புதன், 22 செப்டம்பர், 2021

உறைகிணறுகளா?

படம் - நன்றி - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.  அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.  6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது.  இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.  உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை.  ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன.  அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.


அந்தக்காலத்தில் குடிநீர்க் கிணறுகளில் மூங்கில் மரத்தினால் உறை செய்யப்பட்டிருக்கும்.  இவ்வாறான கிணறுகளில் இருந்த மூங்கில் உறைகள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டன. ஆனால் இந்தக் கிணறுகளின் அடிப்பகுதியில் விழுந்த பானைகள் உடைந்து வட்டவடிவமாக இருக்கும்.



இந்தச் சுடுமண்உறைகிணறுகள் குடிநீர் எடுப்பதற்கானவை அல்ல....
இவற்றின் பயன்பாடு அறிவியல் அடிப்படையிலான ஆய்விற்கு உரியது.

புதன், 15 செப்டம்பர், 2021

மகேந்திர கிரி எங்கே உள்ளது ?


மகேந்திர கிரி  எது 
?

“மகேந்திர கிரி” என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும்.   மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும்.  இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது.   இது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறது விக்கிபீடியா.  https://ta.wikipedia.org/s/f6m

ஆனால்,  “மகேந்திர மலைகள்”  பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயணத்தில் உள்ளது.   பாரத தேசத்தின் தெற்கேயுள்ள குமரிமுனைக்கும்  தெற்கே “ஓரளவு நீரில் மூழ்கிய மகேந்திர மலைகள்” உள்ளன.  இந்த மலைகளைக் கடந்து அனுமன்  சீதாதேவியைத் சென்றான் என்கிறது இராமாயணம்.   மகேந்திரா மலைகள் மற்ற மலைத்தொடர்களைப்போல் உயரமாகவும் இல்லை ஆனால் தாழ்வாகவும் கடலால் சூழப்பட்ட மலைகளாக உள்ளன என்கிறது இராமாயணம்.

        வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையில் பார்த்தால்,  ஓரளவு கடலில்  மூழ்கியும் மூழ்காமலும் கடலால் சூழ்ந்த மலைகள் கன்னியாகுமரிக்கும் தெற்கே உள்ளன.   இந்த மலைகள் “இலட்சத் தீவுகள்” என்று அழைக்கப்படுகின்றன.     வால்மீகியின் விளக்கப்படிப் பார்த்தால் இன்றைய இலட்சத்தீவுக் கூட்டமே  “மகேந்திர கிரி” என்பதில் ஐயமில்லை.    சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் “பன்மலை அடுக்கம்” என்ற மலைத்தொடரே மகேந்திரகிரி என்று வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது.  பன்மலை அடுக்கமே இலட்சத்தீவு என்று இன்றைய நாளில் வழங்கப்படுகிறது.


Page 7

Kumari was a great Thirtha resorted to by all. Sri Hanuman crossed over to Lanka from this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

चित्रसानुनगः श्रीमान् महेन्द्रः पर्वतोत्तमः।
जातरूपमयः श्रीमान् अवगाडो महार्णवम्॥ Kishkinda Kanda Ch. 41 St. 21.
(Citrsanung ḥ   shreemaan mahendr  parvatottamah)
(gyaaraaroopamayah shreemaan aghagaado mahaarnavam.)

This was the Second Sangam Age. The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in Sri Valmiki Ramayana (supra).

The Second Deluge.
Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean. Once more the Pandyas had to go further north and found a new capital. This time it was at Manalure. This was the city so constantly referred to in the Mahabaratha. References in the Mahabharata. The references to * Pandya" "Dramida", " Manalure" etc. in the following excerpts from the Mahabaratha are interesting.

समुद्र तीरेण शनैः मणलूरं जगामह ।  Adhi. 235–St. 20.
(samudr teere shanaih  samudr teere shanaih)

दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम् ।
ततोरत्नान्युपादाय पाण्ड्यस्यविषयं ययौ ॥Sabha 33-St. 20.
(dooten Tarācā cōḻaṉ vijitatrāmittaram)
(Ttortnanyupaday  Pāṇyasyaviṣayaṁ yayau.)

पाण्ड्यं द्रमिडराजानं श्वशुर मलयध्वजम् ।
सदूतैस्तं वशेकृत्वा मणलूरेश्वरं तदा ॥Sabha 33-St. 29.
(Paandyan  Dramiḍa rājānaṁ   Śvaśuraṁ  Malayadhvajam.)
(Sootasantan  Vaśēkr̥tvā  Maṇalūr ēśvaraṁ  tada)

ताम्रपर्णीं ततो गत्वा कन्यातीर्थमतीत्य च ।
दक्षिणां च दिशं सवाँ विजित्य कुरुनन्दनः ॥ Sabha 32-St. 75.
(Taamraparnee  Tatō  gatva  Kan'yātīrthamatīya   ch.)
(dakshinaan ch dishan   savau shijisy Kurunandanaḥ  )



கடல் கொண்ட கபாடபுரம்

கடல் கொண்ட கபாடபுரம்.
https://youtu.be/6xR9cM9yeZw?t=250