வியாழன், 15 ஜூலை, 2021

கீழடியில் கிடைப்பன உறைகிணறுகளா ? செப்டிக்டேங்குகளா?

கீழடியில் கண்டறியப்படுவன

உறைகிணறுகளா? அல்லது

மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளா(septic tank)?

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. 6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது. இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை. ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

அகலம் குறைவான இந்தத் தொட்டிகளில் உள்ளே உடைந்த மண்பாண்டங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தினால், கீழடியில் தோண்டிக் கண்டறியப்படும் உறைகிணறுகள் உண்மையில் கிணறுகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளாக இருக்கலாம். அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

படித்தது 1) https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

படித்தது 2) மெசொபடோமியாவில் உர் (Ur, Mesopotamia) அருகே கண்டறியப்பட்டுள்ள கிமு 4000 க்கு முந்தைய நாகரிகமும் கீழடி நாகரிகமும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

British archaeologist Leonard Woolley and his wife Catherine at the moment of the discovery of pottery pipes that were used as a sewage and rainwater network in what is considered the first water drainage system in history before about 4000 BC.
Within the archaeological excavations of the ancient city of Ur (Mesopotamia) in 1930.

திங்கள், 12 ஜூலை, 2021

கீழடி வழிபாடும், பூரி ஜெகநாதர் வழிபாடும் ஒன்றா?

கீழடி வழிபாடும், பூரி ஜெகநாதர் 

வழிபாடும் ஒன்றா?


 கீழடி அருகே சங்ககால கூடல் என்ற மதுரையைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர் தொல்லியலாளர்கள்.

படத்தில் உள்ள இந்த சுடுமண்உருவம் கீழடியில் கிடைத்தது.

எனக்கென்னவோ, கீழடியும் (சங்ககால கூடல் என்ற மதுரையும்) பூரி ஜெகநாதர் வழிபாடும் ஒரே நாகரிகம் என்றே தோன்றுகிறது.




வியாழன், 1 ஜூலை, 2021

கயிலைமலை என்றால் என்ன பொருள்?

கயில் என்றால் பூரணம், உடைத்த தேங்காய்ப் பாதி என்றும் “பிடரி” என்றும் பொருள்.  ( https://ta.wiktionary.org/s/1q9j)

சங்க இலக்கியத்தில் கயில் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

“வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை” - ஐங் 72/1

“கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்” - பரி 12/18






கைலாசம்,  கைலாயம், கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை, சிமகிரி, இமகிரி,  என்ற பெயர்களால் இமயமலை அழைக்கப்படுகிறது.

கயிலைமலை என்றால் என்ன பொருள்? 

கயிலைமலை என்றால் “உடைத்த பாதித் தேங்காய் போன்ற வடிவத்தை உடைய மலை”  என்று பொருள்.  இமயமலையானது உடைத்த பாதித் தேங்காய் போன்று வட்ட வடிவத்தில்,   அதன் நடுப்பகுதியானது பெரும் பள்ளத்தாக்காக உள்ள காரணத்தினால் இமயமலைக்குக் கயிலைமலை என்ற காரணப்பெயர் உண்டாகியுள்ளது.


கயில் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - ஐங்குறுநூறு - 72

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்

குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்

மலர் ஆர் மலிர் நிறை வந்து என

புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே.


சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - பரிபாடல்  # 1 திருமால் 

“....... அம் தண் புனல் வையை யாறு என கேட்டு 10

மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்

பொன் அடர் பூ புனை திருத்துவோரும்

அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற

புகை கெழு சாந்தம் பூசுவோரும்

கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் 15

வேர் பிணி பல் மலர் வேயுமோரும்

புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்

கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்

வாச நறு நெய் ஆடி வான் துகள் ....... ”

----------------------------------------------------------- 

கம்பராமாயணத்தில் கயில், கயிலை என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு -  நன்றி http://tamilconcordance.in

கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் - அயோ-மிகை:8 4/2

கயில் விரிவு அற வரு கவசமும் உருவி - யுத்4:37 85/1

அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் - ஆரண்:10 43/1

கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் - ஆரண்:11 19/1

எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும் - ஆரண்:13 29/1

உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் - கிட்:15 25/4

நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் - யுத்1:12 7/3

கண்டு நின்று கயிலை இடந்தவன் - யுத்2:15 94/2

பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் - யுத்2:15 165/1

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை - யுத்2:15 223/2,3

கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு - யுத்2:18 56/1

நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் - யுத்2-மிகை:15 32/3,4

உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் - யுத்3:24 43/4

ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் - யுத்3-மிகை:31 45/1

வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த - யுத்4-மிகை:38 1/1

வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் - யுத்4-மிகை:41 297/1

காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் - யுத்3:27 86/3,4

கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் - சுந்:1 11/4

தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும் - சுந்:1 73/3

பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி - யுத்3-மிகை:29 3/1

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் - யுத்4-மிகை:42 19/1

கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த - சுந்:3 82/3

கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் - சுந்:12 15/1

கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் - சுந்:7 20/4

முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது - யுத்1:2 32/2

கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள் - யுத்2-மிகை:15 16/3

ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி - பால:19 3/3

வசை உற கயிலையை மறித்து வான் எலாம் - ஆரண்:10 12/2

கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் - ஆரண்:13 6/4

கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் - கிட்:5 5/1,2

ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் - சுந்:2 20/4

மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் - யுத்1:2 80/1

வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் - யுத்2:16 36/4

கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட - யுத்3:27 166/3

இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் - யுத்4-மிகை:35 4/3

-----------------------------------------------

8. கயிலைமலைக் கெய்தியங்குக் காமுற் றுறைநாட்

குயிலை மலைக்கரசன் கொம்பைப் - பயில்வொரீஇ - திருப்பூவணநாதருலா

--------------------------------

திருவிளையாடற் புராணத்தில் 'கயிலை' என்ற சொல் இடம்பெற்றுள்ள பாடல்கள்  (பாடல்கள் தொகுப்பு உதவிக்கு நன்றி  - http://www.tamilvu.org/ta/library)

184.
மடங்கல் இன்றி விண் பிளந்து மேல் வளர்ந்து வெள் ஏற்று
விடங்கர் வெள்ளி மன்று இமைத்து எழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண் பிறைக் கண்ணியான் கயிலை மூ உலகும்
ஒடுங்கு கின்ற நாள் ஓங்கிய ஓக்கமே ஒக்கும்.
201.
வரங்கள் தந்து அருள் என முது வானவர் முனிவோர்
கரங்கள் தந்தலை முகிழ்த்திடக் கருணை செய்து அவிச்சை
உரம் கடந்து உரை உணர்வு எலாம் கடந்து அரு மறையின்
சிரம் கடந்தவன் இருப்பது திருக் கயிலாயம்.
204.
வெந்த நீற்று ஒளி வெண்மையும் விமலனை அகம் கொண்டு
அந்தம் இன்றியே அசைவற இருக்கையும் அருவி
வந்த கண்களும் கொண்டு அவண் இருக்கும் மாதவர்க்குத்
தந்தால் அரன் கயிலை யின் தனது சாரூபம்.
216.
மேரு மந்தரம் கயிலைப் பர்ப்பதம் முதல் விடைமேல்
ஊரும் அந்தர நாடவன் உறைபதி அனந்தம்
ஆரும் அந்தம் இல் போகம் வீடு அடைவது என்று அவற்றின்
காரணங் களோடு உரைத்தனை கருத்தினுக்கு இசைய.
252.
கைத்தலம் நான்கு இரண்டு உடைய மலர்க்கடவுள் மேல் ஒருநாள் கயிலை ஆதி
எத்தலமும் ஒரு துலை இட்டு இத்தலமும் ஒரு துலை இட்டு இரண்டும் தூக்க
உத்தமம் ஆம் திருவாலவாய் மிகவும் கனத்தது கண்டு உலகின்மேலா
வைத்த தலம் இது என்றால் இதன் பெருமை யாவரே வழுத்தர் பாலார்.
412.
வாம்பரி உகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
தாம் பரிவோடும் சூழத் தராதலத்து இழிந்து செம்பொன்
காம்பரி தோளி பங்கன் கயிலை மால் வரையைத் தாழ்ந்து
தேம் பரி அலங்கல் மார்பன் தென்திசை நோக்கிச் செல்வான்.
558.
பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற மதி கிரணம் பரப்பி அன்ன
கோல மணி கவரி புடை இரட்ட மலர் மழை தேவர் குழாம் உடூற்றக்
காலை இளம் கதிர் கயிலை  உதித்து என வெண் கடா யானைக் கழுத்தில் வேப்ப
மாலை முடிப் பெண் அரசை மங்கல துரியம் முழங்க வலம் செய்வித்தான்.
624.
இவ்வாறு மற்றைத் திசைக் காவலர் யாரையும் போய்த்
தெவ் ஆண்மை சிந்தச் செருச் செய்து திறையும் கைக் கொண்டு
அவ்வாறு வெல்வாள் என மூன்று அரண் அட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக் கிரி நோக்கிச் செல்வாள்.
626.
வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்
போனாள் வந்தாள் என்று அருவிக் கண் புனலுக்கு அந்நீர்
ஆனா ஒலியால் அனை வா என்று அழைத் தன் தேசு
தான நகையால் தழீஇ எதிர் ஏற்பச் சென்றாள்.
692.
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை  அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.
805.
பிறை தவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம்
அறைதரு துவாத சாந்த மதுரை ஈது அதிகம் எந்த
முறையினால் என்னின் முன்னர் தோன்றிய முறையால் என்றக்
கறை அறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான்.
806.
தன் அருள் அதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த
மின்னவிர் கயிலை தானோ விடை உரு மாறி மன்றாய்
மன்னியது ஏயோ திங்கள் மண்டல மேயோ என்னப்
பொன் அவிர் விமானக் கீழ்பால் வெள்ளி அம் பொது உண்டாக.
1788.
தேவதேவு உபதேசித்த சித்தியைச் சிலம்பன் செல்வி
பாவனை வலத்தால் நன்கு பயின்றுவான் வழிக் கொண்டு ஏகிப்
பூவலர் கதுப்பின் நல்லார் அறுவரும் புரம் மூன்று அட்ட
காவலன் விரும்பி வைகும் கயிலை மால் வரையில் புக்கார்.
2552.
போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞானப் பூம்
கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின்
தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றித் திருக்காளத்திக்
காதையார் குழையினாரைக் காளத்தி கயிலை என்னா.
3065.
மந்தரம் கயிலை  மேருப் பருப்பதம் வாரணாசி
இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும்
தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் போகாமல்
சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும்.
---------------------------------------------------------------