மதுரைக்கு வந்த சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரைக்கு வந்த சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2020

நிலவியல் துறை நிபுணர்கள் ஆய்வு துவக்கம்


தமிழகம்கடல் சீற்றங்களால் அழிந்ததா 

கீழடி நகரம்? 

நிலவியல் துறை நிபுணர்கள் ஆய்வு துவக்கம்


தினகரன் நாளிதழ் செய்தி  2020-09-18@ 17:34:38

திருப்புவனம், : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் பழமையான பானைகள், இணைப்பு குழாய் பானைகள், கட்டிடங்கள், தங்க நாணயம், எடை கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.கீழடியில் கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.

டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் 2 ஆராய்ச்சி கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வு பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியில் தரைதளத்தில் இருந்து 13 மீட்டர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்குகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து நிலவியல் துறை ஆய்வாளர் பெருமாள் கூறுகையில்,‘‘சங்கத்தமிழ் வளர்ந்த நகரம் கீழடி.  இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம் பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்ய உள்ளோம்’’ என்றார்.

லேசர் கருவி சோதனை -  கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19ல் தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ளன. வரும் ஜனவரியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக கீழடியில் உள்ள கருப்பையாவின் நிலம் மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் சர்ஃபேஸ் ஸ்கேனர் என்ற நவீன லேசர் கருவி மூலம் நேற்று ஆய்வு பணிகள் தொடங்கின. இந்த லேசர் கருவிகள் தரைமட்டத்தில் இருந்து 500 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618176

----------------------------

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது. 


மேலும, 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.

https://kalairajan26.blogspot.com/2016/10/blog-post.html


அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஆராய்ச்சி அமைப்பாளர்

திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம் 


வியாழன், 3 செப்டம்பர், 2020

மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா? எப்போது வந்தது? எப்படி வந்தது?

மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா?  

எப்போது வந்தது? 

எப்படி வந்தது?


ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?

வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?

அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.

உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.

சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.

தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.  எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!

எப்போது வந்தது? எப்படி வந்தது? என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?


எப்போது வந்தது?

அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர்.  இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.

எப்படி வந்தது?

கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து,  பெரிய உருவம் பெற்று,  சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற  பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும்,  பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன.  பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.

இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின்  உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத  பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.

என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே  அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன.  அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன.  மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது. 

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது.  இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது.  இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது.  இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.


அன்பன்
முனைவர் நா.ரா.கி. காளைராசன்

18 பிப்ரவரி 2013

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மதுரைக்கு வந்த சுனாமியும் அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரைக்கு வந்த சுனாமியும்
அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. அப்பால் உள்ளது. எனவே மதுரைவரை சுனாமி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.     

அரியலூரில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  அரியலூர் கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.  



கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள  டால்மியாபுரத்தில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன.
 
கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள அரியலூர் மற்றும் டால்மியாபுரம் முதலான ஊர்களுக்குக் கடல்கோளினால் உண்டான கடல்வெள்ளம் வந்துள்ளது என்பது உறுதி.   அதே கடல் வெள்ளம் கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள மதுரைக்கும் வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  




பிரளயம் ஏற்பட்டுக் கடல்கோள் உண்டானபோது,  கடல்வெள்ளம் மதுரைவரை வந்ததாகவும்,  கடல்வாழ் சுரிவளை (RASTELLUM CARINATUM)  யைக் கடல்வெள்ளம் அடித்து உதைத்து மதுரையில் உள்ள வாவியில் சேர்த்ததாகவும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சுரிவளையின் படிமங்கள் அரியலூரிலும்  டால்மியாபுரத்திலும் கிடைத்துள்ளன. எனவே முறையான ஆய்வுகள் நடைபெற்றால், மதுரையின் உள்ள தொன்மையான பள்ளமான நீர்நிலைகளில் கடல்கோளின்போது அடித்துவரப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.    

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


1) https://worldfossilsociety.org/2015/09/ariyalur-fossilsrastellum-carinatum/


2) திருவிளையாடற் புராணம் பாடல்கள் 

888.       துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து

வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்

தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை

அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.       காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்

கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்

பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் 

அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.               


3) கூகுள் புவிப்படத்தில் எழுகடல் தெரு

W4CF+66 Madurai, Tamil Nadu


ஞாயிறு, 24 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)


மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 



மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார்.  சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.

இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம்.  கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண்  இறுகிப் பாறையாகி இந்தப்  பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து. 



சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..

பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.

வெள்ளி, 22 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)





“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது” என்கிறது கலித்தொகை .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்” படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்” என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...

தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய” மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
22 மே, 2017 ·

வியாழன், 21 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெரச்சந்திரா என்ற ஊருக்கு அருகே உயரம் குறைந்த சிறுசிறு மலைத்தொடர்களை வெட்டி எடுத்துத் தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளனர். இந்த மலைத்தொடர்களில் உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
கடினமான கிரானைட் பாறைகள் மேலேயும் கீழேயும் இருக்க, இவற்றிற்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களில் சாலையில் செல்லும் போதே எளிதில் நன்றாகக் காணமுடிகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், பெரச்சந்திரா அருகே காணப்படும் மண்படிமங்களும் மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் காணப்படும் மண்படிமங்களும் ஒத்த நிறத்தில் உள்ளன.



ஆந்திராவில் பெனுகொண்டா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
19 மே, 2017 · Karaikkudi

செவ்வாய், 19 மே, 2020

வங்கக் கடலில் உருவான கடல்கோள்


வங்கக் கடலில் உருவான கடல்கோள்



இது மாபெரும் கடல்கோள்...

பன்மலையடுக்கம் அழிந்து இலட்சத்தீவுகளாக மாறிவிட்டன.
கபாடபுரம் அழிந்து டிகோகார்சிகா தீவாக மாறிவிட்டது.
கிழக்குக் கடற்கரையில் (கடலூர் போன்று) வளைவான கடற்கரைகள் தோன்றியுள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள ஆறுகள் எல்லாமும் வழித்தடம் மாறியுள்ளன.
வையை என்ற நதி மறைந்து வைகை என்ற நதி உருவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைமேல் அளவற்ற மண் படிந்து ள்ளது.
விந்தியசாத்பூரா மலைமேல் அளவற்ற மண்படிந்து அதன் உயரம் குறைந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள மண்மலைகள் எல்லாம் இந்தக் கடல்கோளின்போது புதிதாக உருவானவை
---------------------------------------------------------------------

1) வங்கக்கடலில் உண்டான கடல்வெள்ளம் மதுரை மீது வந்தது,  சூரிய கிரகணத்தின் போது சூரியனை இருள் விழுங்கியது போன்று இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1040

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.”


2) பெரிய ஊழிக்காலத்தில் வங்கக்கடல் மதுரைக்கு வந்தது போன்று வைகையை வருமாறு சிவபெருமான் அழைத்தார் என்கிறது திருவிளையாடற் புராணம் பரி நரியாக்கி வைகை அழைத்த படலம் பாடல் எண் 2977.

“கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்”.
-----------------------------------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 7 (20/05/2020) புதன்கிழமை

மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சூளகிரி)
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)


தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?


ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.


இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.   அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

சனி, 6 ஜூலை, 2019

மதுரைக்கு வந்த சுனாமி 10 - மதுரை தொடரிநிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையம்

கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தது உண்மையா?
மதுரையும் கபாடபுரமும் அழிந்தது உண்மையா?

மதுரையைக் கடல்கொண்டது என்பதற்கு 
புவியியல் சான்றுகள் உள்ளதா?

மதுரையை ஸ்மார்ட் சிட்டி (Madurai Smart City) ஆக்கும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  அதன் ஒருபகுதியாக மதுரை மீனாட்சி பேருந்துநிலையத்தை தரமேம்பாடு செய்வதற்காக ஆகழ்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கே எடுத்த படம் இது.









மதுரை தொடரி நிலையம் அருகே உள்ள இந்த இடத்திலிருந்து வைகையாறு சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.  வைகை ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மதுரையில் மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் வண்ணவண்ண நிறத்தில் மண் படிய வாய்ப்புகள் இல்லையே.  எனவே இந்தப் படத்தில் காணப்படும் அடுக்கடுக்ன மண் திட்டுகள்  வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானவை அல்ல. பிரளயத்தில் தோன்றிய பெருஞ் சுனாமியினால் உண்டான கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மதுரையை  அழித்துள்ளது என அறிய முடிகிறது. 

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html



மேலே உள்ள படத்தில் மதுரையில் காணப்படும் மண்அமைப்புப் போன்றே தென்னமெரிக்காவிலும் உள்ளது.  அங்கே அதைச் சுனாமியினால் உண்டானது என்கின்றனர்.


​Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  ​வால்திவ்ய (Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு மதுரையிலும் காணப்படுகின்ற காரணத்தில் மதுரையும் சுனாமியினால் அழிந்துள்ளது என்று அறிய முடிகிறது.



மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
17.06.2019

ஞாயிறு, 26 மே, 2019

மதுரைக்கு வந்த சுனாமி, பகுதி – 4, மதுரையைக் கடல் வௌவியது:

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4)
மதுரையை வங்கக் கடல் வௌவியது:

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி தோன்றி மதுரையை அழிந்தது பற்றித் திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.

பேய்களும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டு இருளில் வங்கக் கடலில் பிரளயம் உண்டானது.  இதனால் நிலம் நடுக்கியது.  வங்கக் கடல் பொங்கி எழுந்தது.  கடல்  அலைகள் அண்டகூடம் முழுதும் ஊடுருவிச் சென்றன. கடல் வெள்ளம் பெருகி ஆரவாரித்து விண்ணுயர எழுந்தது.  மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு பெரிய கரிய மலை போல் அலைகள் தோன்றி எழுந்து வந்தன.
நஞ்சு பொருந்திய வாயினையும், கரிய உடலையும் உடையது இராகு என்னும் பாம்பு.  இந்தக் கொடிய பாம்பானது ஞாயிறுடன் திங்கள் சேரும்போது (சூரிய கிரகணம்) விரைந்து விழுங்கிவிடும்.  அதைப் போன்று, மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது,  மாடங்களையுடைய மதுரையை விரைந்து விழுங்கியது.
வட்டமாகிய ஆமைகளைக் கேடயங்களாகவும், வாளை மீன்களை வாட்படைகளாகவும்,  மகரமீன்களை யானைப் படைகளாகவும்,  பரந்த அலைக் கூட்டங்களைத் தாவுகின்ற குதிரைப் படையாகவும், கடலில் மிதந்த தோணிகளைத் தேர்ப் படைகளாகவும் கொண்டு கடல் அலைகள் தோன்றி எழுந்தன.  வானளவிய கோட்டை மதில் சூழ்ந்த மதுரையின் கிழக்குத் திசையில் உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று பிரளயத்தில் தோன்றிய கடல் வெள்ள அலைகள் வானுயரத் தோன்றி வந்தன.

தொடரும்...

கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmail.com,  9443501912
நாள் – வைகாசி 13 (27.05.2017) சனிக்கிழமை

குறிப்பு - கட்டுரையாளர் தான் படித்த திருவிளையாடற் புராணம் பாடல்கள், நேரில் பார்த்த மண் மற்றும் மலைகளின் அமைப்புகள், கூகுள் புவிப்படங்கள் இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன என்ற கருதுகிறார்.  மதுரை மணவூர் (கீழடி) மற்றும் தமிழகம் முழுமையும் சுனாமியால் அளித்துள்ளன என்ற  கருத்தை இக் கட்டுரையில் பதிவு செய்கிறார்)

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய பிரளயம் கூறும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில.

1037.
பொருங்கடல்வேந்தனைக்கூவிப்பொள்ளென இருங்கடலுடுத்தபாரேமுமூழிநாள் ஒருங்கடுவெள்ளமொத்துருத்துப்போய்வளைந் தருங்கடிமதுரையையழித்தியாலென்றான்.

1038.
விளைவதுதெரிகிலேன்வேலைவேந்தனும்
வளவயன்மதுரையைவளைந்திட்டிம்மெனக்
களைவதுகருதினான்பேயுங்கண்படை
கொளவருநனந்தலைக்குருட்டுக்கங்குல்வாய்.

1039
கொதித்தலைக்கரங்களண்டகூடமெங்குமூடுபோய்
அதிர்த்தலைக்கவூழிநாளிலார்த்தலைக்குநீத்தமாய்
மதித்தலத்தையெட்டிமுட்டிவருமொரஞ்சனப்பொருப்
புதித்ததொத்துமண்ணும்விண்ணுமுட்கவந்ததுததியே.

1040
வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.

1041
வட்டயாமைபலகைவீசுவாளைவாள்கள்மகரமே
பட்டயானைபாய்திரைப்பரப்புவாம்பரித்திரள்
விட்டதோணியிரதமின்னவிரவுதானையொடுகடல்
அட்டமாகவழுதிமேலமர்க்கெழுந்ததொக்குமே.

1042
இன்னவாறெழுந்தவேலைமஞ்சுறங்குமிஞ்சிசூழ்
நன்னகர்க்குணக்கின்வந்துநணுகுமெல்லையரையிரா
மன்னவன்கனாவின்வெள்ளிமன்றவாணர்சித்தராய்
முன்னர்வந்திருந்தரும்புமுறுவறோன்றமொழிகுவார்.

நன்றி
(1) மேலேயுள்ள படமானது இணையத்தில் இருந்து எடுக்கப் பெற்றது. படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி.
(2) திருவிளையாடற்புராணம் பாடல்களை இணையத்தில் பதிவு செய்துள்ள தமிழ்இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
(3) கூகுள் மேப் வழங்கிய புவிப்படத்திற்கு நன்றி.

வியாழன், 7 மார்ச், 2019

கடல்கொண்ட கொடைக்கானல் !

கடல்கொண்ட
கொடைக்கானல் !
பாறைகள் சிதைந்துதான் மண்ணும் மணலும் தோன்றின என்கின்றனர் புவியியல் படித்தறிந்தோர்.

கொடைக்கானலில் உள்ள மண் திட்டுகளைப் பார்த்தால் அங்குள்ள கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைத்து உருவான மண் திட்டுகள் போன்று  தெரியவில்லை.

குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட போது தோன்றிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்து வரப்பட்ட களிமண்தான் கொடைக்கானலில் உள்ள கிரானைட் பாறைகளின் மேல் படிந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது !

கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைந்தா இந்த மண்திட்டுகள் உருவாகி யிருக்கும்,
உங்களது கருத்து என்ன ?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

நீங்கள் தமிழரா?  தமிழரின் தொன்மையைக் காண்பதில் விருப்பம் உள்ளவரா?
சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டமா? அல்லது மதுரை வாசியா?  அல்லது மதுரை - இராமேசுவரம் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா?
ஒரு முறை லாடனேந்தல் சென்று தமிழரின் தொல்லியல் அடையாளங்களைக் கண்டு வாருங்கள்.

தமிழர் தொன்மையான நாகரிகம் உடையவர்கள். பிரளயங்களில் தோன்றிய கடல்வெள்ளங்களிலும் (பெருஞ்சுனாமியிலும்) மூழ்கிப் பிழைத்தவர்கள் தமிழர்கள்.
பண்டைய தமிழகத்தைக் கடல்கொண்டதைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.   பண்டைத் தமிழரது நாகரிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் கீழடி அருகே தொல்லியல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கீழடிக்குக் கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இராமேசுவரம் சாலையோரம் உள்ள லாடனேந்தல் கிராமத்திற்கு அருகே தொடரித் தண்டவாளத்திற்குக் கீழே பாதையொன்று (இரயில்வே கீழ்ப்பாலம்) கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதற்காகப் பூமியைத் தோண்டும் போது, அங்கே சுமார் 15 அடிக்கும் கீழே சுமார் 5அடி அகலத்திற்கும் 4 அடி உயரத்திற்கும் செங்கற் கட்டுமானம் இருப்பதைக் கண்டுள்ளனர்.
கூகுள் புவிப்படத்தில் - https://goo.gl/maps/YF3t6Tf8X8M2

நாங்கள் கடந்த மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை அன்று சென்று பார்த்து வந்தோம்.  அங்கே கிடைத்த சில செங்கற்களையும் பானையோடுகளையும் சுண்ணாம்புக் கட்டிகளையும் எடுத்து வந்தோம்.

செங்கற்கள்
ஒவ்வொரு செங்கற்கல்லும் 25 செ.மீ. நீளமும், ஒருபுறம் 13.5 செ.மீ. அகலமும், மற்றொரு புறம் 11 செ.மீ. அகலமும், 4.8 செ.மீ. உயரமும் கொண்டதாக இருந்தன.




பானைஓடுகள்
ஒருபுறம் கருப்பு நிறத்திலும், மறுபுறம் சிவப்பு நிறத்திலுமான பானைஓடுகள் அங்கே கிடைந்தன.  அங்கே J.G.B. இயந்திரம் தோண்டிக் கொண்டிந்த போது நேரில் பார்த்த நண்பர் ஒருவர் உள்ளே ஒரு முழுப்பானை அப்படியே புதைந்து கிடப்பதை நேரில் பார்த்ததாகக் கூறினார்.




சுண்ணாம்புக் கட்டிகள்
அடுக்கடுக்காக (bedding) முறையில் மணற்திட்டுகள் காணப்பட்டன.  அதில் சுண்ணாம்புக் கட்டிகள் கலந்து மணற்திட்டுகளும் இருந்தன.



குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது, கடல்வெள்ளத்தால் மதுரை அழிந்ததா? லாடனேந்தலில் புதைந்து கிடக்கும் தொல்லியல் தடையங்கள் வழியாக அறிந்து கொள்வது என்ன?

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை.
-----------------------------------------------------------
லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ள பற்றிய தினமலர் நாளிதழில் செய்தி இது - https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607&fbclid=IwAR0daJX9ZjxHbFjedBMDYDLXLgndL3bpBZIfje04vKfMBYkSzmORZpMJ2zY

வியாழன், 27 டிசம்பர், 2018

பிரளயம் பிளந்த பாறைகள் மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)


பிரளயம் பிளந்த பாறைகள் 

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)

2004 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளன.  அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.  
சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.



அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத் திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின் நிலையிலிருந்து புரண்டு (நிலச்சரிவு) கடலில் மூழ்கியுள்ளன.   இதனால் சுனாமி உருவாகியுள்ளது.  இவ்வாறு நிலத்திட்டுகள் பிரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன.  இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறன. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவு பட்டுள்ளன.  இவ்வாறு பாறைகள் பிளவு பட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.  

இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது.  அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும தாக்கி அழித்துள்ளது.  

பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வந்துள்ளது.  இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.  

மண்கடல் வௌவ
பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன.  காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.
பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க .... “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  

திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவு பட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகதில் பழநி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.


இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கம் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதை நன்கு காணமுடிகிறது.
புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள்“ பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன.

பிரளயப் பிளவுப் பாறைகள் 0882.JPG

கொடைக்கானல் மலையில் “குணா குகை“ என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?


திருவிளையாடல் புராணம் 
பாடல் எண்1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

பாடல் எண் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

பாடல் எண் 1305.
நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தெளிந்தோர் ஏழு
பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன், 
kalairajan26@gmil.com
ஆடி 25 (10 Aug 2017)