ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

6) ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்

ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்



கங்கைக்கு திரிபதகை என்றொரு பெயரும் உண்டு.

மூன்று உலகங்களிலும் பாயும் நதி எனப்பொருள்.

ஆகாயத்தில் பாய்ந்து திரிந்த கங்கையானது பூமியில் இறங்கியது.  இறங்கிய வேகத்தில் பாதாளத்திற்குள்ளும் பாய்ந்து சென்றது.  இதனால் ஆகாயம், பூமி, பாதாளம் என மூன்று உலகிலும் பாயும் நதி என்பதால்  இதற்குத் திரிபதகை என்றரொரு பெயரும் உண்டு.

புகழ்ப் பாடல்களில் கங்காகுலதிலகர் என்றோ, திரிபதகை குலசேகரர்/வங்கிசத்தார்  என வருவதும் இங்கே காண்க.


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகள்

 


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன்.

1) 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் விழுந்தது,
பலகாலம் கழித்து அதே இடத்தில்
2) 300-420 கி.மீ. விட்டம் கொண்ட கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்தது.
பலகாலம் கழித்து அந்தமான் அருகே
3) தமிழகத்தின் பரப்பளவிற்குச் சமமான நிலத்திட்டு பிரண்டு விழுந்து பெரும் சுனாமி உண்டாகி தென்னிந்தியாவை அழித்தது.

கங்கன் விழுந்த காரணத்தினால்,
1 அ) உலகிலேயே அதிகமான, உயரமான மலைச் சிகரங்களைக் கொண்ட இமயமலைத் தொடர் உருவானது,
1 ஆ) உலகிலேயே அகலமான கடல்பகுதி உருவானது,
1 இ) உலகின் பரப்பளவில் 29% பகுதியே நிலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 71% நிலப்பகுதிகள் காணாமல் போனது,
1 ஈ)  29% நிலப்பகுதி கண்டங்களாகப் பிளவு பட்டு, இடப்பெயர்ச்சி அடையத் துவங்கியது,
1 உ) உலகிலேயே நீண்ட மலைத்தொடர் அமெரிக்கக் கண்டத்தில் உருவானது,
1 ஊ) உலகிலேயே நீண்ட “ ring of fire “ எரிமலைத் தொடர் உருவானது,
1 எ) பூமியின் கனஅளவு கூடியுள்ளது.


கங்கை விழுந்த காரணத்தினால்
2 அ) உலகிலேயே பெரும் பாலைவனங்கள் உருவானது.
2 ஆ) உலகிலேயே ஆழமான தக்களமேகன் பாலைவனம் உருவானது
2 இ) கங்கன் விழுந்த காரணத்தால் உண்டான (2000 கி.மீ. விட்டம் கொண்ட) பள்ளதாக்கின் பெரும் பகுதி மேடானது.
2 ஈ) உலகிலேயே ஆழமான கடல் பகுதிகள் உருவானது.
2 உ) இந்தோனேசியா சப்பான், துருக்கி முதலான சவடுமண் நிலப்பரப்புகள் உருவானது,
2 ஊ) ஏழு பெரும் நதிகள் உருவானது,
2 எ) உலகில் உள்ள மடிப்பு மலைகள் தோன்றியது.
2 ஏ) கடல் நீரின் அளவு கூடியது, கடல் உப்பு நீரானது.
2 ஐ) சிம்சுமாரம், ஆமை, முதலை முதலான உயிரினங்கள் பூமியில் இறங்கியது,
2 ஒ) உலகெங்கும் வண்டல்மண் திட்டுக்கள் உருவானது,

பெரும் நிலப்பரப்பு பெயர்ந்து விழுந்த ( அந்தமான் அருகே பிரளயம் ஏற்பட்ட ) காரணத்தினால்,
3 அ) மதுரையை மையமாகக் கொண்டு பெருஞ் சுனாமி தென்னிந்தியாவைத் தாக்கி அழித்தது,
3 ஆ) பண்டைய மதுரை அழிந்தது, குமரிக்கோடு அழிந்தது,
3 இ) நாகமலை பசுமலை உருவானது
3 ஈ) சிவகளை மலை உருவானது
3 உ) தென்னிந்தியா தக்கான பீடபூமியாக மாறியது
3 ஊ) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வண்டல்மண் படிந்தது
3 எ) பிரளயப் பிளவுப் பாறைகள் உருவானது
3 ஏ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் முழுவதும் bedding sedimentary திட்டுகள் உருவாகியுள்ளது
3 ஐ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள குன்றுகளின் உச்சியில் எல்லாம் பொக்குப்பாறைகள் உருவாகி இருப்பது,

மேற்கண்ட காரணிகளை புராணத்தின் அடிப்படையில் விளக்கினால், விளக்கக் கோட்பாட்டில் பிழைகள் இருக்காது.  எனவே வரும் நாட்களில், மேற்கண்ட காரணிகளுக்கான விஞ்ஞானிகளின் கோட்பாடுகளில் காணப்படும் பிழைகளை மட்டும் சுட்டிக்காட்டி இந்த மூன்று இழைகளையும் தீபாவளியோடு முடித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
..........................................

கங்கன் என்ற சொல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
வில்லிபாரதத்தில் இடம் பெற்றுள்ளது..

துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி - அகம் 44/8

உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய - வில்லி:21 34/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் - வில்லி:22 22/1
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/1,2
நன்றி - http://tamilconcordance.in/

.................................................

Hari Krishnan to mintamil
25 Jun 2015, 12:05:45
விராட பர்வத்தில் தர்மபுத்திரன் புனைந்த பெயர் கங்கன்.  ஆனால் அதன் உச்சரிப்பு Kanka.  கங்க என்பது கழுகு, பருந்து, கருடன் எல்லாவற்றுக்கும் வழங்கி வரும் பெயர்.  கருடவாகனன் என்பதால் கங்கன் என்கிறார். 
..........................................

Bengal Fan, Indus Fan. Ganga sediments

Bengal Fan, Indus Fan.  Ganga sediments




Great rivers  (the Ganges, Brahmaputra, and Indus) transport large volumes of sediments from great mountains (the Himalayas, the Hindu Kush and the Karakoram) into the ocean. The Bengal Fan extends 2,500 kilometers south into the Bay of Bengal and is 22 kilometers thick. The Indus Fan is 10 kilometers thick and extends 1,000 to 1,500 kilometers into the Arabian Sea.

"The mountains rise, are lashed by wind and weather, and erode. The rivers carry mud and debris from the mountains into the ocean, where they settle onto the relatively tranquil seafloor and are preserved. The sediments bear evidence about where they came from, what happened to them, and when. By analyzing, measuring, and dating these seafloor sediments, scientists can piece together clues to reconstruct when and how fast their mountain sources rose to great heights millions of years ago, and how the climate and other environmental conditions may have changed in response."

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.

புராணத்தின் அடிப்படையில்,  படத்தில் காட்டப்பட்டுள்ள Indus Fan, Bengal Fan இரண்டும் ஒரே நேரத்தில்  “சிலவருட காலகட்டத்தில்“ உருவானவை.  கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்து அதிலிருந்த தண்ணீர் வழிந்தோடி இவை இரண்டும் உருவானவை என்று கருதுகிறேன்.  எனது இந்தக் கருதுகோள் அறிவியல் அடிப்படையில் தவறு என்றால் “கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியது“ என்ற புராணக்கோடு தவறாகும்.   

“அதுவரை கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியது“ என்ற கோட்பாட்டை அறிவியல் அடிப்படையில் மறுக்க முடியாது என்றே கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

சிம்சுமாரம்


இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிம்சுமாரத்தின் படிமம் என்றும், கங்கை என்ற உப்பநீர்பனிக்கோள் பூமியில் இறங்கியபோது அதில் இருந்த சிம்சுமாரம் இமயமலை அடிவாரத்தில் சிக்கிப் புதைந்து படிமம் ஆகியுள்ளது எனக் கருதுகிறேன்.

http://googleweblight.com/?lite_url=http://www.independent.co.uk/news/worlds-oldest-whale-is-found-in-the-himalayas-1193848.html&ei=7_3gH72C&lc=en-IN&s=1&m=952&host=www.google.co.in&ts=1484701614&sig=AF9NedkT5562pK9FRnJXMuRaAqNc0YZoJQ

 A FOSSILISED jawbone of the world's oldest whale has been discovered in the foothills of the Himalayas - a part of the world that was once a sea separating two ancient continents.

The find sheds new light on the evolution of one of the most successful groups of sea mammals, which became adapted to a semi-aquatic life in river estuaries and shallow seas before becoming fully marine.

Scientists have dated the fossil to about 53.5 million years old, making it 3.5 million years older than the previous oldest known member of the whale family.

The ancient whale, called Himalayacetus subathuensis, probably only spent some of its time in water, returning to dry land to rest and breed.

Its jawbone contains teeth that are clearly adapted to eating fish, according to Philip Gingerich, of the University of Michigan, and Sunil Bajpai, of the University of Roorkee, in northern India.In a paper published in the Proceedings of the National Academy of Sciences, the scientists say the fossil is a significant find because of both its extreme age and because it was found in a layer of sediments clearly associated with marine animals rather than freshwater species.

---------------

NEWS:  Scientists have dated the fossil to about 53.5 million years old


Question:  How old is Mankind?


Answer:  While our ancestors have been around for about 6 million years, the modern form of humans only evolved about 200,000 years ago. Civilization as we know it is only about 6,000 years old, and industrialization started in the earnest only in the 1800s

Source: https://www.universetoday.com/38125/how-long-have-humans-been-on-earth/


Who were the first people on earth?

Scientists agree that our early ancestors, Homo erectus, first appeared in Africa 1–2 million years ago. They spread throughout the world and evolved into ancient humans. Most believe that modern humans evolved in Africa, and gradually replaced all the other ancient humans (the 'Out-of-Africa' theory).

Source: http://www.sciencemuseum.org.uk/whoami/findoutmore/yourgenes/wheredidwecomefrom/whowerethefirsthumans


6 million  & 200,000 years  <  53.5 million


சிம்சுமாரம் என்பது தட்டையாக, மெல்லிய, நீண்ட rostrum / அலகு போன்ற  வாய்ப்ப்பகுதி கொண்ட விலங்குக்கு  நாகரீக (?)  மனிதன் இட்ட பெயர்.

தான் பார்த்திராத ஒரு விலங்குக்கு அல்ல. 


மேலும் திமிங்கிலத்தின் வாய்க்கும் தலைக்கும், மெல்லிய நீண்ட அலகு போன்ற உள்ள விலங்குக்கும் எந்த ஒரு உருவ ஒற்றுமையும் கிடையாது. 



______________________

முக்கியமான  குறிப்பு: இமயத்தின் அடிவாரத்தில் கிடைக்கும் கடல் திமிங்கிலத்தின் படிமம்  நீங்கள் சொல்லும் உப்பு நீர்க் கோள் கோட்பாட்டை உறுதிப்படுத்தவில்லை.

மாறாக... புவிதட்டுகள் நகர்ந்து இந்தியத் தட்டு யூரேசியன் தட்டுடன் மோதிய பொழுது கடல் நீருக்கும் அதில் வாழ்ந்த விலங்குகளுக்கும் ஏற்பட்ட நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது.

செய்தி சொல்வது:    A FOSSILISED jawbone of the world's oldest whale has been discovered in the foothills of the Himalayas - a part of the world that was once a sea separating two ancient continents.

மீண்டும் கீழுள்ள (முன்னர் கொடுத்தவைதான்) சுட்டிகளை மீள்பார்வை செய்யவும்....

The science behind Nepal earthquakes

http://earthsky.org/earth/the-science-behind-the-nepal-earthquake

By EarthSky Voices in EARTH | SCIENCE WIRE | May 12, 2015

Nepal sits on the boundary of the two massive tectonic plates that collided to build the Himalayas. Their ongoing convergence also means earthquakes.

Earth's Conveyor Belts Trap Oceans of Water

https://www.livescience.com/42904-subduction-zones-transport-water-mantle.html

     whale-mouth

அன்பன்

கி. காளைராசன்


5) ஆகாயகங்கை - hidden ocean underneath the Taklamakan Desert

டக்ளிமேகன் பாலைவனத்தினை அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
1) இந்தப் பாலைவனம் மற்றவை போலானது அல்ல.
2)ஆழமானது.
3) அதனுள்ளே அதிகமான கரி படிந்துள்ளது.
4) அதனுள்ளே உப்புநீர் உள்ளது.
5) அதனுள்ளே கடல் போன்ற அளவு நீர் தேங்கியுள்ளது.
எனக் கண்டறிந்துள்ளனர்.

இவை எப்படி நிகழ்ந்தன ?
என அவர்களிடம் விளக்கம் இல்லை !
Theory of the Earth புத்தகத்திலும் இல்லை !
ஆனால், விளக்கம் புராணத்தில் உள்ளது.

அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.

சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,

கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,

இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,

இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,

இதனால்தான் இந்தப் பாலைவனத்தின் அடியில் கடலளவு உப்புநீர் உள்ளது என்றும்,

கங்கையிலிருந்த sedimentary பாதி எரிந்து கரியாகிய நிலையில் பாலைவனத்தின் அடியில் தங்கியுள்ளது என்பதும்,

இமயமலையில் உள்ள கடல்வாழ் உயிரினத்தின் படிமமானது, கங்கையிலிருந்து இறங்கிய சிம்சுமாரத்தின் படிபம் என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரே
பாலைவனத்தில் ஆறு போன்று ஓடியுள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரால்தான் பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த உப்புத தண்ணீரால்தான் பூமியின் கடல் உப்பு ஆகி உள்ளது என்பதும்,

கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,

சவடுமண் (colluvium  & alluvium) படிமம் இறுகிப் பாறையாகி, அவை பிரண்டு விழும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சுனாமி (tsunami) உருவாகிறது என்பதும்,

கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூககங்கள், அல்லது Ganga Purana Theory ஆகும்.

கங்கா புராணம் அறிவியல் அடிப்படையிலானது என்றால்,
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம்  சம காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

தக்களமேகன் உட்பட பாலைவனங்கள் தோன்றிய காலம்,  ஆழமான கடல்பகுதி உருவான காலம், இந்தோனேசியா சப்பான் நிலப்பரப்புகள் உண்டான காலம், சிம்சுமாரத்தின் படிமத்தின் வயது, உலகளவில் கடல்நீர்மட்டம் உயர்ந்த காலம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஒரு பெரிய விண்கோள் பூமியில் விழுந்துள்ளது.
இது விழுந்த இடத்தில் வட்டமான மிகப்பெரிய மலைத்தொடர் உருவாகிள்ளது.
இந்த வட்டமான மேட்டுப் பகுதியின் ஒரு பகுதியே இமயமலை.
இந்த விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் பூமியின் நிலப்பகுதி கண்டங்களாகப் பிளந்து பிரிந்துள்ளன.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.
எனவே கண்டப்பெயர்ச்சி இமயமலை தோன்றிய காலமும், கண்டப் பெயர்ச்சி துவங்கிய காலமும் ஒன்று.

இதே இடத்தில் சற்று சிறிய அளவிலான கங்கை என்ற விண்ணீர்க் கோள் விழுந்துள்ளது.
இந்த விண்ணீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்பட்ட ஜுவாலையால் எரிந்த ஆப்பிரிக்கா அரேபியா பாலைவனங்கள் உண்டாகியுள்ளன.
இந்த விண்ணீர்க்கோள் விழுந்த இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.
இந்த விண்ணீர்க்கோள் நிலப்பகுதியை ஊடுறுவி துளைத்துச் சென்று, கடலின் ஆழமான பகுதியாக உள்ள இடத்தின் வழியாக வெளிவந்தள்ளது.
இதனால்தான் தக்களமேகன் பாலைவனம் ஆழமாக உள்ளது.  
இதனால்தான் கடலின் ஆழமான பகுதி உருவாகியுள்ளது.
இந்த விண்ணீர்க்கோளில் இருந்த நீர் ஓடியபோது, இமயலைத்தொடரின் கிழக்கே இருந்த பகுதியை அரித்துச் சென்றுள்ளது.  அதனால் உண்டான நிலப்பகுதியே இந்தோனேசியா சப்பான் நிலப்பரப்புகள்.
இந்த விண்ணீர்க்கோளில் இருந்த நீர் ஓடியபோது, இமயலைத்தொடரின் மேற்கே இருந்த பகுதியை அரித்துச் சென்றுள்ளது.  அதனால் உண்டான நிலப்பகுதியே துருக்கி நிலப்பரப்புகள்.
இந்த விண்ணீர்கோளில் இருந்த நீரால்தான் உலகின் கடல் மட்டம் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளது.
இந்த விண்ணீர்கோளில் இருந்த சிம்சுமாரம் (?) என்ற உயிரினத்தின் படிமம் இமயமலை அடிவாரத்தில் படிந்துள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.
எனவே பாலைவனங்கள், கடலின் ஆழமான பகுதி, இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பரப்புகள் உண்டான காலம், கடலில்நீர் மட்டம் உயர்ந்த காலம், மற்றும் இமயமலை அடிவாரத்தில் கண்டறியப்பட்டுள்ள படிமத்தின் வயது எல்லாம் ஒன்றாகும்.

இந்தக் கருத்துகள் கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூகமான கருத்துக்கள் (Theory)  ஆகும்.  மேற்கண்ட காலக்கணிப்புகள் விஞ்ஞான அடிப்படையில் கணக்கிடப்பட்டு கண்டறியப்பட்டிருந்தால், கங்காபுராணம் கூறுவது உண்மை என்றோ, அல்லது பொய் என்றோ கொள்ளலாம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
---------------------------------------

 MessageToEagle.com – Chinese scientists have accidentally discovered a huge hidden ocean underneath the Taklamakan Desert in northwest China.

The Taklamakan Desert and the Tarim basin – located in northwestern Xinjiang, China – is considered one of the driest places in the world.
The vast amount of salt water concealed underneath could equal 10 times the water found in all five of the Great Lakes in the US, researchers say.

Taklamakan desert in Xinjiang Uyghur Autonomous Region.
Taklamakan desert in Xinjiang Uyghur Autonomous Region.

“This is a terrifying amount of water,” said professor Li Yan, who led the study at the Chinese Academy of Sciences’ Xinjiang Institute of Ecology and Geography in Urumqi, the Xinjiang capital.

Takla makan desert
Taklamakan desert

“Never before have people dared to imagine so much water under the sand. Our definition of desert may have to change,” he told the South China Morning Post.

Takla Makan desert
It has long been suspected there’s a vast abundance of melt water from nearby, but the exact amount of it remained unknown.


4) ஆகாயகங்கை - தக்களமகான் பாலைவனம் (Taklamakan Desert) உறுவானது எப்படி ?

(Taklamakan Desert) 

தக்களமகான் பாலைவனம் உறுவானது எப்படி ?
 




+

சனி, 26 செப்டம்பர், 2020

3) ஆகாயகங்கை இறங்கியதால் பூமியில் புதைந்துள்ள கரி

கங்கை இறங்கியதால் 

பூமியில் புதைந்துள்ள கரி

Runoff from irrigated fields and river beds in China’s Taklamakan desert has pumped nearly 20 billion tons of carbon into underground aquifers there.

Yan Li

Carbon tomb buried deep under Chinese desert

By Catherine MatacicAug. 5, 2015 , 4:00 PM

China’s Taklamakan desert—a windswept landscape of sand dunes

and dried-out riverbeds—has been called the place where “you can go in, but you can’t come out.” That saying might apply to more than just people. Carbon—as much as 20 billion tons—has found its final resting place in aquifers hundreds of meters beneath the shifting sands there, according to a new study. The findings may extend to other deserts around the world, shedding light on a long-standing mystery about where the ....

http://www.sciencemag.org/news/2015/08/carbon-tomb-buried-deep-under-chinese-desert

--------------------------------

1 ton (t) is equal to 1000 kilograms (kg).

 20 billion tons is equal to 20,000,000,000, tones 
20,000,000,000 tones is equal to 20,000,000,000,000 kilograms (kg)

டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் 28 பில்லியன் அளவுள்ள கரி படிந்துள்ளதான செய்தி இது.  இந்தச் செய்தியானது,  இந்தப் பாலைவனம் உள்ள இடத்தில்தால் விண்ணிலிருந்து கங்கை என்ற விண்ணீர் வியனுலகு இறங்கியுள்ளது என்ற கருத்திற்கு இயைபு உடையதாக இருக்கிறது.  

இந்தக் கட்டுரையில் கங்கை என்று நான் குறிப்பிடுவது கங்கை நதியை அல்ல.  பகீரதன் விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கிய கங்கையைக் குறிப்பிடுகிறேன்.  கங்கை விண்ணிலிருந்து பூமியில் இறங்கிய இடம்தான் இமயமலைக்கு வடக்கே தற்போது “டக்ளிமேகன்“ பாலைவனமாக உள்ளது என்று கருதுகிறேன்.
அந்தப் பாலைவனத்தின் ஒருகாலத்தில் ஆறுஓடியது என்றும், இங்கே பூமிக்குக் கீழே பாதாளத்தில் சுமார் 20பில்லியன் டன் அளவிலான கார்பன் படிந்துள்ளது எனக் கணக்கிட்டுள்ளனர்.
http://www.sciencemag.org/news/2015/08/carbon-tomb-buried-deep-under-chinese-desert

இங்கே ஓடிய ஆற்று நீர் வற்றி இந்த இடம் பாலைவனமாக எவ்வாறு மாறியது?
இங்கே பூமிக்கு அடியில் இவ்வளவு அதிகமான carbon எவ்வாறு வந்தது?
என்பதற்கான கேள்விகளுக்குச் சரியான விடை இன்னும் கண்டறியப்பட வில்லை.

ஆனால், டக்ளிமேகன் பாலைவனம் தொடர்பான மேற்கண்ட இந்த அறிவியல் கருத்துக்களை, விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கிய புராணக் கதையுடன் இணைத்து நோக்கினால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன.  பாலைவனத்தில் ஆறாக ஓடியது விண்ணிலிருந்து இறங்கிய கங்கை நீர்தான் எனவும்,பாலைவனத்தின் அடியில் படிந்துள்ள கரி (carbon) விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கும்போது உண்டான வெப்பத்தினால் எரிந்த பொருட்களின் எச்சம் என்றும் நான் கருதுகிறேன்.

விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அதீதமான வெப்பம் உண்டாகி தீப்பற்றி எரிகின்றன.  அதுபோன்று கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தினால் அந்த நீர்க்கோளிலில் இருந்த எரியக்கூடிய மூலக்கூறுகள் எல்லாம் எரிந்து கரி carbon உண்டாகியிருக்கலாம் என்றும், இந்தக் கரியே 28 பில்லியன் டன் அளவில் டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் படிந்துள்ளது என்றும் கருதுகிறேன். பாலைவனத்தின் அடியில் இவ்வளவு கரி படிந்துள்ளதற்கான சரியான காரணத்தையும் அதன் வேதியல் தன்மையையும்  அறிவியல் அடிப்படையில் கண்டறியப்படும் வரை எனது இந்த யூகத்தை சரியென்றோ தவறு என்றோ எப்படிக் கொள்வது?

மேலும்,
டக்ளிமேகன் பாலைவனத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஏதும் இணையத்தில் நான் தேடிய அளவில் எனக்குக் கிடைக்க வில்லை!
கங்கை என்ற விண்ணீர்க்கோள் சாய்கோணத்தில் பூமியில் இறங்கியது என்ற கணிப்பின் அடிப்படையில் டக்ளிமேகன் பாலைவனத்தின் அடிப்பாகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகமாக வரைந்த படத்தை இணைத்துள்ளேன். டக்ளிமேகன் பாலைவனத்தின் குறுக்கு வெட்டுப்படம் அறிவியல் அடிப்படையில் கிடைக்கும் வரையில் எனது யூகத்தின் அடிப்படையில் வரையப்பட்டு இணைக்கப்பட்டுள்ள இந்தப் படம் சரியென்றோ தவறு என்றோ கூறவும் வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன்

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

2) ஆகாயகங்கை பூமியில் இறங்கிய இடம்

ஆகாய கங்கை பூமியில் இறங்கிய இடம் ... 


கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  என்று புராணம் குறிப்பிடுகிறது.  

கங்கை என்ற நீர்த்தாரை யானதுபகீரதனின் முயற்சியால் இமயமலைக்கு வடக்கே தரையிறங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளன  கங்கை தரையிறங்கிய இடம் இப்போது டக்ளிமேகன்  பாலைவனம் -Taklamakan Desert என்று அழைக்கப்படுகிறது.

இடத்தின் மையப்புள்ளியானது தோராயமாக 39.144364, 82.833242 

கங்கை பூமியில் இறங்கும்போது சாய்கோணத்தில் இறங்கிய காரணத்தினால்

பூமியைத் துளைத்துக் கொண்டு சென்ற இடம் நீள்வட்டமாக உள்ளது.





 

கங்கை பூமியில் இறங்கியதால் ஏற்பட்டுள்ள தடத்தின் நீளம் சுமார் 900 கி.மீ.,  

கங்கை பூமியில் இறங்கியதால் ஏற்பட்டுள்ள தடத்தின்  அகலம் சுமார் 300 கி.மீ.


கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீஎன்பதையும்,  

அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீஇருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.

கங்கையின் கன அளவு (Volume) என்ன?

தொடரும்....

அன்பன்

கி.காளைராசன்

 

1) ஆகாயகங்கை எவ்வாறு பூமிக்கு வந்தது?

ஆகாயகங்கை எவ்வாறு பூமிக்கு வந்தது?


கங்கை
: பகுதி 1

கங்கை பூமிக்கு வரக் காரணம்

சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன், அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.  தன் தேசம் சிறியதாய் இருப்பதல் தன் பிள்ளைகளுக்காகத் தன் தேசத்தை விரிவு படுத்த எண்ணினான்.  அதனால் அவன் அசுவமேத யாகம் செய்தான்.  அசுவமேத யாகம் நடைபெற்றால் தனது பதவி பறிபோய்விடும் என இந்திரன் பயந்து, அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாரிஷி ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் கடுந்தவத்தில் இருந்த கபில ரிஷியைத்  துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்கள் அனைவரையும் மற்றும் அவர்களுடன் வந்த சேனைகளையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார்.  தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகா ரிசிகள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள். 

கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான்.  
அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால் கடும் வேகத்துடன் கங்கை பூமியில் இறங்கும் போது, அதன் வேகத்தைப் பூமியால் தாங்க முடியாது.  பூமி அழிந்துவிடாமல், பூமியில் கங்கையை இறக்கிடச் சிவபெருமானை வேண்டிக் கொள்ளுமாறும் ரிஷிகள் மன்னனுக்கு அறிவுரை கூறினர்.

ஸ்ரீ ராமசந்த்ராய நம :
பாலகாண்டம் 43ஆவது ஸர்க்கம்.

கங்கை எவ்வாறு வந்தது?

தேவதேவே கதே தஸ்மின் ஸோங்குஷ்டாக்ர நிபீடிதாம்
க்ருத்வா வஸுமதீம் ராம ஸம்வத்ஸர முபாஸத :

பிறகு பகீரதன் கால் கட்டை விரலைப் பூமியில் ஊன்றி, கைகளை உயரத் தூக்கிக் கொண்டு யாதொரு பற்றுமின்றி, வாயுவே ஆகாரமாய், கட்டையைப் போல் அசையாமல் இரவும் பகலும் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தார்.   பிறகு மஹாதேவன் பார்வதியுடன் அவருக்குப் பிரஸன்னமாய், ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன் என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  
என் வேகத்தைத் தாங்கக் கூடியவர்களுமுண்டோ, இந்த சங்கரனையும் அடித்துக் கொண்டு பாதாளத்திற்குப் போவேன் என்றாள்.  அவளுடைய கர்வத்தை அறிந்து ருத்ரன் கோபங்கொண்டு அவளை மறைக்க நினைத்தார்.  அவருடைய புண்ணியமான சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள்.  “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும் என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார்.  அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள் அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்அவைகளில் ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும் ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது.  அந்த ராஜ ச்ரேஷ்டர் திவ்யமான ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே போனார்.  கங்கைக்கு த்ரிபதகா என்ற பெயர் வந்த விதத்தைச் சொன்னேன்.  அவளுடைய அற்புதமான செய்கைகளைச் சொல்லுகிறேன்.

ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று.  ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள் நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ஜ்வலித்தது.  கங்கையில் மீன், சிம்சுமாரம் முதலிய ஜல ஜந்துக்கள் அங்குமிங்கும் துள்ளுவதால் மின்னல்கள் பாய்வது போலிருந்தது.  நான்கு புறங்களிலும் பலவிதமாய் வாரியிறைக்கப்பட்ட நுரைகளாலும் நீர்த் திவலைகளாலும் ஹம்ஸக் கூட்டங்களுடன் கூடிய வெண்மையான சரத்கால மேகங்களால் ஆகாசம் நிறைந்தது போலிருந்தது.  அந்த நதியின் ஜலம் சில இடங்களில் அதி வேகமாயும், சில இடங்களில் கோணலாயும், சில இடங்களில் நேராகவும், பள்ளங்களிலும் கீழாகவும், கல் முதலியவைகளால் தடுக்கப்பட்டபொழுது மேல் முகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும்,  சில இடங்களில் அலைகளின் வேகத்தால் ஜலத்துடன் ஜலம் மோதிக்கொண்டு அடிக்கடி எதிர்த்துக் கொண்டும் பூமியில் விழுந்தது.  

பரமசிவனுடைய தலையில் விழுந்து அங்கிருந்து பூமியில் வந்ததால் நீர்மலாய்ப் பாபங்களைப் போக்கும் புண்ணிய தீர்த்தமாயிற்று.  
தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்வர்களும், பூமியிலுள்ளவர்களும் பரமசிவனே இதைத் தலையால் தாங்கினதால் இது மஹா பரிசுத்தமான தீர்த்தம்.  அவருடைய தேஹத்தில் பட்டுப் பூமியில் விழுந்ததால் இதற்கு விசேஷ சுத்தியுண்டாயிற்று என்று அதில் ஸ்தானம் செய்தார்கள்.  சாபத்தால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களும் அதில் ஸ்நானஞ் செய்து பாபங்கள் நீங்கிப் புண்ணிய  லேகங்களுக்குப் போனார்கள்.  பூமியிலுள்ளவர்கள் அதில் ஸ்தானம் செய்து பாபங்கள் விலகிப் பரமானந்தம் அடைந்தார்கள்.

ராஜரிஷியான பகீரதர் திவ்ய ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே சென்றார்.  கங்கை அவரைப் பின்தொடர்ந்தாள்.  தேவ, ரிஷி, தைத்ய, தானவ, ராக்ஷஸ, கந்தவர்வ, யக்ஷ, கின்னர, உரக, அப்ஸரஸ் கணங்களும் ஜல ஜந்துக்களும் பகீரதரைப் பின்தொடரும் கங்கையைப் பின் தொடர்ந்தார்கள்.  அவர் போகும் வழியெல்லாம் கங்கையும் போய் ஸமஸ்த பாபங்களையும் நாசஞ் செய்தது.  வழியில் ‘ஜன்ஹுரிஷி யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று.  அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார்.  அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்.  தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும் என்றார்கள்.  அதனால் அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.  

அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று.  பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். தன் முன்னோர்கள் எரிந்து கிடக்கும் இடத்திற்கு அவர் அவளை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் சாம்பலாயிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார்.  அந்தப் புண்ணிய ஜலம் சாம்பல் மேடை நனைத்தவுடன் ஸகர புத்திரர்கள் பாபம் ஒழிந்து உத்தமலோகங்களை அடைந்தார்கள். 

அத தத்பஸ்மனாம் ராசிம் கங்கா ஸலில முத்தமம்
ப்லாவயத் தூதபாப்மான: ஸ்வர்க்கம் ப்ராப்தா ரகூத்தம (43)

இது தசா புத்திகளும் ஸ்ரீமத் ராமாயண பாராயணமும், 1 சூரிய தசை என்ற புத்தகத்தில் உள்ளபடி ....