வியாழன், 27 டிசம்பர், 2018

பிரளயம் பிளந்த பாறைகள் மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)


பிரளயம் பிளந்த பாறைகள் 

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)

2004 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளன.  அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.  
சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.



அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத் திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின் நிலையிலிருந்து புரண்டு (நிலச்சரிவு) கடலில் மூழ்கியுள்ளன.   இதனால் சுனாமி உருவாகியுள்ளது.  இவ்வாறு நிலத்திட்டுகள் பிரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன.  இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறன. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவு பட்டுள்ளன.  இவ்வாறு பாறைகள் பிளவு பட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.  

இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது.  அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும தாக்கி அழித்துள்ளது.  

பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வந்துள்ளது.  இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.  

மண்கடல் வௌவ
பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன.  காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.
பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க .... “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  

திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவு பட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகதில் பழநி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.


இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கம் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதை நன்கு காணமுடிகிறது.
புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள்“ பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன.

பிரளயப் பிளவுப் பாறைகள் 0882.JPG

கொடைக்கானல் மலையில் “குணா குகை“ என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?


திருவிளையாடல் புராணம் 
பாடல் எண்1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

பாடல் எண் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

பாடல் எண் 1305.
நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தெளிந்தோர் ஏழு
பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன், 
kalairajan26@gmil.com
ஆடி 25 (10 Aug 2017)


செவ்வாய், 11 டிசம்பர், 2018

கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு, A fictional line in the continental drift theory

இமயமலை உருவானது எப்படி?


கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு 

(A fictional line in the continental drift theory)





நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதிய காரணத்தினால் இமயமலை உருவானது என்ற கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு   கற்பனைக் கோடு.




கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் ஆஸ்திரேலிக் கண்டத்திற்கும் இடையே ஒரு கற்பனையான ஒரு கோட்டைவரைந்து வைத்துள்ளனர்.  இந்த கற்பனைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியா கண்டப்பெயர்ச்சியாகி ஆசியாவுடன் மோதியது என்று கூறுகின்றனர்.  மேலும் இந்தியத் துணைக்கண்டம் மோதியதால் இமயமலை உறுவாகியது என்கின்றனர்.

கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது உண்மை.  ஆனால் இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயரவில்லை.  ஆசியாக் கண்டமும் இடம் பெயரவில்லை.  இந்தியத் துணைக்கண்டம் மோதி இமயமலை உருவாகவும் இல்லை.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைப் பூமியின் உள்ளே சென்றுள்ள காரணத்தினால் உண்டான விளிம்புதான் இமயமலை யாகும்.
கங்கன் மோதிய காரணத்தினால் பூமியின் மறுபக்கத்தில் நிலப்பரப்பு பெரும்பகுதியும் அழிந்து ஆழமான அண்டாலண்டிக் பெருங்கடல் உருவாகி உள்ளது.  பெரும் நிலப்பரப்பில் பிளவு ஏற்பட்டு, ஆப்பிரிக்காக் கண்டமும் அமெரிக்காக் கண்டமும் பிரிந்து சென்றுள்ளன.

கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் அமெரிக்கா ஆப்ரிக்கா கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது மட்டுமே உண்மை.  இந்தியா கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



திங்கள், 10 டிசம்பர், 2018

கங்கன், கங்கை, கடல்வெள்ளம். Gangan - a celestial igneous rock planet, Ganga - a celestial water sedimentary planet, Tsunami

கங்கன் (a celestial igneous rock planet) , 
கங்கை (a celestial water sedimentary planet), 
கடல்வெள்ளம் (சுனாமி, tsunami)


1) கங்கன், 2) கங்கை, 3) கடல்வெள்ளம் என மூன்று புவியியல் கோட்பாடுகளைக் கூறி வருகிறேன்.




1)  கங்கன் என்ற 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று  பூமியில் (இப்போது இமயமலை இருக்கும் இடத்தில்) விழுந்துள்ளது.


1 a) 
கங்கன் என்று என்னால் பெயரிடப்பெற்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் (a celestial igneous rock planet) ஒன்று பூமியில் மோதி, பூமியைத் துளைத்துப் பூமிக்குள்ளே சென்றுள்ளது.  அதனால் சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விளிம்பு (Rim) இமயமலையாக உருவாகியுள்ளது.  


1 b)
இதனால் பூமியில் மிகவும் தொன்மையான வட்டவடிவமான மலைத்தொடர் உருவாகி உள்ளது.  இதை இமயமலை என்று அழைக்கிறோம்.  புராணங்கள் இமயமலையை “நேமி மால் வரை” என்று கூறிப்பிடுகின்றன. “நேமி மால் வரை” என்றால் வட்டவடிவமான சக்கரம் போன்ற மிக உயரமான மலைத்தொடர் என்று பொருள்.



1 c)
இமயமலையின் அடிப்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது. கங்கன் துளைத்துச் சென்ற காரணத்தினால், சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு உண்டாகியுள்ளது.  (இப்போது இந்தப் பகுதியே தக்களமெகன் பாலைவனம் உள்ள பகுதியாகும்)




1 d)
கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்றுள்ள காரணத்தினால் பூமியின் மறுபக்கம் நிலப்பரப்பு (தரைப்பகுதி) ஏதும் இல்லாமல் போய்விட்டது. எரிமலைகளை வரிசையாகக் கொண்ட “ (ரிங் ஆப் பயர்) Ring of Fire ” என்ற பகுதி உருவாகி உள்ளது.


1 e)
கங்கன் பூமியைத் துளைத்து உள்ளே சென்ற காரணத்தினால், அதன் குழம்பு பூமியின் மேற்பரப்பைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது.  அவ்வாறு வந்துள்ள இடங்களில் நீண்ட நெடிய மலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.
இந்தியாவில் “மேற்குத்தொர்ச்சி மலைத் தொடர்”, அமெரிக்காவில்  “ஆல்ப்ஸ்மலைத் தொடர் ” முதலான நீண்ட மலைத் தொடர்கள் உருவாகி உள்ளன.  இதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்த நிலத்திட்டுகளில் வெடிப்பு ஏற்பட்டு கண்டங்களாக உடைந்து பிரிந்துள்ளது.

As Gangan collide the Earth. 
The drill formed by the Gangan is the Rim of the Himalayas. 
The magma split the surface of the earth and came out as long lengthy mountains such as Mountains Alps in America Continental, Easter and Wester Mountain Ranges in India.
Due to the collision the surface of the Earth was divided into plates, and the plates were moving. Thus, the major continents were formed.



1 f)
Simple Calculations :
1) The diameter of the Himalayan Mountain Range is approximately 2000 k.m.
2) Hence it is presumed that the Diameter of Gangan (a celestial igneous rock planet) is approximtely 2000 k.m.
3) Hence the of volume of the Gangan is ≈ 4.18879×10km³, 
approximately 4.2×10km³ 
4) Hence it is presumed that the mass of the earth was increased by 4.2×10km³

Note : the volume of the atmosphere at sea level 4,200,000,000 cubic kilometers.

1) வட்ட வடிவமான இமயமலைத்தொடரின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக உள்ளது.
2) எனவே பூமியைத் துளைத்துப் பூமியின் உள்ளே சென்றுள்ள  கங்கன் என்ற விண்கோளின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
3) இதனால் அந்தக் கங்கன் என்ற விண்கோளின் பருமன் சுமார் 4.2×109  கனசதுரமீட்டர் ஆக இருக்க வேண்டும்.
4) இதனால் பூமியின் பருமனானது சுமார் 4.2×109   = 4,200,000,000  கனசதுரமீட்டர் கூடுதலாக மாறியிருக்க வேண்டும்.

குறிப்பு - பூமியில் கடல்மட்டத்திற்கு மேலே உள்ள வளி மண்டத்தின் அளவு  4,200,000,000 கனசதுரமீட்டராக உள்ளதை இங்கே ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளது. 

--------------------------------------

மேலே கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளதையும் அதனால் பூமியில் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் கண்டோம்.
இனி, வட்டவடிவமான இமயமலைத் தொடரின் நடுவே உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் கங்கை என்ற விண் நீர்க்கோள் இறங்கியதைப் பற்றிக் காண்போம்.

2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்குவதற்கு முன்பே, கங்கையின் நீர் முழுவதையும் சிலஆண்டுகள் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பள்ளத்தாக்கு இமயமலைத் தொடரின் நடுவே இருந்துள்ளது.  இவ்வாறான ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு இமயமலையில் இருந்துள்ளதைக்  கங்கா புராணம் குறிப்பிடுகிறது. 

கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது. 







கங்கை என்ற இந்த விண்ணீர்க்கோளின் குறைந்தபட்ச கனஅளவு சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்,  அதிகபட்ச கனஅளவு சுமார் 176,144,220 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளேன். https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMTgyOTM2NzcxNjgzOTUyNDc1NzcBMF94N3BmTDBBZ0FKATAuMQEBdjI&authuser=0

Second is the standard answer for the oceans is 1,400,000,000 cubic kilometers. However, if you have been paying close attention the past couple years, some new insights on the mantle suggest there is 5 times the water in the mantle as there is in the oceans. This make the volume of water on earth 8,400,000,000 cubic kilometers
இதற்கு ஆதாரமாகக் கங்காபுராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன்.  https://groups.google.com/d/msg/mintamil/nRC_brdTWts/0_x7pfL0AgAJ

3) “கடல்வெள்ளம் மதுரையை அழித்தது“  என்ற கருத்தைத் திருவிளையாடல் புராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டு, மின்தமிழிலில் கீழ்க்கண்ட இழைகளில் எழுதியுள்ளேன்.

1) “மதுரைக்கு வந்த (சுனாமி) ஆழிப்பேரலை“ https://groups.google.com/d/msg/mintamil/u1RChqX1PdA/oUGnZ9OH-pgJ

2) மியான்மார் தட்டோன் அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/abU2jJI8miE/VYFSv1W7BgAJ

3) கீழடி அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/kneZ2BYbvh0/9rD_EEGyIQAJ

4) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) https://groups.google.com/d/msg/mintamil/4UEpYeETYZw/CFnYEVmrCQAJ

5) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த திருச்செந்தூர் பாறை https://groups.google.com/d/msg/mintamil/-gSTGWJbWO0/gs4eDPHeAgAJ

6) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) : மதுரையை வங்கக் கடல் வௌவியது https://groups.google.com/d/msg/mintamil/9OaxHrTzbnE/XqfQJsDECwAJ

7) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் ... https://groups.google.com/d/msg/mintamil/VAwI47M4G-M/X56lbdHCBwAJ

8) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) "மண் கடல் வௌவலின்" https://groups.google.com/d/msg/mintamil/jKAJQnE2pVQ/VhL_Tu12CAAJ

9) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன்) https://groups.google.com/d/msg/mintamil/5rsSLsaD-e8/OIWOn4srDAAJ

10) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 7) மதுரையை அழித்த பிரளயத்தில் தோன்றிய பன்றிமலை  https://groups.google.com/d/msg/mintamil/6qz0GJVvbLc/vWdmaza6AQAJ

11) “மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8“ https://groups.google.com/d/msg/mintamil/8PvU-QKrnss/y241b6PCCgAJ

12) “பிரளயப் பிளவுப் பாறைகள்“ https://groups.google.com/d/msg/mintamil/_di5oP8Qjjg/xd4vP8H4CQAJ

அன்பன்
கி.காளைராசன்

defaults in plate tectonic theory (1), Theory of formation of Himalayas

Theory of formation of Himalayas

Defaults in Plate Tectonic Theory (1)




இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் உள்ள பிழைகள்.

“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது.  இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீ.  நகர்ந்திருக்கும். 




default -1

 2000
கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,

 
கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.

 
ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 ......... ....... .......


 
இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?

இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000
கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.
மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.

default -2
 
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
 (
படங்களை இணைத்துள்ளேன்).

 
ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
 (
கோணல் 2)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.
default -3
இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர் தீவும் ஒன்றாக ஒட்டியிருந்தன.  கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும்போது587,041 km² பரப்பளவு கொண்ட மடகாசுக்கர் தீவு சுமார் 2000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்ஆனால் 4,400,000 km2
பரப்பளவு கொண்ட இந்தியத் துணைக்கண்டம் சுமார் 6000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்.

அதாவது சற்றொப்ப 7.5 மடங்கு பெரியதான இந்தியத் துணைக்கண்டம் 3 மடங்கு கூடுதலான வேகத்துடன் நகர்ந்துள்ளதாம். 

------------------------------------------------

கங்கா புராணம் கோட்பாடு

விண்கோள் ஒன்று பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளது.  இதனால் உண்டான வெளி விளிம்பு ( rim )  இமயமலைத் தொடராகும்.  இதைப் புராணம் “ நேமி மாலை வரை” எனக் குறிப்பிடுகிறது.   நேமி என்றால் சக்கரம் என்று பொருள்.  மால் என்றால் மிகப் பெரிய, மிக உயர்ந்த என்று பொருள்.  வரை என்றால்  தடுப்பு அல்லது மலை என்று பொருள்.

இமயமலையானது வட்ட வடிவிலானது எனப் புராணம் குறிப்பிடுகிறது.  






  


முடிவு (Conclusion) 
இந்தியத் துணைக்கண்டம் திபெத் நிலத்திட்டில் மோதி இமயமலையை உருவாக்கவில்லை.  கங்கன் என்ற பெயருடைய விண்கோள் ஒன்று பூமியில் மோதித் துணைத்துச் சென்ற காரணத்தினால் உண்டான விளிம்பு (Rim) இமயமலையாக உள்ளது.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு பிளவுபட்டு கண்டங்களாக மாறிக் கண்டப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.  

கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால் இந்தியத் துணைக் கண்டம் அப்படியே உள்ளது.  இந்தியத் துணைக் கண்டமும், திபெத் கண்டமும் கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



ஞாயிறு, 9 டிசம்பர், 2018

Is Continental drift theory a falls one ?

Is Continental drift theory a false one ?

How a broken sand land (Tibetan plateau) containing an average depth of 10 k.m. can ride over a rigid land (India), so as to form Himalaya mountain ranges of 2000 k.m diameter ?














How a broken sand land (Tibetan plateau) can make Himalaya Mountain as a perfect Circle Mountain (நேமி மால் வரை) ?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
09 Dec 2017.



சனி, 3 நவம்பர், 2018

கபாடபுரம், இரண்டாம் தமிழ்ச் சங்கம்

இந்த அறிவியல் தொழில் நுட்பக் காலத்தில் சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டி சுனாமி தடுப்புச் சுவர்களை அமைக்கின்றனர்.


இதுபோன்று முதலாம் தமிழ்ச் சங்க காலத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர் சுமார் 1500 கி.மீ. நீளத்திற்குச் செயற்கையாகச் சுவர் கட்டிக் கடல்கோளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளனரோ? என்ற ஐயம் எனக்கு !

டியகோ கார்சியா தீவை மையமாகக் கொண்டு சுமார் 1500 கி.மீ. நீளத்திற்கு மிக நீண்ட திட்டு கோட்டை போன்று காணப்படுகிறது.  அதிலும் சரியான இடைவெளியில் மேடுகள் கொத்தளங்கள் போன்று காணப்படுகின்றன.  இந்த அமைப்பு முறையால் இது மனிதர்களால் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவராக ( Tsunami fencing Man made Wall) இருக்கலாம் என்பது கருத்து.

இது மனிதனால் கட்டப்பெற்ற செயற்கை மதிலா?
ஆம் என்றால், இந்த 1500 கி.மீ. நீளம் உடைய சுனாமி தடுப்பு மதிலைக் கட்டியவர்கள் பண்டைத் தமிழர் ஆவர். இந்தத் தீவு டிகோகார்சிகா அல்ல, இதுதான் இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த தமிழரின் கபாடபுரம் என்பேன்.







அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 31 அக்டோபர், 2018

வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295

செவ்வாய், 9 அக்டோபர், 2018

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.


கங்கன் என்ற விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது.  இது விழுந்ததால் பூமியின் மறு பகுதியில் இருந்த நிலப்பகுதிகள் இல்லாமல் போயின.  பூமிக்குள் இருந்த தீக்குழம்புகள் வெளிவந்து "ring of fire" என்று அழைக்கப்படுகிற எரிமலைத் தொடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் பூமியின் நிலப்பரப்பு கண்டங்களாகப் பிளவு பட்டு,  பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயராமல் ஆசியக் கண்டத்துடன் இணைந்தே உள்ளது.

இணைப்பில் உள்ள படத்தைப் பார்க்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1741675119238612&id=100001884215718

---------------------------------------

Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது. 
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது,  மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.

The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow.  The colluvium  & alluvium formed the Indonesia, japan, turkey lands.
----------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்