புதன், 29 ஜூலை, 2020

கடலூர் பாறைகள் எவ்வாறு உருவாகின ?

கடல்கோளும் 
கடலூர் பாறைகளும்


கடலூர் பாறைகள் எவ்வாறு உருவாகின ?




பல்வேறு நிறங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் உள்ள வெவ்வேறு மண்கட்டிகள், எவ்விதமான நிற மாற்றமோ வடிவமாற்றமோ ஆகாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டுள்ளன !

இவை வெப்பமாறுதலால் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள முடியாது !
இவை பூமியின் மேற்பரப்பில் கிடக்கின்ற காரணத்தால் புவியழுத்தமும் காரணமாக இருக்க முடியாது !

அப்படி யென்றால், இவற்றை இப்படிப் பாறைபோல் ஒட்ட வைத்த பசை எது ?
ஆற்றில் ஓடும் நல்லதண்ணீரால் மண்ணும் மணலும் ஒட்டிக் கொள்ளுமா ?
குளத்துக்கு அடியில் களிமண் கிடக்கும். அதுபோல் கடலுக்கு அடியிலும் ஒருவகைக் களிமண் கிடக்கும்.

ஊழிக்காலத்தில் நிலத்திட்டுகள் பிரண்டு விழுவதால் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து கடல்வெள்ளமும் (சுனாமி) உருவாகின்றன.   சுனாமியின் போது ஆழ்கடலின் அடியில் கிடக்கும் கடற்களிமண் கடலலை யுடன் நிலத்திற்கு வந்து கல்லையும் மண்ணையும் சேர்த்து ஒட்டி இது போன்ற பாறைகளை உருவாக்கி உள்ளது.  இது குறித்த அறிவியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள மண்மலையில் இது போன்ற பாறைகளைக் காணலாம்.  சுனாயினால் நிலத்திற்கு வந்த கடல்நீர் மீண்டும் வடியும் போது ஆற்றின் கரையில்  இந்த மண்மலையை உண்டாக்கி உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


ஞாயிறு, 12 ஜூலை, 2020

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா? - புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா?
புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.




Singanenjam Sambandam, Kalairajan Krishnan மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
12 ஜூலை, 2017 · 
கல் மரமா.........மரமா......

நம் நண்பர் காளைராஜன் ஐயா அவர்கள் கீழேயுள்ள படத்தை அனுப்பி , வேடசந்தூர் அருகே உள்ள இது " கல்லா ....மரமா " எனக் கேட்டிருக்கிறார். அதற்கான பதிலை கீழே தருகிறேன் .

வணக்கம் காளை ஐயா ,
கல் மீது தாங்கள் கொண்டுள்ள காதலுக்குத் தலை வணங்குகிறேன்.
நீங்கள் படமே அனுப்பாமல் வேடசந்தூர் அருகே கல்மரம் இருக்கிறது என்று எழுதியிருந்தாலும், நான் “இல்லை..இல்லை....இருக்க வாய்ப்பில்லை” என்றுதான் எழுதியிருப்பேன். காரணம், படிவப் பாறைகளில் மட்டுமே தொல்லுயிர் எச்சங்கள் (ஃ பாசில்கள்-FOSSILS) கிடைக்கும். வேடசந்தூர் பகுதியில் படிவப் பாறைகள் கிடையா.
பாறைகள் பொதுவாக மூன்று வகை .

1. பாறைக் குழம்பு (MAGMA) குளிர்ந்து இறுகி உருவாகும் அழற்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ( IGNEOUS ROCKS) .
2. நீர்நிலைகளில் படியும் கூழாங்கற்கள், குறுங் கற்கள் , மணல், குறுமணல் , களிமண் போன்றவை இறுகி கெட்டிப்பட்டு உருவாகும் படிவப் பாறைகள் (SEDIMENTARY ROCKS).
3. மேற்சொன்ன இருவகைப் பாறைகளும் மிகுந்த அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு உருமாறி உருவாகும் உருமாற்றுப் பாறைகள் ( METAMORPHIC ROCKS)
இவற்றில் படிவப்பாறைகள் தவிர மற்ற இருவகைப் பாறைகள் மிக அதிக வெப்பத்தில் உருவாவதால் தாவரங்களோ மற்ற உயிரினங்களோ இவற்றில் படித்திருக்க வாய்ப்பே இல்லை.( MICROORGANISMS EXCLUDED).

ஆதலின் நீங்கள் அனுப்பியுள்ள படம் கல்லோ கல் மரமோ அல்ல, மட்கி வரும் மரமே என உறுதிபட கூறலாம்.
தமிழகத்தில் படிவப் பாறைகள் மற்றும் அதன்பின் படிந்த படிவங்களை காட்டும் வரைபடம் இணைத்துள்ளேன். இந்த இடங்களைத் தவிர வேறு எங்கேயும் ஃபாசில்கள் இருக்காது..

இராகவன் சிவராமன் அருமையான தகவல் ஐயா.. மிக்க நன்றி ஐயா
Singanenjam Sambandam நன்றி தம்பி
Mana Valan திருப்பதி திருவக்கரை இந்த இடங்களில் உள்ள கல்மரம்?
Singanenjam Sambandam வணக்கம் மணவாளன் .....திருவக்கரையில் உள்ள கல்மரங்கள் CUDDALORE SANDSTONE எனும் படிவப் பாறைகளில் படிந்துள்ளன . திருவக்கரையில் மட்டுமல்ல , நெய்வேலி, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள CUDDALORE SANDSTONE பாறைகளிலும் இவை உள்ளன. திருவக்கரை பகுதியில் CUDDALORE SA…மேலும் பார்க்கவும்
Srinivasan Rajagopal Kalai rajan sir may be showing the photograph of cuddalore sandstone area withan exposed wood fossil.The photo from vedasandur is likely to be wrong.The red colured soil tone of the photo is tempting me to say this . But the rock fragments scattered appear to be non sedimentary. As Singanenjam sir is telling it a decaying tree fell down during the "vardha Puyal" .
Kalairajan Krishnan Sir, it is not a decaying tree, but a rock. I suspected that it may be a tree fossil.
Srinivasan Rajagopal the tirumala area is part of cuddapah super group of rocks with quartzites predominantly.it is of proterozoic age with 2500 to 1500 MY old. there was no possibility of profuse vegetation at that time.
Srinivasan Rajagopal Singanenjam sir's tamizhakkam is amazingly beautiful and enjoyable to reading. A full fledged book on geology atleast for the immediate generation can be done by him only as on today in Tamilnadu, All possible secretarial assistance iam ready to do .Kadavulin Arulum needa Ayulum sirkku irukkum.
Vijay Kumar True sir, Thamizh konji vilaiyadukirathu geologyai thamizhil padika enna oru makilchi...
Saravana Kumar S Geo Thanks sir support to tamil geology student.... because I am also tamil student....i am happy to read from tamil geology
Singanenjam Sambandam சீனு, நம்மிடையே உள்ள நட்பின் பயனாய் நீங்கள் நல்லுரை வழங்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி. நிச்சயமாக நல்லன செய்யலாம்.
Singanenjam Sambandam விஜயகுமார், பூபதி , சரவணகுமார் அனைவருக்கும் நன்றி.
Mana Valan வணக்கம் இது கல்மரம் தானே சார்.
Vijay Kumar Mele ulla photo natural arch, kalmaram kidaiyathu. When rocks are subjected to erosion by natural agents like wind and water natural archs form
Boopathi Duraisamy What a beautiful reply in Tamil. Translating geology from English to Tamil, Sir is always sir.
Singanenjam Sambandam இல்லைங்க மணவாளன் , இது "NATURAL ARCH" விளக்கம் கீழே....திருப்பதி – திருமலை தோரணக் கல்
நேச்சுரல் ஆர்ச் என ஆங்கிலத்திலும் ஷிலா தோரணம் என்று தெலுங்கிலும் ( ஷிலா என்றால் பாறை அல்லது கல் என்று பொருள்) அழைக்கப்படும் தோரணக்கல் திருப்பதி-திருமலையில் உள்ளது. …மேலும் பார்க்கவும்
7
Kalairajan Krishnan வணக்கம் ஐயா, தங்களது அன்பிற்கும் விரிவான விளக்கத்திற்கும் நன்றி யுடையேன். நான் வேடசந்தூர் அருகே பார்த்துப் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளது 100% கல். நான் அது கல் என்பதை உறுதி செய்த பின்னரே படம் எடுத்தேன்.
அது கல்மரமா? என்பதுதான் ஐயம்.
Singanenjam Sambandam தவறான புரிதல் ஐயா......அங்கே கல்மரம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஒரு மாதிரி எடுத்து வையுங்கள். சென்னை வரும்போது பார்க்கலாம்.
Kalairajan Krishnan அப்படியே செய்கிறேன் ஐயா.
Mana Valan விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா.
Senguttuvan Govindasamy விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
Singanenjam Sambandam ஆமாங்க இளவேனில் (உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது) , FOSSIL FUELS என்று அழைக்கப்படுகிற பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பெட்ரோ லியம் , எரிவாயு இவை எல்லாமே படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். நம் மாநிலத்தில் படிவப் பாறைகள் உள்ள இடங்களை படத்தில் காட்டியுள்ளேன்
இளவேனில் சௌ நன்றி!! :)
பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா?
Singanenjam Sambandam விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
ஆமாங்க செங்குட்டுவன் , அவ…மேலும் பார்க்கவும்
Singanenjam Sambandam பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா? கீழேயுள்ள வரைபடத்தைப் பாருங்கள் இளவேனில்
Srinivasan Rajagopal Vedasandur zoomed photo was seen again today with cool mind and it is a weathered gneissic rock which is banded closely. the rock is also jointed closely resulting in a ribbed sectional appearance. Theses closely spaced joints are parallel to foliation .
Kalairajan Krishnan பாறையைத் தோண்டித் தனியாக எடுத்து, மண்ணில் புதைந்துள்ள அதன் மறுபக்கத்தைப் பார்த்தால், அதன் முழு வடிவம் தெரிய வரலாம்.
Srinivasan Rajagopal it not a decayed tree Iam very sorroy for the wrong analysis made yesterday.
Srinivasan Rajagopal Lignite occurs at shallow depth 100m to 150m at from the surface at Neyveli .that is why opencast mining is done to mine them.Further south in mannagudi basin Lignite occurs at about 300m depth . mannargudi town is floating in Lignite below.( hence it can not be mined). At Ramanathapuram basin it occurs at 425 to 450m depth from the surface.
Srinivasan Rajagopal The oil and gas occurs at even grater depth in cauvery basin ( nagapattinam and ramanathapuram-on shore and offshore) at even 1 to 1.5 Km deep. which may be depth of the basement crystalline rock also.. My ONGC friends told that thy got in the fractures of basement rock also may be as migratory formation.Singanenjam sir may correct the above information if needed.
Thiagarajan Mcc Excellent
Singanenjam Sambandam மிக்க நன்றி சீனு . காளை ஐயா அவர்கள் கொஞ்சம் sample கொண்டு வந்தால் ஐயம் திரிபுக்கு இடமின்றி தெளிவாக்கிவிடலாம்.
------------------------------------

செவ்வாய், 7 ஜூலை, 2020

உருண்டைப் பாறைகள் எப்படி உருவாகின?

உருண்டைப் பாறைகள் எப்படி உருவாகின?

















ஆற்றில் அடித்து வரப்படும் கற்கள் தேய்ந்து உருண்டை வடிவிற்கு மாறிக் கூலாங்கற்களாக கிடக்கின்றனர் என்கின்றனர்.

அப்படியானால் திண்டுக்கல் பழநி நெடுஞ்சாலையில் மலை ஓரங்களில் கிடக்கும் இந்த உருண்டைப் பாறைகள் எப்படி உண்டாயின ?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

08.07.2017  முகநூல் நண்பர்களின் பதில்களைக் கீழே இணைத்துள்ளேன்.

Chembiyan Valavan திண்டுக்கல்லில் சிறு மலை காட்டாற்று பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் ஐயா
Chembiyan Valavan பழனி கொடைக்கானல் பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் ஐயா
Chembiyan Valavan பழனியில் ஆறு உண்டு
Kalairajan Krishnan ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதனால் என்றால் அருகில் உள்ள மற்றபிற கற்களும் இவற்றைப் போன்றே உருண்டையாக ஆகவில்லையே !
Kasi Krishna Raja Most probably they are displaced stones from cairn circles...pleople displace them without knowing the significance..I have seen mainly cairn circle stones in perfect round shapes.
Chembiyan Valavan .I have seen mainly cairn circle stones in perfect round shapes. ///இவை அதிகம் சிறுமலை ஓடைகளில் பார்த்து இருக்கின்றேன் ஐயா
Chembiyan Valavan திண்டுக்கல் தாண்டி செந்துறை பகுதிகளிலும் பார்க முடியும்
பல்லவராயன் ராஜாமணிகுமரேசன் திருச்சியில் சின்னமிளகுபாறை,பெரிய மிளகுபாறை ரெம்ப சூப்பர்
Kalairajan Krishnan சின்னமிளகுபாறை, பெரிய மிளகுபாறை. அருமையான பெயர்கள்.
Singanenjam Sambandam காளை ஐயா, வழக்கம்போல் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயல்கிறீர்கள். THESE ARE NOT PEBBLES. THESE ARE PRODUCTS OF PHYSICAL WEATHERING, MOSTLY EXFOLIATION.
Kalairajan Krishnan குழப்பம் எனக்கு இல்லை. எனது கேள்வி தெளிவானது.
"திண்டுக்கல் பழநி நெடுஞ்சாலையில் மலை ஓரங்களில் கிடக்கும் இந்த உருண்டைப் பாறைகள் உருண்டையாக எப்படி உண்டாயின ?"
Singanenjam Sambandam EXFOLIATION என்று எழுதியுள்ளேனே ஐயா
DrGopi K G Aiyer GO TO STUDIES ON GEOLOGY for better scientific knowledge
Kalairajan Krishnan 'கற்றலின் கேட்டல் நன்று". எனவே கற்றறிந்தோரிடம் கேட்டறிந்து கொள்வேன்.
Vinaitheerthan Vino சுனாமி?
Kalairajan Krishnan பத்துப் பதினைந்து பாறைகளைப் பார்த்துவிட்டுச் சும்மா சொல்லமுடியாது. இது போன்ற பாறைகள் கிடக்கும் இடங்களை யெல்லாம் கண்டறிந்து mapping செய்ய முயற்சிக்கிறேன் ஐயா.
Singanenjam Sambandam 1 : 50000 MAPPING பணி முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஐயா.
Vijayaraja Kasukali Look like they are eggs been there for millions years turning in to rocks maybe
Govindaswami Venkataraman What is your opinion
Singanenjam Sambandam Eggs do fossilize.....I agree; for example the dinosaur eggs we found in Ariyalur area and in Gujarath state ( see picture). But what are shown in the photograph are weathered rocks only.
Srinivasan Rajagopal These are called core stones formed commonly in granitic and gneissic rock due to weathering and particularly insitu spheriodal weathering. commonly seen in the hilly tracts also. this is not from .river transport and not at all dinosaur eggs. If iam wrong Imay be corrected. See the mahapalipuram famous butter ball.
Kalairajan Krishnan ஆமாம். சரியாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா. படத்தில் உள்ள உருண்டைப் பாறைகள் எல்லாம் கிரானைட்மலை அடிவாரங்களுக்கு அருகில்தான் கிடக்கின்றன.
மற்றபிற பாறைகள் assorted வடிவங்களில் உள்ளன ! ஆனால் இவை மட்டும் உருண்டை வடிவில் மாறியுள்ளன. இவை மட்டும் எப்படி உருண்டை வடிவம் பெற்றன? என்பதுதான் வியப்பாக உள்ளது !
Srinivasan Rajagopal when a gneissic rock gets weathered completely some left over portions are slight to mod.wearthed and embedded in the top portion with in the soil or highly wearthed as round/oval/ ablong core stone.Normally weathering takes place along the intersecting joints by water pnetration .ii is different from rolled boulers down the hill .
Kalairajan Krishnan விளக்கமான பதில் அளித்ததற்கு எனது நன்றிகள் ஐயா. ஒரேயொரு ஐயம். திண்டுக்கல் பகுதியில் 18 முதல் 41 டிகிரி வெப்பநிலைதான் நிலவுகிறது. மழையும் குறைவு. இந்தக் குறைந்த வெப்ப நிலையில் weathering rocks உருவாகிட முடியுமா ?
Kalairajan Krishnan படத்தில் உள்ள கோளப்பாறைகள் பாறைகளாக மாறிய பின்னர் உருண்டு இதுபோன்று உருண்டையாக மாறவில்லை.
மாறாக, இவைகள் களிமண் வடிவத்தில் இருக்கும் காலத்திலேயே உருண்டு உருண்டு இவ்வாறான உருண்டை வடிவத்தை அடைந்து விட்டன. பின்னர் காய்ந்து இறுகிப் பாறைகளாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.
Kalairajan Krishnan படத்தில் உள்ள கோளப்பாறைகள் பாறைகளாக மாறிய பின்னர் உருண்டு இதுபோன்று உருண்டையாக மாறவில்லை.
மாறாக, இவைகள் களிமண் அல்லது “தார்” போன்று நெகிழும் தன்மையாய் இருக்கும் காலத்திலேயே உருண்டு உருண்டு இவ்வாறான உருண்டை வடிவத்தை அடைந்து விட்டன. பின்னர் காய்ந்து இறுகிப் பாறைகளாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.
Govindaswami Venkataraman பூமி திரவக நிலையில் இருந்து தான்குளிர்ந்து கொட்டியானது. திரவம் காற்றுடன் கலந்தபோது குமிழிகளாகமாறி குளிந்து கட்டியாக மாறி இருக்கலாம். மழை துளி வானிலிருந்து பூமிக்கு வரும்போது உருண்டை துளியாகதாற் வரும்.ஆலங்கட்டிகள் உருண்டையாகதான் வரும். அதுபோல்தான் சூரியனிலிருந்து வந்த பூமி குழம்பு உருண்டையாக பூமியானது
Nandhitha Kaappiyan வணக்கம்
திருவஹிந்திரபுரம் அருகில் ஓடும் கடிலம் நதியில் பாருங்கள், தேத்தாங்கொட்டை அளவில் கூழாங்கற்கள் கிடைக்கும், அது எப்படி>
Govindaswami Venkataraman செஞ்சி அருகில் ஒரு குன்று உருண்டையானகற்களை அடுக்கி வைத்தாற்போல் இருக்கும்

PoornaChandra Jeeva ஐயா தங்கள் பதிவு கண்டேன். தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது . நிலவியல் கூறுகளை ஆழ்ந்து பார்த்து பதிவிடுகிறீர்கள் . முதலில் எனது பாராட்டுக்கள். மலைப்பகுதிகள் , ஒருகாலத்தில் பேராறுகள், மலைநீர் புரண்டோடிய இடங்களில் இத்தகைய உருள் கூழாங்கற்கள் காணப்படும் . தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி , திருநெல்வேலி, வடதமிழகத்தில் விழுப்புரம் தொடங்கி வடக்கு நோக்கி திருவள்ளூர் சத்தியவேடு வழியே ஆரம்பாக்கம் ( இன்றைய தமிழக த்தின் வடகிழக்கில் கடைசி ஊர்) வரையில் இத்தகைய கல்லுருண்டைகளைப் பார்க்கலாம். தமிழகத்தில் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழைபெய்யும் ஒரு பருவச்சூழல் நிலவியது. நீங்கள் கூட கேட்டிருப்பீர்கள் தமிழ்நாட்டில் பெரிய அகண்ட மணல் நிறைந்த ஆறுகள் உள்ளன தண்ணீர்தான் இல்லை என்று கூறுவர். இப்பருவச்சூழலாலேயே இக்கற்கள் உருவாயின இத்தகைய பேராறுகள் இக்காலத்தில்தான் உருவாயின .ஆனால், , மலைப்பகுதிகளில் தொடங்கும் இத்தகைய மணலாறுகளில் சிலவற்றில் மழைக்காலத்தில் மட்டுமே நீரோடும். மேலும் தமிழக நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வடிந்து செல்லும் இயல்புடையது . இப்பகுதி மண்வளத்தைத்க் காத்துக்கொள்ளும் (conservation power ) ஆற்றல் குறைந்தது. இதற்குக் காரணம் அப்பெருமழைக்காலந்தான் . இக்காலத்தில் பாறைகள் உருண்டு சிதறி புரண்டோடின. நீலமலை, வடதமிழகப் பகுதிகளில் இக்காட்டாறுகள் பெருமளவுக்கு ஓடின. அப்போது காவிரி நதி வேறுவழியில் ஓடியதென்றும், பாலாறு வழியே ஓடியதாகவும், மேலும் பாலாற்றிலிருந்து வடகிழக்காக சத்தியவேடு மலைக்குன்றுகள் வழியே ஓடி எண்ணூர் - ஆரம்பாக்கம் பகுதிகளில் கடலில் கலந்தது என்றும் சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. நிலவியல் ஆய்வுகளும் இதனை உணர்த்துகின்றன. விழுப்புரம்- சத்தியவேடு. திருத்தணி- திருவள்ளூர் பகுதிகளில் இவ்வுருண்டைக் கற்கள் ஒரு சுண்டைக்காய் அளவு முதல் ஒன்று இரண்டடி பபருமன்வரை தரையிலும், பூமிக்கடியில் 40 - 50 அடியாழத்திலும் கிடைக்கின்றன. நிலத்தடியில் இச்சரளைக்கல் கிடைக்கும் ஆழத்தில் நன்னீர் ஊற்று உள்ளது. இவ்வாறு தரையிலும் ,தரைக்கடியிலும் கிடைக்கும் இக்கல்லுருண்டைகளை உடைத்து வீடு கட்டும்போது தளம் அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். எனவே , இத்தகைய உருண்டைக் கற்கள் பண்டைக்காலப் பெருமழையாலும், அதனால் ஏற்பட்ட பேராறுகளாலும் பல காலம் உருண்டோடியதால் தேய்ந்து இக்கல் உருண்டைகள் உருவாயின. நீங்கள் தமிழக நிலவியல் தொடர்பான நூல்களையும் , அறிக்கைகளையும் படித்து இதனை அறியலாம். உங்கள் பகுதிகளில் இவை எவ்வாறு உருவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று இந்த அடிப்படையில் ஆராய்ந்து அறியலாம். நீங்கள் உங்கள் நிலப்பரப்பை ஆராய்வது உங்கள் சில பதிவுகளைக் கண்டு அறிகிறேன். முகநூலில் பலர் தேவையற்ற அற்பமான பதிவுகளிடுகையில் உங்கள் அற்புதமான பதிவுகளைத் தொடருங்கள்.தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் .
தமிழக வரலாறும் தொல்லியலும் அறிய தமிழக, பொதுவாக இந்திய நிலவியலைக் கற்பது பயன்தரும். நன்றி.
Kalairajan Krishnan மிகவும் நீண்டதொரு விளக்கத்தைப் பொறுமையாக அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா.
Kalairajan Krishnan /....இத்தகைய உருண்டைக் கற்கள் பண்டைக்காலப் பெருமழையாலும், அதனால் ஏற்பட்ட பேராறுகளாலும் பல காலம் உருண்டோடியதால் தேய்ந்து இக்கல் உருண்டைகள் உருவாயின./....
ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மிகவும் குறைவான தொலைவிலேயே கூழாங்கற்கள் கிடக்கின்றன. இவ்வளவ…மேலும் பார்க்கவும்
PoornaChandra Jeeva Kalairajan Krishnan தவறான கருத்து. நீங்கள் இன்றுள்ள தொலைவையும் நீர் வேகத்தையும் கணக்கில் கொள்ளாதீர்கள் . இக்கற்கள் இத்தொலைவை அடைய பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். இடிபடுதல், மணலுடனும் நிலத்தடைகளால் ஏற்படும் உராய்வு ஆகியவற்றால் அவை உருளையாகின்றன . நீர் உராய்வு பெரிய மலைகளையே குடைந்துள்ளமை திருப்பதி ,மற்றும் சில மேலைநாடுகளில் பார்க்கிறோம் நிலவியலார் உங்கள் கருத்தைப்போல சிந்தித்திருக்கமாட்டார்களா என்ன.
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva /....இக்கற்கள் இத்தொலைவை அடைய பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். இடிபடுதல், மணலுடனும் நிலத்தடைகளால் ஏற்படும் உராய்வு ஆகியவற்றால் அவை உருளையாகின்றன . ./....
இடிபடும் அளவிற்கு வேகமாக நகரும் கல் சுமார் 150 கி.மீ. தூரத்தைக் கடக்கப் பல நூற்றாண்டுகள் ஆகுமா ?
அதுவும் மணலுடன் இடிபட்டுத் தேயுமளவு வேகமாக நகரும் கல் சுமார் 150 கி.மீ. தூரத்தைக் கடக்கப் பல நூற்றாண்டுகள் ஆகுமா? என்பதே எனது ஐயம்.
Kalairajan Krishnan /....பெரிய மலைகளையே குடைந்துள்ளமை திருப்பதி ,மற்றும் சில மேலைநாடுகளில் பார்க்கிறோம்/....
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/...

திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா, பென்னாறு உருவானது எப்படி ?
THEORY-OF-TSUNAMIS-KALAIRAJAN.BLOGSPOT.COM
திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா,…

திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா, பென்னாறு உருவானது எப்படி ?
Kalairajan Krishnan River cut mountains
https://youtu.be/Wl0NoHbQOP8

How Kadappa, Karnool, Nallamalai hills formed ?
YOUTUBE.COM
PoornaChandra Jeeva Kalairajan Krishnan கற்கள் தொடர்ந்து 24மணிநேரமும் உருளும் என்பது உங்கள் கருத்தா? நன்றி.
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva கற்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் உருண்டுள்ளன என்பது எனது கருத்தல்ல.
கல்லானது உருண்டை வடிவத்தை அடையும் அளவிற்கு மணலில் பலகாலம் மோதிட வேண்டும். இதற்கான வேகத்தையும் speed இதற்கான காலத்தையும் time கணக்கிட்டால் distance கூடுதலாக இ…மேலும் பார்க்கவும்
PoornaChandra Jeeva Kalairajan Krishnan களிமண் . உருண்டால் கரைந்து விடாதா?
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva நான் களிமண்ணை உதாரணமாகச் சொல்வது அதனுடைய பிசுபிசுப்புத் தன்மைக்காக.
நான் சொன்ன களிமண் என்ற உதாரணம் களிமண் என்ற பொருளில் சொல்லவில்ல.
எனவே களிமண் கரையும் தன்மையுடையதால் நான் கூறிய களிமண் என்ற எடுத்துக்காட்டு தவறாகிறது.
எனவே களிமண் என்பதற்குப் பதிலாகச் சாலைகள் போடுவதற்காகப் பயன்படுத்தும் கருப்புநிறத் ”தார் (Tar)“ என்ற பொருளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
கூழாங்கல்லாக மாறியுள்ள கல்லானது Tar போன்ற நிலையில் இருக்கும் போதே அது உருண்டு உருண்டு கூழாங்கல்லின் வடிவத்தை அடைந்து விடுகிறது. அதன்பின்னர் காய்ந்து இறுகிக் கூழாங்கல்லாக மாறிவிடுகிறது என்று கருத்துத் தெரிவிக்கிறேன்.
Kalairajan Krishnan 🙃
பல்லவராயன் ராஜாமணிகுமரேசன் திருச்சி சின்னமிளகு பாறை,பெரியமிளகு பாறைகள் நினைவுக்கு வருகின்றன.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

கொடுஊரில் உள்ளது கடல்கோளுக்கு முந்திய கோட்டையா?

கொடுஊரில் உள்ளது 
கடல்கோளுக்கு முந்திய கோட்டையா? 


ஆந்திராவில், கொடுஊரை ( Gutturu, Andhra Pradesh 515164 - இருப்பிடம் 14.190560N, 77.632756E, https://goo.gl/maps/Rbvtbc1TVprVPXfR6) மையமாகக் கொண்டு தெற்கிலும் வடக்கிலும் சுமார் 30 கி.மீ. நீளமும், கிழக்கிலும் மேற்கிலும் சுமார் 10 கி.மீ. அகலமும், சுமார் 80கி.மீ. சுற்றளவிற்குக் குன்றுகளின் மேல் கற்பாறைகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று உள்ளன.  இதனால் இது பண்டைக்காலத்தில் பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய கோட்டை அரணாக இருந்திருக்க வேண்டும்.  பிரளயத்தினால் ஏற்பட்ட பெருங்கடல்கோளால் இந்தக் கோட்டை அழிந்திருக்கலாம் என்ற சிந்தனையுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன்.  இந்தக் கோட்டைக்குள் சாலை நுழையும் இடத்தில் கும்பகர்ணன் படுத்து உறங்குவது போன்ற பெரியதொரு உருவச்சிலையை வைத்துள்ளனர் (https://goo.gl/maps/WwJPASdMs42LSnL99).  நான் யாத்திரையில் இருந்த காரணத்தினாலும், தெலுங்குமொழி தெரியாத காரணத்தினாலும் அதிகமான தகவல்களைக் கேட்டறிய இயலாமல் போனது. இந்த இடம் தொன்மையானதொரு நகர நாகரிகம் இருந்த இடமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இராமேசுவரம் காசி பாதயாத்திரைப் பயணத்தின் போது,
ஆனி 21 (05.07.2014) சனிக் கிழமையன்று பார்த்தது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்