வியாழன், 10 பிப்ரவரி, 2022

கல்வெட்டில் கடல்கோள்

கல்வெட்டில் கடல்கோள்

முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.

7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு  · 

நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.

கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக

''மால்விட்ட படை  துரந்து வடுகெறிந்த

மகதேசன் வடிவேல் வாங்கக்

கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்

புடைத்தது முன் கடல்போய் வற்ற

வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட

தனி விலங்கும் வெற்பி லேறச்

சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''

''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்

றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை

மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர்  தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.

முனைவர் மா.இராசமாணிக்கனார்

(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)

இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள்  வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.