மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.
Thiruvillayadal Puranam is narrating about Tsunamis. In this blog, I am giving some extracts of the puranam and explaining in details with Google Map and my photos.
மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.
கல்வெட்டில் கடல்கோள்
முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.
7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு ·
நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.
கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக
''மால்விட்ட படை துரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்
புடைத்தது முன் கடல்போய் வற்ற
வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட
தனி விலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''
''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்
றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை
மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர் தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.
முனைவர் மா.இராசமாணிக்கனார்
(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)
இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள் வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கடல்கோள்களும்
கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்
மகாராஷ்டிராவில் நர்மதை, தபதி என்ற இரண்டு நதிகள் மற்றும் கேரளமாநிலத்தில் பெரியாறு ஆகிய மூன்று நதிகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காகப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன். இந்த மூன்று நதிகளைத் தவிர இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் கிழக்கே உளள வங்காளவிரிகுடாவில்தான் கலக்கின்றன.
இந்த நதிகள் எல்லாம் வண்டல்மண்ணை அடித்துவந்து கடலில் சேர்க்கின்றன. ஆனாலும் இந்தியாவின் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால், கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் மணல் மிகவும் குறைவாகவே படிந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமான அளவில் மணல் படிந்து கடற்கரையே மணல்மேடாகக் காணப்படுகிறது.
இவ்வாறு, கிழக்குக் கடற்கரையில் குறைவாக மணல் படிந்து இருப்பதற்கும், மேற்குக் கடற்கரையில் மிகக் கூடுதலாக மணல் படிந்துள்ளதற்கும் காரணம் என்ன?
வங்கக்கடலில் அந்தமான் தீவையொட்டி இருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கி அடுத்தடுத்து மிகப்பெரிய கடல்கோள்கள் (big tsunamis) உண்டாகியுள்ளன. இந்தக் கடல்கோள்களால் உண்டான கடல்வெள்ளம் கிழக்குக் கடற்கரையைத் தாக்கி அழிந்து, இந்தியத் தீபகற்ப நிலப்பகுதியைத் தாண்டிச் சென்று மேற்குக் கடற்கரையில் படிந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் மணல் குறைவாகவும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மணல் கூடுதலாகவும் உள்ளது என்பது எனது கருத்து.
இலங்கையிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குறைவான அளவில் மண் படிந்துள்ளதும், மேற்குக் கடற்கரையில் கூடுதலான மண் படிந்துள்ளதற்கும், இதுபோல் உலகெங்கும் கடற்கரையோரங்களில் அதிகமான மணல் படிந்துள்ளதற்கும் கடல்கோளால் உண்டான கடல்வெள்ளமே (tsunamis) காரணம் என்பது எனது கருத்து.
இதுபற்றிப் புவியியல் அறிஞர்களின் கருத்துக்களையும், கடல்கோள்கள் ஆர்வலர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 29 (14.09.2020) திங்கள் கிழமை.
மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா?
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.
சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது? எப்படி வந்தது? என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
எப்போது வந்தது?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர். இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.
எப்படி வந்தது?
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து, பெரிய உருவம் பெற்று, சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன. பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.
இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின் உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.
என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.
மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது. இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது. இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.
அன்பன்
முனைவர் நா.ரா.கி. காளைராசன்
18 பிப்ரவரி 2013
1) https://worldfossilsociety.org/2015/09/ariyalur-fossilsrastellum-carinatum/
2) திருவிளையாடற் புராணம் பாடல்கள்
888. துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.
889. காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால்
அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல்.
3) கூகுள் புவிப்படத்தில் எழுகடல் தெரு
W4CF+66 Madurai, Tamil Nadu

நூல்
|
வையை
|
வைகை
|
பரிபாடலில்
|
65
|
|
கலித்தொகை
|
8
|
|
அகநானூறு
|
3
|
|
புறநானூறு
|
1
|
|
மதுரைக்காஞ்சியில்
|
2
|
|
முத்தொள்ளாயிரம்
|
2
|
|
சிலப்பதிகாரம்
|
11
|
|
தேவாரம்
|
9
|
|
பெரியபுராணம்
|
7
|
|
திருப்புகழ்
|
3
|
|
திருவிளையாடற் புராணம்
|
3
|
42
|
மொத்தம் = 156
|
95
|
61
|
வையையும் வைகையும் பாடற் தொகுப்பு
|
|
பரிபாடலில் வையை
|
|
1.
|
வகை
சாலும் வையை வரவு - பரி 6/13
|
2.
|
வரை
சிறை உடைத்ததை வையை வையை/ திரை
சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் - பரி 6/22,23
|
3.
|
தமிழ்
வையை தண்ணம் புனல் - பரி 6/60
|
4.
|
பெருக்கு
அன்றோ வையை வரவு - பரி 6/70
|
5.
|
சுருக்கமும்
ஆக்கமும் சூள் உறல் வையை
|
பெருக்கு
அன்றோ பெற்றாய் பிழை - பரி 6/73,74
|
|
6.
|
இன்
இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77
|
7.
|
வையை
வயம் ஆக வை - பரி
6/78
|
8.
|
வையை
உடைந்த மடை அடைத்த_கண்ணும் - பரி 6/82
|
9.
|
யாறு
உண்டோ இ வையை யாறு
- பரி 6/93
|
10.
|
இ
வையை யாறு என்ற மாறு என்னை கையால் - பரி 6/94
|
11.
|
வாடற்க
வையை நினக்கு - பரி 6/106
|
12.
|
வந்தன்று
வையை புனல் - பரி 7/10
|
13.
|
தானையான்
வையை வனப்பு - பரி 7/50
|
14.
|
வையை
பெருக்கு வடிவு - பரி 7/60
|
15.
|
தாமம்
தலை புனை பேஎம் நீர் வையை
|
16.
|
நின்
பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/84,85
|
17.
|
இனி
மணல் வையை இரும் பொழிலும் குன்ற - பரி 8/51
|
18.
|
வரு
புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் - பரி
8/61
|
19.
|
வையைக்கு
தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
|
20.
|
நனவின்
சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும்
- பரி 8/104,105
|
21.
|
போந்தது
வையை புனல் - பரி 10/8
|
22.
|
யாம்
வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் - பரி 10/40
|
23.
|
நெரிதரூஉம்
வையை புனல் - பரி 11/15
|
24.
|
சேண்
இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு
நின் யாணர் இறு நாள் பெற - பரி 11/39,40
|
25.
|
மல்லல்
புனல் வையை மா மலை விட்டு
இருத்தல் - பரி 11/43
|
26.
|
பாய்
தேரான் வையை அகம் - பரி 11/61
|
27.
|
நீர்
ஒவ்வா வையை நினக்கு - பரி 11/73
|
28.
|
வையை
நினக்கு மடை வாய்த்தன்று - பரி 11/87
|
29.
|
நீ
உரைத்தி வையை நதி - பரி 11/92
|
30.
|
தண்டு
தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க - பரி
11/106,107
|
31.
|
நறு
நீர் வையை நய_தகு நிறையே
- பரி 11/140
|
32.
|
வளி
வரல் வையை வரவு - பரி 12/8
|
33.
|
அம்
தண் புனல் வையை யாறு என கேட்டு - பரி
12/10
|
34.
|
உரைதர
வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர்
ஈட்டம் - பரி 12/32,33
|
35.
|
வல்லதால்
வையை புனல் - பரி 12/75
|
36.
|
நன்
பல நன் பல நன் பல
வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை
உலகே - பரி 12/101,102
|
37.
|
பூத்தன்று
வையை வரவு - பரி 16/19
|
38.
|
வறாஅற்க
வையை நினக்கு - பரி
16/25
|
39.
|
வாய்த்தன்றால்
வையை வரவு - பரி 16/31
|
40.
|
தேன்
இமிர் வையைக்கு இயல்பு - பரி 16/38
|
41.
|
கொடி
தேரான் வையைக்கு இயல்பு - பரி 16/47
|
42.
|
தொய்யா
விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி 17/44,45
|
43.
|
தான்
நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று - பரி 20/11,12
|
44.
|
கூடல்
விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் - பரி 20/26,27
|
45.
|
வையை
மடுத்தால் கடல் என தெய்ய - பரி
20/42
|
46.
|
வையை
தொழுவத்து தந்து வடித்து இடித்து - பரி 20/60
|
47.
|
ஊடினார்
வையை அகத்து - பரி 20/67
|
48.
|
தென்னவன்
வையை சிறப்பு - பரி 20/97
|
49.
|
பூ
மலி வையைக்கு இயல்பு - பரி 20/111
|
50.
|
சீர்
அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் - பரி 22/32
|
51.
|
தீரமும்
வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
|
52.
|
தீம்
புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
|
53.
|
காமரு
வையை சுடுகின்றே கூடல் - பரி 24/4
|
54.
|
நீர்
அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி
24/5
|
55.
|
முற்று
இன்று வையை துறை - பரி 24/27
|
56.
|
அகல்
அல்கும் வையை துறை - பரி 24/33
|
57.
|
தணிவு
இன்று வையை புனல் - பரி 24/50
|
58.
|
மழுபொடு
நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/80,81
|
59.
|
தான்
தோன்றாது இ வையை ஆறு
- பரி 24/87
|
60.
|
வழி
நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/90,91
|
61.
|
உரு
கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் - பரி 24/92,93
|
62.
|
தண்
வரல் வையை எமக்கு - பரி 25/4
|
63.
|
பரி_மா நிரையின் பரந்தன்று
வையை - பரி 26/2
|
64.
|
வையை
உண்டாகும் அளவு - பரி 32/4
|
65.
|
வையை
வரு புனல் ஆடல் இனிது-கொல் - பரி 35/1
|
கலித்தொகையில் வையை
|
|
66.
|
வையை
வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் - கலி 27/20
|
67.
|
வையை
வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் - கலி 28/7
|
68.
|
அறல்
வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/16
|
69.
|
வண்ண
வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் - கலி 35/9
|
70.
|
தார்
முற்றியது போல தகை பூத்த வையை தன் - கலி 67/3
|
71.
|
வரை
உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து - கலி 92/12,13
|
72.
|
பொரு
கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது
என்னை - கலி 98/10,11
|
73.
|
வையை
புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி
98/31
|
அகநானூற்றில் வையை
|
|
74.
|
வரு
புனல் வையை வார் மணல் அகன் துறை - அகம் 36/9
|
75.
|
மை
எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து - அகம் 256/10,11
|
76.
|
பெரு
நீர் வையை அவளொடு ஆடி - அகம் 296/5
|
புறநானூற்றில் வையை
|
|
77.
|
வையை
சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10
|
மதுரைக்காஞ்சியில் வையை
|
|
78.
|
அவிர்
அறல் வையை துறை_துறை-தோறும் - மது 340
|
79.
|
வையை
அன்ன வழக்கு உடை வாயில் - மது 356
|
முத்தொள்ளாயிரத்தில் வையை
|
|
80.
|
கொல்
யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள் 84/3
|
81.
|
வரி
வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள் 80/3
|
சிலப்பதிகாரத்தில் வையை
|
|
82.
|
வையை
என்ற பொய்யா குல_கொடி - மது 13/170
|
83.
|
வரு
புனல் வையை மருது ஓங்கு முன் துறை - மது 14/72
|
84.
|
நீடு
நீர் வையை நெடு மால் அடி ஏத்த - மது 18/4
|
85.
|
கையில்
தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் - மது 20/103
|
86.
|
உரவு
நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு - மது 23/185
|
87.
|
வையை
பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - மது 23/212
|
88.
|
வையை
ஒருவழிக்கொண்டு - வஞ்சி 29/62
|
89.
|
வானவன்
எம் கோ மகள் என்றாம்
வையையார்/ கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை - வஞ்சி 29/118,119
|
90.
|
வாழ்த்துவோம்
நாமாக வையையார் கோமானை - வஞ்சி 29/120
|
91.
|
வாழியரோ
வாழி வரு புனல் நீர் வையை/சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - வஞ்சி 29/124,125
|
92.
|
வரு
புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் - வஞ்சி 30/108
|
தேவாரத்தில் வைகை
|
|
திருஞானசம்பந்தர்
- திருமுறை
1,2,3
|
|
93.
|
பார்
ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
|
94.
|
செடி
ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/4
|
95.
|
ஓடி
நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே - தேவா-சம்:697/4
|
96.
|
மை
ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து - தேவா-சம்:698/3
|
97.
|
அம்
தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய - தேவா-சம்:958/1
|
98.
|
வைகையின்
வடகரை மருவிய ஏடகத்து - தேவா-சம்:3145/2
|
99.
|
தன்னுள்
ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/2
|
100.
|
கோடு
சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1
|
தேவாரம்
- திருநாவுக்கரசர்
(அப்பர்) - திருமுறை 4,5,6 -
|
|
101.
|
மருப்பு
ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை - தேவா-அப்:2272/2,3
|
பெரியபுராணத்தில் வைகை
|
|
102.
|
பற்றிய
பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் - 6.வம்பறா:1 799/3
|
103.
|
ஏடுகள்
வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் - 6.வம்பறா:1 807/1
|
104.
|
வென்று
உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் - 6.வம்பறா:1 810/3
|
105.
|
மன்னிய
வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் - 6.வம்பறா:1 811/4
|
106.
|
பார்
கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு - 6.வம்பறா:1 812/4
|
107.
|
பொரு
புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் - 6.வம்பறா:1 846/3
|
108.
|
எங்களை
வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் - 6.வம்பறா:1 1230/4
|
திருப்புகழில் வைகை
|
|
109.
|
வேற்று
உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
- திருப்:756/11
|
110.
|
மாடை
ஆடை தர பற்றி முன்
நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் - திருப்:960/11
|
111.
|
ஆசித்தார்
மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட - திருப்:1317/13
|
--------------------------------------------------------------
|
|