திங்கள், 10 டிசம்பர், 2018

defaults in plate tectonic theory (1), Theory of formation of Himalayas

Theory of formation of Himalayas

Defaults in Plate Tectonic Theory (1)




இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் உள்ள பிழைகள்.

“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது.  இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீ.  நகர்ந்திருக்கும். 




default -1

 2000
கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,

 
கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.

 
ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 ......... ....... .......


 
இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?

இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000
கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.
மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.

default -2
 
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
 (
படங்களை இணைத்துள்ளேன்).

 
ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
 (
கோணல் 2)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.
default -3
இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர் தீவும் ஒன்றாக ஒட்டியிருந்தன.  கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும்போது587,041 km² பரப்பளவு கொண்ட மடகாசுக்கர் தீவு சுமார் 2000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்ஆனால் 4,400,000 km2
பரப்பளவு கொண்ட இந்தியத் துணைக்கண்டம் சுமார் 6000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்.

அதாவது சற்றொப்ப 7.5 மடங்கு பெரியதான இந்தியத் துணைக்கண்டம் 3 மடங்கு கூடுதலான வேகத்துடன் நகர்ந்துள்ளதாம். 

------------------------------------------------

கங்கா புராணம் கோட்பாடு

விண்கோள் ஒன்று பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளது.  இதனால் உண்டான வெளி விளிம்பு ( rim )  இமயமலைத் தொடராகும்.  இதைப் புராணம் “ நேமி மாலை வரை” எனக் குறிப்பிடுகிறது.   நேமி என்றால் சக்கரம் என்று பொருள்.  மால் என்றால் மிகப் பெரிய, மிக உயர்ந்த என்று பொருள்.  வரை என்றால்  தடுப்பு அல்லது மலை என்று பொருள்.

இமயமலையானது வட்ட வடிவிலானது எனப் புராணம் குறிப்பிடுகிறது.  






  


முடிவு (Conclusion) 
இந்தியத் துணைக்கண்டம் திபெத் நிலத்திட்டில் மோதி இமயமலையை உருவாக்கவில்லை.  கங்கன் என்ற பெயருடைய விண்கோள் ஒன்று பூமியில் மோதித் துணைத்துச் சென்ற காரணத்தினால் உண்டான விளிம்பு (Rim) இமயமலையாக உள்ளது.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு பிளவுபட்டு கண்டங்களாக மாறிக் கண்டப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.  

கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால் இந்தியத் துணைக் கண்டம் அப்படியே உள்ளது.  இந்தியத் துணைக் கண்டமும், திபெத் கண்டமும் கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



ஞாயிறு, 9 டிசம்பர், 2018

Is Continental drift theory a falls one ?

Is Continental drift theory a false one ?

How a broken sand land (Tibetan plateau) containing an average depth of 10 k.m. can ride over a rigid land (India), so as to form Himalaya mountain ranges of 2000 k.m diameter ?














How a broken sand land (Tibetan plateau) can make Himalaya Mountain as a perfect Circle Mountain (நேமி மால் வரை) ?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
09 Dec 2017.



சனி, 3 நவம்பர், 2018

கபாடபுரம், இரண்டாம் தமிழ்ச் சங்கம்

இந்த அறிவியல் தொழில் நுட்பக் காலத்தில் சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டி சுனாமி தடுப்புச் சுவர்களை அமைக்கின்றனர்.


இதுபோன்று முதலாம் தமிழ்ச் சங்க காலத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர் சுமார் 1500 கி.மீ. நீளத்திற்குச் செயற்கையாகச் சுவர் கட்டிக் கடல்கோளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளனரோ? என்ற ஐயம் எனக்கு !

டியகோ கார்சியா தீவை மையமாகக் கொண்டு சுமார் 1500 கி.மீ. நீளத்திற்கு மிக நீண்ட திட்டு கோட்டை போன்று காணப்படுகிறது.  அதிலும் சரியான இடைவெளியில் மேடுகள் கொத்தளங்கள் போன்று காணப்படுகின்றன.  இந்த அமைப்பு முறையால் இது மனிதர்களால் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவராக ( Tsunami fencing Man made Wall) இருக்கலாம் என்பது கருத்து.

இது மனிதனால் கட்டப்பெற்ற செயற்கை மதிலா?
ஆம் என்றால், இந்த 1500 கி.மீ. நீளம் உடைய சுனாமி தடுப்பு மதிலைக் கட்டியவர்கள் பண்டைத் தமிழர் ஆவர். இந்தத் தீவு டிகோகார்சிகா அல்ல, இதுதான் இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த தமிழரின் கபாடபுரம் என்பேன்.







அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 31 அக்டோபர், 2018

வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295

செவ்வாய், 9 அக்டோபர், 2018

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.


கங்கன் என்ற விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது.  இது விழுந்ததால் பூமியின் மறு பகுதியில் இருந்த நிலப்பகுதிகள் இல்லாமல் போயின.  பூமிக்குள் இருந்த தீக்குழம்புகள் வெளிவந்து "ring of fire" என்று அழைக்கப்படுகிற எரிமலைத் தொடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் பூமியின் நிலப்பரப்பு கண்டங்களாகப் பிளவு பட்டு,  பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயராமல் ஆசியக் கண்டத்துடன் இணைந்தே உள்ளது.

இணைப்பில் உள்ள படத்தைப் பார்க்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1741675119238612&id=100001884215718

---------------------------------------

Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது. 
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது,  மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.

The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow.  The colluvium  & alluvium formed the Indonesia, japan, turkey lands.
----------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Theory of Tsunamis பசியாபுரம் தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


Theory of Tsunamis 
பசியாபுரம் 
தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


தினமலர்செய்தி -
திருப்புவனம், அக்.7--2018
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பசியாபுரம் அருகே கண்மாயில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய பழங்காலத்து உறைகிணற்றை சிறுவர்கள் கண்டறிந்துஉள்ளனர்.திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் 4ம் கட்ட அகழாய்வு முடிவடைந்து விட்டது. கீழடியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளபசியாபுரம் அருகே கிராம கண்மாயில் நேற்று சிறுவர்கள் மணல் அள்ளிய பள்ளங்களில் விளையாடினர். அப்போது பழங்கால மண்பானையை கண்டு கீழடியில் இருந்த தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறும் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மூன்று மண் பாத்திரங்களும் இருந்தன. ஒரு மண் பானை சேதமடையாமல் முழுமையாக கிடைத்துஉள்ளது. கீழடியில் கிடைத்த உறைகிணறுகள் சாதாரணமானகிணறுகள். பசியாபுரம் அருகே கண்மாயில் வேலைப்பாடுடன் கூடிய கிணறும் தண்ணீர் எடுக்க பயன்படும் பாத்திரங்களும் கிடைத்துள்ளன.  


பசியாபுரம் - இருப்பிடம்
தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடத்திற்குச் செல்லும் பாதையில் பசியாபுரம் உள்ளது.  பசியாபுரத்தில் இருந்து 1கி.மீ. தொலைவில் தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடம் உள்ளது.



இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

http://www.seithipunal.in/tamilnadu/3-boys-found-an-ancient-well-near-keeladi


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்