திங்கள், 18 டிசம்பர், 2017

Theory of Tsunamis கடல்கோளில் அழிந்த குமரிக்கோடு

Theory of Tsunamis
கடல்கோளில் அழிந்த குமரிக்கோடு

 பிரளயகாலத்தில் ஏற்பட்ட கடல்பெருவெள்ளத்தினால் (very huge tsunami)
பஃறுளி ஆற்றையும், பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையும் கொடுங்கடல் கொண்டது.



மற்றபிற கோடுகளைவிட குமரிக்கோடு வயதில் இளையது. அதனால் குமரி என்ற பண்பாகுபெயர்.
கடலில் குமரி யில்லை. எனவே குமரிக்கடல் என்ற பெயரில்லை.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் 
நா.ரா.
கி. காளைராசன்

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

Indian Emperors and Foreign Emperors பாண்டியநாட்டிற்கு வருகை தந்த வேறுபிற நாட்டினர்

Indian Emperors and Foreign Emperors

தடாதகைப் பிராட்டியின் 
திருமணத்திற்கு வந்திருந்த அரசர்கள்

மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன்  மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள்.
இறுதியாகக் திருக்கயிலாயத்தை அடைந்து சிவனுடன் போரிடத் துணிந்தாள். சிவனைக் கண்டதும் தனது மூன்று தனங்களுள் ஒன்று மறைந்தது.  இதனால் சிவபெருமானிடம் காதல் கொண்டாள்.  

இகலோக நாயகி மதுரையில் பாண்டியனுக்கு மகளாகி முடிசூடி பாரததேசத்தைத் தன் குடைக்குக் கீழ்க் கொண்டு வந்த “தடாதகைப் பிராட்டிக்கும்“,  தாய் தந்தையின்றித் தனியொருவனான பரலோக நாகயகன் கைலாயநாதனும் திருமணம் நிச்சயத்தனர். 

திருமணத்திற்கு வரவேற்றுத் திருமுகம் ஓலையை உள்நாட்டு வெளிநாட்டு மன்னர்களுக் கெல்லாம் அனுப்பினர்.


பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின் திருமணங் குறித்த ஓலையை வரவேற்று மன்னர்கள், எதிர்கொண்டு வந்து வணங்கிக் கையில் வாங்கித் தம் மணிமுடி மேல் ஏற்றினர்.  அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, அதைக் கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக, மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள்.

கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர் (சேரர்), கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர், அங்கர், மகதர், ஆரியர், நேரியர் ( நேரி மலையையுடைய சோழர்),  அவந்தியர், வைதர்ப்பர் (விதர்ப்பர்), கங்கர், கொங்கணர், விராடர்கள், மராடர்கள், கருநடர், குருநாடர்,  கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள் (பர்மா), காந்தாரர், குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர் (பூருமரபினர்) , கொல்லர்கள், கல்யாணர் (சளுக்கியர்),  தெலுங்கர், கூர்ச்சரர், மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர், முதலாக ஏனைப் புலம் கொள் மன்னரும் வழிகள் தோறும் நெருங்கி, பூமி மறையும்படி தடாதகைப் பிராட்டியின் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அத்தன்மையை யுடைய பல நாட்டு மன்னர்களும், எள்ளிடவும் இடமில்லையாக நெருங்கி, பசிய கடலைப் போல, நிலமகள் முதுகு ஒடியுமாறு, எங்கும்  பரந்த சேனையை யுடையவராகி, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள, பலவகை வளங்களையும் எடுத்துக்கொண்டு, பல வழிகள் தோறும், மொய்த்து, பாண்டியர் மன்னனாகிய மலயத்துவசன் திருமகளாரது, மணமுரசு முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகர்க்கு, வந்திருந்தனர்.

பாரதம் முழுவதையும் ஆண்ட தடாதகைப் பிராட்டியே உண்மையான "பாரதமாதா" ஆவார். பாரதம் வல்லரசாக நல்லரசாக மாறிட, தமிழ் பாரததேசத்தின் பொதுமொழியாக நாம் நம் தடாதகைப் பிராட்டியை வணங்குவோம். ஓம்.

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா. கி.காளைராசன்

(தடாதகைப் பிராட்டியார்) 
திருமணப் படலம் பாடல்கள்

தென்னர்சேகரன்றிருமகடிருமணத்திருமுகம்வரவேற்று
மன்னர்வந்தெதிர்தொழுதுகைக் கொண்டுதம்மணிமுடிமிசையேற்றி
அன்னவாசகங்கேட்டனர்கொணர்ந்தவர்க்கருங்கலந்துகினல்கி
முன்னரீர்த்தெழுகளிப்புறமனத்தினுமுந்தினர்வழிச்செல்வார்

கொங்கர்சிங்களர்பல்லவர்வில்லவர்கோசலர்பாஞ்சாலர்
வங்கர்சோனகர்சீனர்கள்சாளுவர்மாளவர்காம்போசர்
அங்கர்மாகதராரியர்நேரியரவந்தியர்வைதர்ப்பர்
கங்கர்கொங்கணர்விராடர்கள்மராடர்கள்கருநடர்குருநாடர்

கலிங்கர்சாவகர்கூவிளரொட்டியர்கடாரர்கள்காந்தாரர்
குலிங்கர்கேகயர்விதேகர்கள்பௌரவர்கொல்லர்கள்கல்யாணர்
தெலுங்கர்கூர்ச்சரர்மச்சர்கள்மிலேச்சர்கள்செஞ்சையர்முதலேனைப்
புலங்கொண்மன்னருந்துறைதொறுமிடைந்துபார்புதைபடவருகின்றார்

இத்தகைப்பலதேயமன்னவர்களுமெண்ணிடம்பெறாதீண்டிப்
பைத்தவாழிபோனிலமகள்முதுகிறப்பரந்ததானையராகித்
தத்தநாட்டுளபலவகைவளனொடுந்தழீஇப்பலநெறிதோறும்
மொய்த்துவந்தனர்செழியர்கோன்திருமகள்முரசதிர்மணமூதூர்

அன்பன்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

Theory of Tsunamis மதுரைக்கு வந்த வங்கக் கடல் (கடல்வெள்ளம், பெருஞ் சுனாமி )

Theory of Tsunamis
மதுரைக்கு வந்த வங்கக் கடல்
(கடல்வெள்ளம், பெருஞ் சுனாமி )

திருவிளையாடல் புராணம் பிரளயம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து கடல்வெள்ளம் (சுனாமி) மதுரையை அழித்தது பற்றியும் பல பாடல்களில் மிகவும் தெளிவாகக் கூறுகிறது.

பிரளயத்தில் உண்டான வங்கக்கடல் வெள்ளமானது (பெருஞ் சுனாமியானது) மாடங்களையுடைய மதுரை மாநகரை மூழ்கடித்தது, இது எவ்வாறு இருந்தது என்றால்,  
ஞாயிறு (சூரியன்) டன் திங்கள் (சந்திரன்) இணைந்து இருக்கும் போது, நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராகு என்னும் பாம்பானது,  அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போன்று இருந்தது.  மேலும், கரிய   மேகங்கள் மதுரையை மறைத்ததைப் போன்று வங்கக்கடல் வெள்ளமானது மதுரைமேல் தோன்றி அழித்தது.  
மதுரைக்கு வந்த வங்கக்கடல்வெள்ளத்தை (பெருஞ் சுனாமியை) வேறு எந்த எடுத்துக் காட்டுகளால் கூறுவது?

அந்தமானை ஒட்டியிருந்த சுமர் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள நிலப்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது.
இதனால் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதையும் அழித்துள்ளது.


தொடர்புடைய 
திருவிளையாடல் பாடல்கள்

வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.


கங்கைப்புனல்வடிவாகியகவ்வைதிரைவையைச்
சங்கச்சரியறலாமலர்த்தாரோதியைநோக்கா
வங்கக்கடல்பேரூழியில்வருமாறெனவெவரும்
இங்கற்புதமடையப்பெருகென்றானருள்குன்றான்.