ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கல்மரம், tree fossil,

கல்மரம்

குஜராத்தில் சோப்பரி (Chobari, Gujarat 363520) என்ற ஊரின் அருகே மிகப்பெரிய கல்மரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.


கூகுள் புவிப்படத்தில் இதைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
https://goo.gl/maps/5ZNbGLJH5DB2,  22°15'31.2"N 71°11'32.6"E, 22.258652, 71.192381


இதே போன்ற அமைப்பில் அழகர்கோயில் மலையிலும் பாறைகள் காணக்கிடக்கின்றன.  அழகர்கோயில் மலைகளில் மரங்கள் போன்று காணக்கிடக்கும் பாறைகளை அறிவியல் அடைப்படையில் ஆராய வேண்டும்.





குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட நிகழ்ச்சியைப் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. எல்லாவற்றையும் விட மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் திருவிளையாடற்புராணம் பதிவு செய்துள்ளது. பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
பண்டைக்காலத்தில், இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில்  இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

குஜராத்தில் கிடக்கும் கல்மரத்தின் மேல் படிந்துள்ள பாறைகளை யெல்லாம் அகற்றிய பின்னரே அது கல்மரம் எனக் கண்டறிந்துள்ளனர். 
அதுபோல், அழகர்கோயில் மலையிலும் படத்தில் மரம் போன்று தோற்றமளிக்கும் பாறையின் முழுவடிவத்தையும் கண்டறிய வேண்டும். குறிப்பாக இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும். அதன் பின்னரே இது கல்லா? அல்லது கல்மரமா? என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வெள்ளி, 25 ஜனவரி, 2019

வேடசந்தூர் சாலையோரம் கிடக்கும் இது கல்லா? மரமா? கல்மரமா?

கல்லா? மரமா? கல்மரமா?

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது. 
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களைப் பதிவு செய்கிறேன்.


வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே இந்தப் பாறையை ஆனி 28 (12 ஜுலை 2017) புதன் கிழமை காலையில் பார்த்தேன்.
இது பார்ப்பதற்கு ஒரு மரத்தின் படிமம் போல் எனக்குத் தோன்றியது.  நான் பாதயாத்திரையின் போது படங்கள் எடுத்த காரணத்தினால் மற்ற யாத்திரிகள் எல்லோரும் எனக்கு முன்னே சென்றுவிட நான் மட்டும் காலதாமம் ஆகிவருவதை அறிந்து மற்றபிற யாத்திரிகர்கள் எனக்கு அடிக்கடி அலைபேசியில் பேசி என்னை விரைந்து வருமாறு அழைத்தனர்.  அதனால் நேரமின்னை காரணமாகவும், மண்ணைத் தோண்டிப் பார்க்கும் வகையிலான ஆயுதங்கள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தினாலும் என்னால் இந்தப் படிமத்தின் மறுபக்கத்தைத் தோண்டிப் பார்த்துக் கண்டறிய முடியாமல் போனது. 



இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும்.  இவ்விரண்டையும் கண்டறிந்தால் மட்டுமே இது ஒரு மரத்தின் படிமம் என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொப்பசாமி மலையில் பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ  கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைரசான்

வெள்ளி, 18 ஜனவரி, 2019

Theory of Tsunamis, Tsunami Glay Rocks near Siluwa, MP.

Theory of Tsunamis,
Tsunami Clay Rocks, near Siluwa,NH 34, 
Jabalpur, Madhya Pradesh 480888


பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்ட போது, தென்னிந்தியா முழுவதும் கடல்வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) மூழ்கடிக்கப்பெற்றுள்ளது. அதன்பின்னர் சிலகாலம் கழிந்த கடல்நீர் வற்றியுள்ளது. கடல்நீரால் அடித்து வரப்பட்ட கடல்களிமண் தென்னிந்தியா முழுதும் படிந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளன.

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லாம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்




அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 17 ஜனவரி, 2019

Theory of Tsunamis, பெருஞ்சுனாமியில் தோன்றிய வண்ணவண்ண பொக்குப் பாறைகள், நாக்பூர் அருகே தும்ரிகா(டு)

பெருஞ்சுனாமியில் தோன்றிய 
வண்ணவண்ண பொக்குப் பாறைகள்

மதுரைக்கு ஏழு நிறங்களில் ஏழுகடல்களும் வந்தன என்கிறது திருவிளையாடல் புராணம்.  கீழ்க்கண்ட படங்களில் உள்ள பொக்குப்பாறைகள் நாக்பூரிலிருந்து காசிக்கு (வாரணாசிக்கு)ச் செல்லும் வழியில், நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் தும்ரிகா(டு) என்ற ஊருக்குச் செல்லும் வழியில் கிடக்கிறன.

தேசிய நெடுஞ்சாலயை அகலப்படுத்துவதற்காக அருகில் உள்ள மலையைத் தோண்டி எடுத்து வந்து போட்டுள்ளனர்.  வேறுவேறு நிறங்களில் இருந்த களிமண் இறுகிப் பாறைகளாக மாறியுள்ளன.

ஏழுவேறு வண்ணமொடு ஏழுகடல்களும் வந்தன என்று திருவிளையாடற் புராணப் பாடல் குறிப்பிடுகிறது.  (பாடல்களைக் கீழே இணைத்துள்ளேன்).  திருவிளையாடற் பாடல் வரிகளுக்கு ஏற்ப வண்ணவண்ண நிறங்களில் இந்தப் பொக்குப்பாறைகள் உள்ளன.  எனவே, இந்தப் பாறைகள் பிரயளகாலத்தில் ஏற்பட்ட கடல்வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) உண்டான வண்ணக் களிமண் இறுகி, வண்ணப் பாறைகளாக உள்ளன என்பது கருத்து.




திருவிளையாடற் புராணம் (8). எழுகடலை அழைத்த படலம்
தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர். மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார். அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள். அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள். தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள். பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.

தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார். இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு, மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு, அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து எழுந்தன. கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர். கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன. பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின. இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில் அந்த குளம் விளங்கியது. 885. என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த் தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச் சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள். 886. தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான் முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள். 887. தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும் காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும் கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர் வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். 888. துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத் தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும். 889. காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக் கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம் பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல். 890. தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும் மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். திருவிளையாடற் புராணம் பாடல்கள் - நன்றி தமிழ் இணையப் பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/slet/l41d0/l41d0son.jsp?subid=2599 )

ஆகாய கங்கை (பகுதி 1)

கட்டுரை ஆசிரியர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

“நீரின் றமையா துலகு“ என்பது வள்ளுவன் வாக்கு. இந்த உலகிற்கு இவ்வளவு நீர் எங்கிருந்து எப்போது எப்படி வந்தது? என்பதை விளக்க முற்படுவதே “ஆகாய கங்கை“ என்ற இக்கட்டுரையின் நோக்கம்.

அண்டத்தில் அனேகமான கோள்கள் உள்ளன. அவற்றில் எதிலும் பூமியில் உள்ளது போன்ற கடல்நீர் இல்லை. பூமிக்கு மட்டும் கடல்நீர் எப்படி வந்தது? என விளக்க முயலும் இக் கட்டுரையானது மூன்று பகுதிகளைக் கொண்டது.

கட்டுரையின் முதற்பகுதியானது ஐயா சி.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரைகளின் சுருக்கம் ஆகும். இவர் அரியபல அறிஞர்களின் அறிவியல் கருத்துத்துகளின் அடிப்படையில் “பூமியில் 70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் எவ்வாறு வந்தது?“ என விளக்கி எழுதி, விஞ்ஞானிகளால் விடைகாணப்பட வேண்டிய சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.
“பூமியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் எவ்வாறு வந்தது?“ என்பதை விளக்கும் ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகளில் உள்ள விஞ்ஞானிகளின் கருத்துகளுக்கு இயைபு உடைய பல கருத்துக்களைப் பாரததேசத்தில் வாழ்ந்த மெஞ்ஞானிகள் எழுதி வைத்துள்ளனர். இந்திய மெஞ்ஞானிகளின் கருத்தை இரண்டாவது பகுதியாக இணைத்துள்ளேன்.
விஞ்ஞானிகளின் கருத்துக்களையும், மெஞ்ஞானிகள் கருத்துகளையும் அஞ்ஞானியான நான் உணர்ந்து கொண்டதை கட்டுரையின் மூன்றாம் பகுதியாக இணைத்து வெளியிடுகிறேன்.

மேற்கண்ட இந்தக் கட்டுரையின் மூன்று பகுதிகளின் வழியாக அண்டத்தில் வேறு எங்கும் காணமுடியாத ஒரு அற்புதக் கோளாக, கடல்நீரும் நன்னீரும் நிறைந்த கோளா, கோடானுகோடி உயிர்கள் வாழும் கோளாக நாம் வாழும் பூமியானது எவ்வாறு மாறியது என்பதை அறிந்து கொள்ள முற்படுவோம்.

முதற்பகுதி
(இது கனடா வாழ் ஐயா சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear), அவர்களின் கட்டுரை: 79 இன் சுருக்கம். இதன் மூலக் கட்டுரையை ஐயா அவர்களது https://jayabarathan.wordpress.com/2008/04/24/water-planet-earth/  
தளத்தில் காணலாம்.)
அண்டத்தில் பூமியில் மட்டும்
கல்தோன்றி மண் வளமாகிப் புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம் ஆனதெப்படி ?
சூரியக் கதிரொளி மின்னலில் வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை தண்ணீர் ஆனதா ?
வால்மீன்களின் டியூடிரியம், ஹைடிரஜன் பின்னத்தையும் [Deuterium Hydrogen Ratio (D/H)] அடுத்து ஆர்கான் நீராவி விகிதத்தையும் [Argon Water Ratio (Ar/H2O)] விண்ணுளவி மூலம் அறிந்ததில் பூமியில் மோதிப் பொழிந்த நீர் வெள்ளம் 15% என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆதி காலத்தில் சூரிய வாயுக்கள் குளிர்ந்து உண்டான கரிக்கற்கள் (Carbonaceous Chondritic Material – Condensed from Solar Hot Gases) எரிந்து 10% நீர் வெள்ளம் பூமியில் சேர்ந்தது.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்மயம் நிரம்பிய விண்கற்களும், வால்மீன்களும் பிள்ளைப் பிராயப் பூமியில் மோதி நீர் வளமாக்கின என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் ! அடர்த்தியாகப் ஹைடிரஜன் வாயுப் படுகை எரிமலை ஆக்ஸைடுகளுடன் (Oxides from Earth’s Mantle) இணைந்து பேரளவு கடல் நீர் வெள்ளம் பூமியின் சுய உற்பத்தியில்தான் உண்டாகியிருக்க வேண்டும் ! என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது. பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !” என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் ! தோற்ற காலத்திலிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க வேண்டும் ! என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
விண்வெளி நிபுளா முகிலில் நீர் உண்டாக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு கண்டுபிடிப்பு
ஒளிமந்தைகள், விண்மீன்கள் உருவாக்கும் நிபுளா முகிலில் (Nebula Gas Cloud) 2011 ஆண்டில் விண்ணோக்கி மூலம் ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் தற்போது அறிந்துள் ளார்கள். கண்ட விண்வெளி அரங்கம் “ரோ ஓஃபியூச்சி” (Rho Ophiuchi) விண்மீனுக்கு அருகில் 400 ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. அதனோடு ஹைடிரஜன் வாயு இணையும் போது நீர் உண்டாவதால், ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வானியியல், வேதியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளுக்கு மிகவும் தேவையான ஒரு மூலக்கூறு. பேரளவு குளிரான -250 டிகிரி செல்ஸியஸ் விண்வெளிப் பகுதியில் உள்ள நிபுளா முகிலில் மிகச் சிறிய அளவில் இருக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிபுளா அரங்கில் உள்ள திரட்சியான அகில வாயு, (Cosmic Gas) தூசி ஆகியவை விண்மீன்கள் ஆக்கும் தகுதி பெற்றவை. அப்படி உருவாகும் போது அத்துடன் நெருங்கித் தொடரும் ஆக்ஸிஜன், நீர் மூலக்கூறு உற்பத்திகள் உயிரினத் தோற்றத்துக்குக் மூல காரணிகளாக உருவாகுகின்றன. இந்த இரசாயன மூலக்கூறைக் காட்டிய ஏபெக்ஸ் விண்ணோக்கி (APEX – AtacamaPathfinder Experiment Telescope) தென் அமெரிக்காவில் உள்ள சில்லி நாட்டில்5000 மீட்டர் 16, 000 அடி உயரத்தில் இருக்கும் மலைப் பீடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
பூமியில் 70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் விண்வெளி வாயுக் கோள்கள் மூலம் வந்திருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. இந்த நிபுளா முகில்களில் பொதுவாக இருப்பவை பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயுவும் மற்றும் சிற்றளவில் உதிரியாக மற்ற இரசாயன மூலங்கள் மட்டுமே. இப்போது வானியல் குழுவினர் ரோ ஓஃபியூச்சி முகிலிலிருந்து ஹைடிரஜன் பெராக்சைடு ஒளிவீசி தன் முத்திரையை யிட்டுள்ளது. விண் வெளியில் அகிலத் தூசித் தூள்களின் மேற்பகுதியில் ஹைடிரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து ஹைடிரஜன் பெராக்ஸைடு உருவாகி வருவதாகத் தெரிகிறது. பிறகு அத்துடன் மிகுதியாக ஹைடிரஜன் வாயு இணைந்து நீர் மூலக்கூறு உண்டாகுகிறது என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.
நீர் வெள்ளம் பூமியில் தோன்றியது எப்போது ?
பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன !
சூரிய குடும்பம் தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன !
விஞ்ஞானிகள் பூமியிலே நீர் வெள்ளம் தோன்றி 4.3 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியான சான்றுகளுடன் இப்போது கூறுகிறார்கள் !
ஆனால் தற்போதைய ஆராய்ச்சி ஒன்று மாறாக 400 மில்லியன் ஆண்டுக்கு முன்புதான் நீர்வளம் பூமியில் உண்டானது என்று சொல்லி இருக்கிறது !
பூமி தோன்றிய 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் சூழ்வெளி வாயு மண்டமும், நீர் வெள்ளக் கடலும், நிலையான பூதளத் தட்டும், பூமிக்குக் கீழ் 10 கி.மீ. ஆழத்தட்டு ஆகிய முன்றும் உண்டாகி விட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 4.3 பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூகோளத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உகந்த மூலாதார வசதிகள் உதித்து விட்டன என்று விண்ணுயிரியல் விஞ்ஞானி மோஜிஸிஸ் (Mojzsis) கூறுகிறார் !
சூரிய குடும்பத்தில் மட்டும் ஒன்பது கோள்களும், பனிரெண்டு துணைக் கோள்களும் ஆராய்ச்சிக்கு உதவிட உள்ளன. அவற்றில் பூமி ஒன்றில் மட்டுமே உயிரின விருத்திக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டாகி நிலை பெற்று விட்டன. ஒருசில கோள்களிலும், மற்றும் சில துணைக் கோள்களிலும் ஒரு யுகத்தில் நீர்வளம் இருந்ததற்குச் சான்றுகள் காணப் படுகின்றன.
ஆனாலும் பூமி மட்டும்தான் பேரளவு நீர் வெள்ளத்தை பல மில்லியன் ஆண்டுகளாய் நிலையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.
வியாழக் கோளின் துணைக் கோளான ஈரோப்பாவில் (Jupiter’s Satellite Europa) நீர்க்கடல் இருந்ததாக சமீபத்தில் விண்ணுளவி ஆராய்ந்து தகவல் அனுப்பியுள்ளது. அதனால் அங்கும் உயிரின வாழ்வுக்குத் தகுதி இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது !
பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது? நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா! பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.
வால்மீன்கள் மோதிப் பூமியில் நீர் வெள்ளப் பொழிவு !
நமக்குத் தெரிந்த மூன்று வால்மீன்களான : ஹாலி, ஹயாகுடேக், ஹாலி-பாப் (Comets : Halley, Hyakutake & Hale-Bopp) மூன்றிலும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. கடல் நீரில் காணப்படும் டியூடிரியம் போல் (Deuterium – கன ஹைடிரஜன்) இரு மடங்கு அளவு அம்மூன்று வால்மீன்களில் உள்ளன! அதாவது நீரில் பேரளவு சாதா ஹைடிரஜனும் சிறிதளவு அதன் ஏகமூலமான கன ஹைடிரஜனும் 6500:1 ஒப்பமைப்பில் கலந்துள்ளது. (Heavy Hydrogen called Deuterium is an Isotope of Light Hydrogen) சாதா ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் உள்ளது. டியூடிரியம் அல்லது கன ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்துள்ளது. அந்த மூன்று வால்மீன்களின் நீர் வெள்ளம் பூமியில் சேரவில்லை என்று கருதும் விஞ்ஞானி களும் உள்ளார்கள்!
கன ஹைடிரஜன் 6500:1 கலந்துள்ள நீர் வெள்ளம் கொண்ட வேறு வால்மீன்கள் பூமியில் விழுந்து நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உள்ளார்கள்!
முரணாக அதிக சதவீத டியூடிரிய நீர் வெள்ளம் கொண்ட வால்மீன்கள் பூமிமீது நீரைப் பொழிந்திருந்தாலும் ஏற்புடையதே ! ஏனெனில் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு (ultra-Violet Photo-Dissociation ) மூலம் கன ஹைடிரஜன் பின்னால் இழப்பாகிப் பூமியில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. கடல் நீரின் சராசரி டியூடிரியம் கொள்ளளவு அடிப்படையில் கருதினால் பூமியின் நீரளவில் (15% – 30%) பங்கு வால்மீன்கள் மோதி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.
விண்கற்கள் விழுந்து பூமியில் நீர் வெள்ள நிரப்பு !
வால்மீன்களைப் போன்று சில எறிகற்களும், விண்கற்களும் (Meteorites & Asteroids) விண்வெளியில் “நீர் தாங்கியாக” (Water Bearer) கருதப்படுபவை ! அவையும் பூமி உண்டான ஆரம்ப காலத்தில் பூமிமேல் ஏராளமாக விழுந்துள்ளன. அவற்றில் பனிப்பாறைகளாய்த் தொத்திக் கொண்டிருக்கும் பகுதியில் 20% நீர் வெள்ளம் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது. விண்கற்கள் பரிதிக்கு அப்பால் எத்தனை மைல் தூரத்தில் உள்ளனவோ அதைப் பொருத்தது அவற்றின் நீர் கொள்ளளவு. அவற்றின் நீர்க் கொள்ளளவை உறுதியாக அறிவது சிரமமானதால், விண்கற்கள் பூமியில் கொட்டிய நீரளவை ஊகிப்பது இயலாது ! பிரபஞ்சத்தில் தீர்வு செய்ய முடியாத பல புதிர்கள் இருப்பது போல் பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படிப் பெருகியது என்பதற்கும் உறுதியான விளக்கத்தை விஞ்ஞானிகள் சொல்ல முடியவில்லை !

ஐயா சி.ஜெயபாரதன் அவர்களது மேற்கண்ட கட்டுரையில் உள்ள விஞ்ஞானிகளின் கருத்துகளுக்கு இயைபு உடைய பல கருத்துக்களைப் பாரததேசத்தில் வாழ்ந்த மெஞ்ஞானிகள் எழுதி வைத்துள்ளனர். பாரத்தேச மெஞ்ஞானிகளின் கருத்தை இரண்டாவது பகுதியாக விரைவில் பார்ப்போம்... தொடரும்....

அன்பன்
கி.காளைராசன்

“வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று“
“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு“

சனி, 12 ஜனவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

திருப்பூவணம் லாடனேந்தலில்
தொல்லியல் தடயங்கள்


திருப்பூவணம் லாடனேந்தலில் தொடரி தண்டவாளத்திற்குக் கீழே தோண்டி ஒரு தரைப்பாலத்தை அமைக்கும் பணியில் இரயில்வே ஈடுபட்டுள்ளது.
பாலம் அமைப்பதற்காகத் தோண்டிய இடத்தில் சற்று தொலைவில் பழைமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது இந்த இடத்தில் தோண்டும் போது, தரைமட்டத்திலிருந்து சுமார் 6அடிக்கும் கீழே சுமார் 4அடி அகலத்திற்கும் 2அடி உயரத்திற்குமான கூம்புவடிவிலான செங்கல் கட்டுமானம் காணக்கிடக்கிறது. அருகே கருப்பு சிவப்பு நிறத்திலான பானைஓடுகளும் கிடக்கின்றன.

கீழடி கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது போன்று இதுவும் ஒரு முக்கியமான தொல்லியல் நகரமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இங்கு அடக்கடுக்காப் பெட்டிங்முறையில் (graded bedding) மண்திட்டுக்கள் படிந்துள்ளன. எனவே இது பிரளயகாலத்தில் ஏற்பட்ட பெருஞ்சுனாமியினால் அழிந்த நகரத்தின் எச்சமாக இருக்கலாம் என்பது எனது யூகம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்























அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை

சுனாமியினால் தோன்றிய பாறைகள்

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது. 
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

தேசியநெடுஞ்சாலை 38இல், பந்தல்குடியில் இருந்து சிந்தலக்கரை செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் ஏதோவொரு  கருப்பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. 
இப்போது இவ்விதப் பாறைகள் பல்வேறு காரணிகளால் சிதிலமடைந்து வருகின்றன என்பது எனது கருத்து.

வியாழன், 10 ஜனவரி, 2019

Theory of Tsunamis, பாறைகள் பலவிதம் (படம் 1, அழகர்கோயில்)

பாறைகள் பலவிதம் (படம் 1)


“கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“யின் பார்வையில் பாறைகள் பலவிதம் (படம் 1)

Kalairajan Krishnan Melurஇல் இருக்கிறார்.
10 jun 2017, முற்பகல் 7:23 ·


கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப், பூமியைத் துளைத்துக் கொண்டு, பூமியின் உள்ளே சென்றுள்ளது.  இவ்வாறு கங்கன் மோதிய இடத்தில் உண்டான விளிம்புப் (Rim) பகுதியே வட்டவடிவமான இமயமலைத் தொடர் உருவாகி உள்ளது.   கண்டப்பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.

கங்கன் பூமியில் மோதிய போது தெரித்து விழுந்த பாறைக்குழம்புகளால்  திருப்பரங்குன்றம் மலை, திண்டுக்கல் மலை, அழகர்கோயில்மலையின் அடிப்பகுதி, யானைமலை, திருமயம் மலை, திருச்சிராப்பள்ளி மலை முதலான கிரானைட் மலைகள் உருவாகி உள்ளன.

பூமியின் உள்ளே சென்ற கங்கன் என்ற விண்கோளின் பாறைக் குழம்புகள் பிதுங்கி வெளி வந்த காரணத்தினால் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அமெரிக்காவில் ஆல்ப்ஸ்மலைத் தொடர்கள் முதலான நீண்ட மலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.  உலகில் உள்ள கிரானைட் மலைகள் எல்லாமும் கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் உருவானவை .

கங்கன் பூமியின் மோதிய காரணத்தினால் பூமியின் மேற்பகுதி சிதறுண்டு பிளவுபட்டுக் கண்டப்பெயர்ச்சி உண்டாகிக் கண்டங்களாகப் பிரிந்துள்ளது.

இமயமலைத்தொடருக்கு நேர்எதிரே, பூமியின் மறுபக்கத்தில் நிலப்பரப்புகள் ஏதும் இல்லாமல் போனது.  மேலும் Ring of Fires என்ற எரிமலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.

கங்கன் விழுந்த காரணத்தினால் பூமியின் எடை  கூடியுள்ளது. 

கங்கள் விழுந்து இமயமலைத்தொடரும் மற்றும் பல கிரானைட் மலைத் தொடர்களும் உருவான காலமே பூமியில் “கல்தோன்றிய காலம்“ என்பது எனது கருத்து.
-------------------------------------------------------------------------------------------------------------------


Ganga, a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl


கங்கை என்ற ஒரு விண்நீர்க்கோள் இமயமலையின் பள்ளத்தாக்கில் இறங்கியுள்ளது.  இது பூமிக்குள் நுழையும் போது அதிலிருந்த எரியக்கூடிய பொருட்கள் தீப்பிடித்து எரிந்து விழுந்த காரணத்தினால் பூமியில் மிகப் பெரிய பாலைவனங்கள் தோன்றியுள்ளன.

Ganga, a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl
கங்கை என்ற விண்ணீர்க்கோளில் வேகமாகப் பூமியில் இறங்கிய இடம் தக்களமேகன் பாலைவனமாக உள்ளது.  கங்கை வேகமாகப் பூமியில் இறங்கிப் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால், தக்களமேகன் பாலைவனம் மிகவும் பள்ளமான பகுதியாக உள்ளது.  கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த தண்ணீரின் ஒருபகுதி தக்களமேகன் பாலைவனம் வழியாகப் பூமிக்குள்ளே சென்று வெளியே வந்த இடம் மிகவும் ஆழமான மெரினாடிரன்ச் கடற்பகுதியாக உருவாகியுள்ளது.

கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த  களியும் உப்புநீரும் இமயமலையின் மேல் படிந்துள்ள காரணத்தினால், இமயமலையின் மேல்பகுதி ஒரு மடிப்புமலைத் தொடராக மாறியுள்ளது.  மேலும் துருக்கி,  பர்மா, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, தாய்லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும், மற்றும் உலகில் உள்ள (sedimentary rocks) பொக்குப் பாறைகளும் உருவாகியுள்ளன.

பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது.  பூமியில் கடல்கள் உப்புக்கடல்களாக மாறியுள்ளன.  

கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் இறங்கிய காரணத்தினால் உருவாகி உள்ளன. இதுவே பூமியில் “பொக்குப்பாறைகள் தோன்றிய காலம் ”என்பதும் எனது கருத்து.
----------------------------------------------------------------------------------------------------------

Huge Tsunami swiped the entire South Indian sub-continent, Burma, Thailand, Indonesia. 

ஊழிக்காலத்தில், பொக்குப்பாறைகளால் உண்டான இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளில் உள்ள குறைபாடு உள்ள இடங்களில் (defaults)  பொக்குப்பாறைத் திட்டுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுந்து கடலில் மூழ்குவதால் நிலநடுக்கங்களும் அதனைத் தொடர்ந்து கடல்வெள்ளமும் (ஆழிப்பேரரை, பெருஞ்சுனாமிகளும்) உருவாகின்றன என்பதும் எனது கருத்து.

Tsunami deposited sedimentary rocks

அந்தமான் அருகே பொக்குப்பாறைகளால் ஆன மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகிப் பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  கடலால் அழிந்துள்ளது.  முன்பு இருந்த நிலப்பரப்பில்மேல் கடல்வெள்ளத்தால் (பெருஞ்சுனாமியினால்) அடித்துக் கொண்டுவரப்பட்ட மண் திட்டுக்கள் படிந்து இப்போதுள்ள நிலப்பரப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு  பெருஞ்சுனாமிகளால் அடித்துவரப்பட்ட கடல்மண் பூமியின் மேல் படிந்த காலத்தையே தமிழ் இலக்கியம் “மணல் தோன்றிய காலம்“ எனக் குறிப்பிடுகிறது என்பதும் எனது கருத்து.

Is it Tsunami rocks? Melur-Alagarkoil Road
அழகர்கோயில் செல்லும் வழியில் இந்தப் பாறையைப் பார்த்தேன். பார்ப்பதற்கு வெட்டிய மரத்தின் அடிப்பகுதிபோல் தோன்றியது. ஆனாலும் அருகில் சென்று பார்த்தபோது பாறைபோல் இருந்தது.

இது மரமா? கல்லா? கல்மரமா? என என்னால் உறுதி செய்ய இயலவில்லை.
“மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவித் தேவையான சான்றாக இந்தக் கல்மரம் இருக்குமா?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
10 Jan 2017.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கீழடி அருகே பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

கீழடி அருகே 
லாடனேந்தலில் 
பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

தினமலர் செய்தி  Added : ஜன 08, 2019  00:01 


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. லாடனேந்தலில் மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. கடந்த மாதம் இப்பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர், அப்பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.தற்போது பழங்கால கட்டட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சுவர்களில் உள்ள செங்கல் நீள்வாக்கிலும், உயரம் குறைந்தும் காணப்படுகிறது. சுவர் அருகே மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகளும் இருந்தன. தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை. கீழடியை தொடர்ந்து லாடனேந்தல், கீழடி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்வதுடன், சுரங்க பாதை பணியின் போது கிடைத்து வரும் பொருட்களை பாதுகாக்க வேண்டும்.

தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607
-------------------------------------------------------------------------------------------------

ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
மாலைமலர் செய்தி
பதிவு: ஜனவரி 09, 2019 23:27

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.maalaimalar.com/News/District/2019/01/09232736/1222131/ancient-discovery-of-inventory-during-the-railway.vpf
---------------------------------------------------------------------------------------------------------------

லாடனேந்தல் அருகே இருப்புப்பாதைக்காகத் தோண்டிய போது சிலமாதங்களுக்கு முன்னர் உறைகிணரு கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது, தொல்லியல் சுவர் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

தோண்டத் தோண்டத் தமிழரின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகள் காணக்கிடக்கின்றன. தமிழரின் தொன்மையைத் தமிழகஅரசு முறையாக ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்