செவ்வாய், 30 ஜனவரி, 2018

Theory of Tsunamis மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 9) பஞ்சம்தாங்கி மலை உருவானது

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.


ஹேவிளம்பி ஆனி 28 (12.07.2017) புதன்கிழமை அன்று,  திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலை எண் 83இல் அய்யலூரிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இந்த செம்மண் மலையைப் பார்த்தேன்.




பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட செம்மண் இங்கு ஒரு மலைபோல் குவிந்துள்ளது.  இந்த “பஞ்சம்தாங்கி ( Panjamthangi R.F.)” செம்மண் கிராவல் மலையானது  (https://goo.gl/maps/gXa65qL8qdn ) பெருஞ் சுனாமியினால் உண்டானது என்பது எனது கருத்து.  மேலும் கேரளம் தமிழகம் ஆந்திரா கருநாடகம் இங்கு உள்ள மண்மலைகள் எல்லாம் பெருஞ் சுனாமியினால் உண்டானவையே என்பதும் எனது கருத்து.

“ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” என்ற புறப்பொருள் வெண்பா மாலை பாடல்வரிகள் உண்மையானவை ஆகும்.  மிகைப்படுத்தி எழுதப்பட்டன அல்ல.

இந்த “பஞ்சம்தாங்கி மலை” உருவாவதற்கு முன்பே தமிழகத்தில் தமிழர்கள் தோன்றிக் குடிகளாக வாழ்ந்துள்ளனர் என்பது உண்மை.  முறையான ஆய்வுகள் செய்யாமலேயே புறப்பொருள் வெண்பாமலையைப் புறந்தள்ளப் பார்க்கின்றனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா. கி. காளைராசன்

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (8), படத்தில் உள்ள திருப்பூவணம் கோயில் பாறை இயற்கையானதா? அல்லது செயற்கையா?

Theory of Tsunamis  
பாறைகள் பலவிதம் (8), 
திருப்பூவணம் கோயில் பாறை 
இயற்கையானதா? அல்லது செயற்கையா? 

திருப்பூவணம் சிவலிங்கம் (திருப்பூவணன்) ஒரு சுயம்புலிங்கம். எத்தனையோ பிரளயங்களிலும் யுகங்களிலும் நிலைபெயராமல் இச் சிவலிங்கம் உள்ளது என்றும், பார்வதிதேவி வளர்த்த பாரிசாத மரத்தின் அடியிலே சுயம்புவாக முளைத்துத் தோன்றியது என்றும் புராணம் குறிப்பிடுகிறது. சிவலிங்கம் புராணதனமானது. அடுத்தடுத்து எத்தனையோ அழிவுகள், அடுத்தடுத்து எத்தனையோ திருப்பணிகள். ஆனாலும் சுயம்புலிங்கம் மட்டும் மாறாமல் உள்ளது.
தற்போதுள்ள கோயில் கருவறைக் கட்டுமானமானது வரகுணபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், அடுத்தடுத்து நடைபெற்ற திருப்பணிகளுடன் இன்றைய கோயில் கட்டுமானம் உள்ளது என்றும் கூறுகின்றனர். திருஞானசம்பந்தன் காலத்திற்கு முந்தைய தொன்மையான கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத காரணத்தினாலும், திருஞானசம்பந்தன் பாடல் பெற்றுள்ள காரணத்தினாலும், இக் கோயிலின் தொன்மைக்குத் திருஞானசம்பந்தன் காலத்தையே வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.


இந்நிலையில், ஹேவிளம்பி மார்கழி 9ஆம் நாள் (24.12.2017) ஞாயிற்றுக் கிழமை அன்று எனது வழிபோட்டின் போது இந்தக் கல் எனது கண்ணில் தட்டுப்பட்டது.
இயற்கையா? செயற்கையா?
இதை ஒரு கோணத்தில் பார்த்தால் இயற்கையான கல்போன்றும், மறு கோணத்தில் பார்த்தால் செயற்கையாகக் கட்டப்பெற்ற சுண்ணாம்புக் கல் போன்றும் எனக்குத் தோன்றியது.
கோயில் கட்டுமானத்தின் போது, கல் ஒன்றுடன் சுண்ணாம்பு சேர்த்து வைத்துக் கோயில் கட்டப்பெற்றுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாகக் கல்லுடன் சேர்ந்திருந்த சுண்ணாம்பும் இறுகிக் கல்லாகி விட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.


இந்தக் கல்லின் படத்தை வேறுவேறு கோணங்களில் படம் எடுத்து இணைத்துள்ளேன். இது இயற்கையாக உண்டான கல்லா? அல்லது புராணதான காலத்தில் இருந்த கோயில் கட்டுமானத்தில் இருந்த ஒரு சிறு கல்லா? என அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்தால் திருப்பூவணத்தின் தொன்மையும் தமிழரின் வழிபாட்டுத் தொன்மையும் அறிவியல் அடிப்படையில் நிறுவிடலாம். அரசும், பல்கலைக்கழகமும் தேவையான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.










வெள்ளி, 26 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் - கோளப்பாறைகள் (தோகூர் அருகே)

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் 
கல்முட்டைகள் அல்லது கோளப்பாறைகள் 
(தோகூர் அருகே)

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.




கடந்த ஆடி 1ஆம் நாள் (17.7.2017) திங்கள் கிழமை யன்று காவேரிஆற்றின் தென்கரையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 
தோகூர் கிராத்திற்கு அருகே இந்த இரண்டு பாறைகளையும் பார்த்தேன். வேறு எங்கோ இருந்து, இந்தப் பாறைகளுடன் மண்ணெடுத்து வந்து சாலையில் போட்டு சாலையின் மட்டத்தை உயர்த்தி யுள்ளனர். இந்தப் பாறைகள் இயற்கையாக இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன அல்ல. செயற்கையாக வந்து சேர்ந்தவை.



புதன், 24 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (7) வேடசந்தூர் அய்யலூர் சாலையில், வேடசந்தூர் அருகே

Theory of Tsunamis  
அய்யலூர் அருகே உள்ள இது 
கல்லா? மரமா? கல்மரமா?

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.


வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே இந்தப் பாறையை ஆனி 28 (12 ஜுலை 2017) புதன் கிழமை காலையில் பார்த்தேன்.

இது பார்ப்பதற்கு ஒரு மரத்தின் படிமம் போல் எனக்குத் தோன்றியது.  நான் பாதயாத்திரையின் போது படங்கள் எடுத்த காரணத்தினால் மற்ற யாத்திரிகள் எல்லோரும் எனக்கு முன்னே சென்றுவிட நான் மட்டும் காலதாமம் ஆகிவருவதை அறிந்து மற்றபிற யாத்திரிகர்கள் எனக்கு அடிக்கடி அலைபேசியில் பேசி என்னை விரைந்து வருமாறு அழைத்தனர்.  அதனால் நேரமின்னை காரணமாகவும், மண்ணைத் தோண்டிப் பார்க்கும் வகையிலான ஆயுதங்கள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தினாலும் என்னால் இந்தப் படிமத்தின் மறுபக்கத்தைத் தோண்டிப் பார்த்துக் கண்டறிய முடியாமல் போனது. 



இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும்.  இவ்விரண்டையும் கண்டறிந்தால் மட்டுமே இது ஒரு மரத்தின் படிமம் என்பதை உறுதி செய்ய இயலும்.



பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள “தொப்பசாமி மலையில் “ பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ  கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

அன்பன்
கி.காளைரசான்

செவ்வாய், 23 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (6) வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி

Theory of Tsunamis  
பாறைகள் பலவிதம் (6) 
வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி


பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.



கடந்த ஆனி 27ஆம் நாள் (11.7.2017) செவ்வாய்கிழமை அன்று குழந்தைவேலன் சந்நிதியில் இருந்து வேடசந்தூர் செல்லும் வழியில் நவாமரத்துப்பட்டி என்ற ஊரின் அருகே இந்தப் பாறைகளைப் பார்த்தேன்.




கடந்த   ஆனி 28ஆம் நாள் (12.7.2017) புதன்கிழமை யன்று வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே கீழேயுள்ள  மூன்று பாறைகளையும்  பார்த்தேன்.







அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்


திங்கள், 15 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (5) - எப்போதும் வென்றான்

Theory of Tsunamis
பாறைகள் பலவிதம் 
( படங்கள் 11, 12, எப்போதும் வென்றான் அருகில்)


அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கமும், குமரிக்கோடும், பண்டைத் தமிழகமும்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் தொடங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

அறுபடைவீடு பாதயாத்திரையின் போது,  தேசியநெடுஞ்சாலை 38இல், “எப்போதும் வென்றான்“ ஊரின் எல்லைக்கு அருகே செல்லும்போது இந்தப் பாறையைக் கண்டேன்.​




பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் தோன்றி வந்த சேற்றையும் சகதியைம் சவடையும் ஏதோவொரு பொருள் தடுத்துள்ளது.  அதனால் சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்துள்ளது.  பின்னாட்களில் அவை காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளன.  இந்தப் பாறையின் நடுவில் உள்ளது வட்டமான பல அடுக்குகளைக் கொண்டுள்ள காரணத்தினால் இது ஒரு மரத்தின் படிமமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இப்போது இந்தப் பாறையும் பல்வேறு காரணிகளால் சிதிலமடைந்து வருகிறது என்பதும் எனது கருத்து.

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (4) பந்தல்குடி - சிந்தலக்கரை

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் (4) 
பந்தல்குடி - சிந்தலக்கரை 


அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

தேசியநெடுஞ்சாலை 38இல், பந்தல்குடியில் இருந்து சிந்தலக்கரை செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் ஏதோவொரு  கருப்பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  
இப்போது இவ்விதப் பாறைகள் பல்வேறு காரணிகளால் சிதிலமடைந்து வருகின்றன என்பது எனது கருத்து.







அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்



Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (3) கல்குறிச்சி - பந்தல்குடி

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் (3) 
படங்கள் 3,4,5,6,7 
இடம் - கல்குறிச்சி - பந்தல்குடி சாலையோரம்

பாறைகள் பலவிதம் (2)இன் தொடர்ச்சி இது.



அந்தமான் அருகே இருந்த தமிழகத்தின் நிலப்பரப்பளவிற்குச் சற்றொப்பச் சமமான மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கி உள்ளது.  இதனால்,  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இந்த மாபெரும் கடல்கோள் நிகழ்ச்சியால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

தேசியநெடுஞ்சாலை 38இல், கல்குறிச்சியில் இருந்து பந்தல்குடி செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.







please read the following also.

http://hkss.cedd.gov.hk/hkss/eng/education/GS/eng/hkg/chapter4.htm

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா. கி. காளைராசன்


புதன், 10 ஜனவரி, 2018

Theory of formation of Himalayas பாறைகள் பலவிதம் (2) திருப்பரங்குன்றம் மலை உருவானது

Theory of formation of Himalayas 
பாறைகள் பலவிதம் (2) 
திருப்பரங்குன்றம் மலை உருவானது



கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால்  உண்டான (rim) விளிம்பு மலைத்தொடரின் ஒரு பகுதியே இமயமலையின் அடிப்பகுதியாகும். கங்கன் பூமியில் மோதிய போது சிதறுண்ட பாறைகளால்  திருப்பரங்குன்றம், அழகர்கோயில்மலை(யின் அடிப்பகுதி),  யானைமலை, திருமயம் மலை, திருச்சிராப்பள்ளிமலை முதலான  கிரானைட் மலைகள் உருவாகி யுள்ளன. 
இதுவே பூமியில் கல்தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

மேலும்,
கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் (rim) இறங்கி யுள்ளது.  அந்த நீர்க்கோளிலில் இருந்த மணல்கள் எரிந்து விழுந்து,  உலகில் உள்ள பாலைவனங்கள் தோன்றியுள்ளன.  அந்த நீர்க்கோளில் இருந்த சேறும் சகதியும் சவடும் படிந்த காரணத்தினால்,  இமயமலை(யின் மேற்பகுதி), துருக்கி, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும் உருவாகியுள்ளன.
இதுவே பூமியில் “மணல் தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகி யுள்ளன. இவை, பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தை அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால்தான் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பதும் எனது கருத்து.

இந்த மூன்று கருத்துகளையும்  அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களைப் பதிவு செய்கிறேன்.


திருப்பரங்குன்றம் மலையானது பூமி தோன்றும் போது, இந்த இடத்தில் இருந்த பாறைக்குழம்பு குளிர்ந்து உருவானது அல்ல.  கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்து இமயமலைத் தொடரின் அடிப்பகுதி உருவாகி உள்ளது.  கங்கன் பூமியில் மோதிய போது தெரித்து விழுந்த ஒரு பகுதியே திருப்பரங்குன்றம் மலை ஆகும் என்பது எனது கருத்து.

அன்பன்
கி. காளைராசன்

செவ்வாய், 9 ஜனவரி, 2018

Theory of Tsunamis கடல்வெள்ளம் tsunami பாறைகள், அழகர்கோயில் பாறைகள்

Theory of Tsunamis
கடல்வெள்ளம் tsunami பாறைகள்,
அழகர்கோயில் பாறைகள்

“எண்ணையைத் தடவிக் கொண்டு ஆற்றுமணலில் படுத்து உருண்டாலும் ஒட்டும் அளவிற்குத்தான் ஒட்டும்“ என்றொரு சொலவடை கேள்விப்பட்டுள்ளேன்.  கல்லூரி நாட்களில் கணிதம் பயின்றாலும் பல்கலைக்கழகப் பணிநாட்களில் தமிழ் கற்கும் பேறு கிடைத்தது.   அதுவும் திருப்பூவணம் தலபுராணத்தைப் படிக்கும் கிடைத்தற்கு அரிய பெரும்பேறு பெற்றேன்.  “புராணத்தில்  கூறப்பட்டுள்ள செய்திகள் யாவும் உண்மை, இட்டுகட்டிச் சொல்லப்பட்டன அல்ல“ என்ற உண்மையை உணர்ந்து கொண்ட பின்னர் தலபுராணங்களின் மீது எனக்கு ஒரு பற்று ஏற்பட்டது.  அதனால் திருப்பூவணம் தொடர்பான திருவிளையாடற் புராணம் இரசவாதம் செய்த படலத்தைப் படித்தேன்.  பின்னர் திருவிளையாடற் புராணத்தின் மற்ற பிற படலங்களையும், மற்றபிற தலபுராணங்களையும் படித்து அறிந்துகொள்ள முயன்று வருகிறேன்.


திருவிளையாடற் புராணமும், திருப்பூவணம் தலபுராணமும், மற்றும் நான் வாசித்த மற்றபிற தலபுராணங்களும் பண்டைத் தமிழகத்தைக் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) நிகழ்ச்சியை உறுதி கூறின.  கடல்கோள் என்பதை ஒரு புராணப்புனைவு என்று மட்டுமே கருதிக் கொண்டிருந்தேன்.  ஆனாலும் கூகுள்புவிப்படங்கள் (Google Map)  வழியாகப் புராணங்கள் குறிப்பிடும் இடங்களை பார்த்து, புராணம் கூறும் செய்திகள் உண்மையா? என அறிந்து கொள்ள முயன்றேன்.  எனது பார்வையில் கூகுள் புவிப்படங்கள் புராணம் குறிப்பிடும் கடல்வெள்ளத்தை (கடல்கோள்) உறுதி செய்வதாக இருந்தன.

திருப்பூவணக்காசி என்ற நூல் எழுதி வெளியிட்டதற்குப் பலனாக, இறையருளால் 2014ஆம் ஆண்டு இராமேச்சுரம் காசி பாதயாத்திரை செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு நாக்பூர் காசி பாதயாத்திரையும், 2016ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், 2017ஆம் ஆண்டும்  அறுபடைவீடு பாதயாத்திரையும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன். பாதயாத்திரை நாட்களில் நான் ஏற்கனவே கூகுள்புவிப்படத்தில் பார்த்தறிந்த பல இடங்களை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது.   பாதயாத்திரையின் போது நாங்கள் நடந்து செல்லும் வழியில் எனது கண்ணில் பட்ட பாறைகளை எல்லாம் என்னால் முடிந்த அளவிற்குப் படங்கள் எடுத்துள்ளேன்.  எனது பார்வையில் நான் பார்த்த பாறைகள் பலவும் புராணம் குறிப்பிடும் கடல்வெள்ளத்தை (கடல்கோள்) உறுதி செய்வதாக இருந்தன.

இமயமலை(யின் அடிப்பகுதி), திருப்பரங்குன்றம், அழகர்கோயில்மலை(யின் அடிப்பகுதி),  யானைமலை, திருமயம், திருச்சிராப்பள்ளி முதலான உலகில் உள்ள 
pure கிரானைட் பாறை மலைகள் அனைத்தும் கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் உருவானவை என்றும், இதுவே பூமியில் கல்தோன்றிய காலம்“ என்பது எனது கருத்து.

உலகில் உள்ள பாலைவன மணல்களும், இமயமலை(யின் மேற்பகுதி), துருக்கி, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும், மற்றும் உலகில் உள்ள sedimentary கிரானைட் பாறைகளும் கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் இறங்கிய காரணத்தினால் உருவானவை என்றும், இதுவே பூமியில் “மணல் தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் உண்டான “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகி
பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தை அழித்துள்ளதன.  இக் கடல்வெள்ளங்களினால்தான் தமிழகத்தில் மண்
 தோன்றி உள்ளது.  இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பதும் எனது கருத்து.

(1) புராணங்கள், (2) கூகுள் புவிப்படங்கள், (3) நான் கண்ட கல், மண், மணல் இவற்றினை நான் புரிந்துகொண்ட வகையில் தமிழகத்தைக் கடல்வெள்ளம் அழித்துள்ளது என்பது உண்மையே.  இருப்பினும், அறிவியல் அடிப்படையில் எனது மேற்கண்ட கருத்தை நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.  அன்பர்களின் மேலான கருத்தினை வேண்டுகிறேன்.



படம் (1)
அழகர்கோயில் செல்லும் வழியில் இதைப் பார்த்தேன்.  பார்ப்பதற்கு வெடிய மரத்தின் அடிப்பகுதிபோல் தோன்றியது.  ஆனாலும் அருகில் சென்று பார்த்தபோது பாறைபோல் தோன்றியது.  மரமா? கல்லா? கல்மரமா? என என்னால் உறுதி செய்ய இயலவில்லை.  

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்