடல் வவ்விய மதுரை மாநகரம் இந்த இடத்தில்தான் இருந்துள்ளது எனக் கண்டறிகிறான்.  உடனே கடம்பவனக் காட்டைச் சீராக்கித் தான் கண்ட அந்தச் சிவலிங்கதிற்கு ஆலயம் கட்டுகிறான். ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு அழகிய நகரை உருவாக்குகிறான். மணவூரில் வாழ்ந்த மக்களையும் மற்றும் அனைவரையும் மதுரையில் குடியமர்த்துகிறான். இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும். 
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  பக்தி இலக்கியங்களில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), மணவூர், மதுரை பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்பெற வேண்டியுள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து 1) அரிக்கமேடு 2) காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறிந்துள்ளனர்.
இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
மண்ணுக்கு அடியில் புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் என்ன? “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
இந்தத் தொன்மையான நகரைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் ஏதும் உண்டா? சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.  குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் என்கிறது திருவிளையாடல் புராணம்.
இன்றைய மதுரை மாநகரத்தைத் திட்டமிட்டு உருவாக்கிய குலசேகரபாண்டியனின் தலைநகராக விளங்கிய மணவூரைத்தான் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருவது போற்றுதற்கு உரியன. 
 நக்கீரர் பாடிய பண்டைய மதுரை Ancient Madurai 

“மாடமலி மறுகில் கூடல் குடவயின்” என்று திருமுருகாற்றுப்படையும், “கூடற் குடவயின் பரங்குன்று” என்று அகநானூறும் கூறுகின்றன. அகழ்வாய்வு நடைபெறும் மணவூருக்கு மேற்கே பரங்குன்று (திருப்பரங்குன்றம்) உள்ளது. இதனால் இப்போது அகழ்வாய்வு நடைபெறும் இடமே நக்கீரர் காலத்தில் மதுரையாக இருந்துள்ளது என்பது தெளிவு.நிர்வகி
 மாமதுரை போற்றுவோம், மணவூர் போற்றுவோம், ஆகழ்வாராய்ச்சியாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,  9443501912
நாள் - சித்திரை 27ஆம் நாள் (10.05.2017) புதன் கிழமை.


சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                        
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)

           

149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும்,

(தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின். புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின், பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1 O

மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65

வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20

சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -

சேர மன்னர்களது, ‘சுள்ளி’ எனப்படும் அழகிய பேராற்றினது வெண்மையான நுரைகள் சிதறிப் போகுமாறு, நல்ல தொழில் மாண்புடைய மரக்கலத்திலே யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிப் போகும் நல்ல வளங்கெழுமிய ஊர் முசிறி ஆகும். அதன்கண், ஆரவாரம் எழுமாறு முற்றுகையிட்டு, நடந்த அரிய போரையும் வென்று, அங்குள்ள பொற்பாவையையுங் கவர்ந்து வந்தவன், நெடிய நல்ல யானைப் படையினையும் வெல்லும் போராற்றலையும் உடையவனாகிய செழியன். அவனுடைய கொடியசையும் தெருக்களையுடைய மதுரைமா நகருக்கு மேற்குப்புறத்தே இருப்பது திருப்பரங்குன்றம். பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக்கொடியினை உயர்த்திருப்பது அது. இடையறாத விழாக்களையும் அது உடையது. நெடியோனாகிய முருகனின் அந்தத் திருப்பரங்குன்றின் குண்டு சுனையிலே, வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்ற, இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்கள் தெளிந்த கண்ணிரினைக் கொள்ளுமாறு, நெஞ்சமே! இவளைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக! என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் . 
அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.

https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81

_________________

மதுரை மாநகரத்தின் மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம்.

'' செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி 
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் 
பொருநர்த் தேய்த்த போல்அரு வாயில் 
திருவீற் றிருந்த தீதுதிர் நியமித்து 
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த 
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் 
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் 
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் 
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 
குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று''
(நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை)

(போருக்கு அறை கூவிக் கட்டிய நெடுந்துரம் உயர்ந்த நெடிய கொடிக்கருகே, வரிந்து புனையப்பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்வாரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்ற மற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியை யும் உடைய கூடல் மாநகரத்தின் மேற்கே.

செரு-யுத்தம். பொருநர்-பொருபவர். நியமம்கடைவீதி, மறுகு-வீதி. குடவயின்-மேற்குத் திக்கில்.)

மலையின் அடிவாரத்துக்கருகே விரிந்த வயல்கள் இருக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் செறிந்தவை அந்த வயல்கள் என்பதை அங்குள்ள கரிய சேறு காட்டு கிறது. சேற்றிடையே விரிந்து வாயவிழ்ந்த தாமரை மலர்கள், முள்ளைத் தண்டிலே கொண்ட தாமரை மலர்கள் உள்ளன. கட்டுக் காவலுள்ள இடத்தைப் போலத் தாமரையின் தண்டு, எதுவும் ஏறி வராதபடி முள்ளுடன் இருக்கிறது. மலர்களில் வண்டுக்கூட்டங்கள் தங்கி ஒய்யாரமாக இருக்கின்றன. மாலைக்காலம் வந்து விட்டது. தாமரை மலர்கள் மூடிக் கொண்டன. மெத் தென்ற மலர்ப் படுக்கையில் வண்டுகள் சுகமாகத் துங்கிப் போகின்றன.
(கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.

இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)

https://ta.wikisource.org/wiki/பக்கம்:வழிகாட்டி.pdf/79