ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

மதுரை - மலைகளின் மையம்

மதுரையின் சிறப்பு
மதுரை - மலைகளின் மையம்

நாகமலை, அரிட்டாபட்டி மலை, யானைமலை, மலம்பட்டி மலை முதலான மலைகளின் மையமாக மதுரை அமைந்துள்ளது. 




அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

நீங்கள் தமிழரா?  தமிழரின் தொன்மையைக் காண்பதில் விருப்பம் உள்ளவரா?
சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டமா? அல்லது மதுரை வாசியா?  அல்லது மதுரை - இராமேசுவரம் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா?
ஒரு முறை லாடனேந்தல் சென்று தமிழரின் தொல்லியல் அடையாளங்களைக் கண்டு வாருங்கள்.

தமிழர் தொன்மையான நாகரிகம் உடையவர்கள். பிரளயங்களில் தோன்றிய கடல்வெள்ளங்களிலும் (பெருஞ்சுனாமியிலும்) மூழ்கிப் பிழைத்தவர்கள் தமிழர்கள்.
பண்டைய தமிழகத்தைக் கடல்கொண்டதைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.   பண்டைத் தமிழரது நாகரிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் கீழடி அருகே தொல்லியல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கீழடிக்குக் கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இராமேசுவரம் சாலையோரம் உள்ள லாடனேந்தல் கிராமத்திற்கு அருகே தொடரித் தண்டவாளத்திற்குக் கீழே பாதையொன்று (இரயில்வே கீழ்ப்பாலம்) கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதற்காகப் பூமியைத் தோண்டும் போது, அங்கே சுமார் 15 அடிக்கும் கீழே சுமார் 5அடி அகலத்திற்கும் 4 அடி உயரத்திற்கும் செங்கற் கட்டுமானம் இருப்பதைக் கண்டுள்ளனர்.
கூகுள் புவிப்படத்தில் - https://goo.gl/maps/YF3t6Tf8X8M2

நாங்கள் கடந்த மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை அன்று சென்று பார்த்து வந்தோம்.  அங்கே கிடைத்த சில செங்கற்களையும் பானையோடுகளையும் சுண்ணாம்புக் கட்டிகளையும் எடுத்து வந்தோம்.

செங்கற்கள்
ஒவ்வொரு செங்கற்கல்லும் 25 செ.மீ. நீளமும், ஒருபுறம் 13.5 செ.மீ. அகலமும், மற்றொரு புறம் 11 செ.மீ. அகலமும், 4.8 செ.மீ. உயரமும் கொண்டதாக இருந்தன.




பானைஓடுகள்
ஒருபுறம் கருப்பு நிறத்திலும், மறுபுறம் சிவப்பு நிறத்திலுமான பானைஓடுகள் அங்கே கிடைந்தன.  அங்கே J.G.B. இயந்திரம் தோண்டிக் கொண்டிந்த போது நேரில் பார்த்த நண்பர் ஒருவர் உள்ளே ஒரு முழுப்பானை அப்படியே புதைந்து கிடப்பதை நேரில் பார்த்ததாகக் கூறினார்.




சுண்ணாம்புக் கட்டிகள்
அடுக்கடுக்காக (bedding) முறையில் மணற்திட்டுகள் காணப்பட்டன.  அதில் சுண்ணாம்புக் கட்டிகள் கலந்து மணற்திட்டுகளும் இருந்தன.



குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது, கடல்வெள்ளத்தால் மதுரை அழிந்ததா? லாடனேந்தலில் புதைந்து கிடக்கும் தொல்லியல் தடையங்கள் வழியாக அறிந்து கொள்வது என்ன?

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை.
-----------------------------------------------------------
லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ள பற்றிய தினமலர் நாளிதழில் செய்தி இது - https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607&fbclid=IwAR0daJX9ZjxHbFjedBMDYDLXLgndL3bpBZIfje04vKfMBYkSzmORZpMJ2zY