ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பரிபாடலில் புவி அறிவியல் கோட்பாடு

பரிபாடலில் புவி அறிவியல் கோட்பாடு

சங்கப்புலவர் கீரந்தையார் பரிபாடலில் திருமலை வாழ்த்திப் பாடியுள்ளார்.
அந்தப் பாடலில் ஊழிக் காலங்கள் பற்றிய மிகவும் சிறப்பாகச் சொல்லுகிறார்.


தொன்முறை இயற்கையின் மதியொ .....
......     .....   ....   ...    மரபிற்றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ்செல்லக் (formation of a black hole)
கருவளர் வானத் திசையின் தோன்றி ( spacetime starts to deform)
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,  (that black hole was so strong that nothing—no particles or even electromagnetic radiation such as light—can escape from it)
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும், (birth of primordial sound (Om), associated with the creation of universe,solar system, the earth etc. from that black hole.)
செந்தீச் சுடரிய ஊழியும், (colletion of Gangan on Earth)
பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும், (landing of Gangai on Himalaya)
அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ( destructive tsunamis)
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும் (land slumping into the ocean are retreated)
உள்ளீ டாகிய இரு நிலத்து ஊழியும், (Continental collision)
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மையில் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (Eras passed)
கேழல் (பன்றி, varagham) திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ (திருமாலே), நின் பேணுதும் தொழுது.
.......
.......

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 10 (27.10.2019) ஞாயிறு கிழமை.

(குறிப்பு - ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழை யிருந்தால் அன்புடன் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன்.)

தீபாவளி - பன்றியை வாழ்த்தி வணங்குவோம்

தீபாவளித் திருநாளில் 
ஊழிக்காலத்தில் உலகைக் காத்த
பன்றியை வாழ்த்தி வணங்குவோம்


இந்தப் பூமி (நிலப்பகுதி) முழுவதையும்
ஊழிக்காலத்தில் கடல்கொண்டது (பெருஞ் சுனாமி).
பெருநிலங்களும் கடலால் மூழ்கடிக்கப்பட்டன.
அந்நாளில்,
ஆழி முதல்வனே,
நீ, பன்றிபோல் தோன்றினாய்,
கடல்வெள்ளத்தில் மூழ்கிய நிலப்பகுதியைத் தூக்கி நிறுத்தினாய்,
பூமி (நிலப்பகுதி) இப்போதிருக்கும் நிலையில் நிலைபெற்றது.
அதனால், பன்றியே,
உன்னுடைய திருவடியை என் தலையினால் வணங்குகிறேன்.
கலி இல் நெஞ்சினேம், ஏத்தினேம், வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்,
கொடும்பாடு அறியற்க எம் அறிவு.

இப்படிக்கு,
கீரந்தையார்
முத்தமிழ்ச் சங்கப் புலவன்.
------------------------------------------------------
பரிபாடல்  - 2 திருமால் வாழ்த்து
பாடியவர்: கீரந்தையார்
பண் அமைத்தவர் : நன்னாகனார்
பண் : பண்ணுப்பாலையாழ்

தொன்முறை இயற்கையின் மதியொ .....
......     .....   ....   ...    மரபிற்றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக் (formation of a black hole)
கருவளர் வானத் திசையின் தோன்றி ( spacetime starts to deform)
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,  (that black hole was so strong that nothing—no particles or even electromagnetic radiation such as light—can escape from it)
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும், (birth of primordial sound (Om), associated with the creation of universe,solar system, the earth etc. from that black hole.) 
செந்தீச் சுடரிய ஊழியும், (colletion of Gangan on Earth)






பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும், (landing of Gangai on Himalaya)



அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ( destructive tsunamis)
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும் (land slumping into the ocean are retreated)
உள்ளீ டாகிய இரு நிலத்து ஊழியும், (Continental collision)


நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மையில் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (Eras passed)
கேழல் (பன்றி, varagham) திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ (திருமாலே), நின் பேணுதும் தொழுது.
.......
.......
........                ............. நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்,
கலி இல் நெஞ்சினேம், ஏத்தினேம், வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே.
-------------------------------------------------------------------
சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கப் புலவர் போற்றுவோம்,
பரிபாடல் போற்றுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 10 (27.10.2019) ஞாயிறு கிழமை.

(குறிப்பு - ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழை யிருந்தால் அன்புடன் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன்.)

புதன், 16 அக்டோபர், 2019

இனி சுனாமி வருமா? வராதா?

இனி சுனாமி வருமா? வராதா?


26 டிசம்பர், சுனாமி நினைவு நாள் வருகிறது.
இதுபோல் சுனாமி இனிமேல் வருமா? வராதா?

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.
இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

என்னிடம் கேட்டால்,
நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன.  பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  இந்தோனேசியா நிலத்திட்டு அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் உருவானது.

கடலில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்துக்கிடப்பது போல் அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் ஆன bedding நிலமைப்பைக் கொண்டது.  பாம்பின் தோல்களில் செதில்கள் இருப்பதைப் போன்று, இந்தோனேசியா நிலத்திட்டில் பாறை யடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault)உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?
இதை உறுதியாகக் கூற இயலாது.  செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாக யாராலும் கணித்துச் சொல்லவே முடியாது.   இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், சூரிய சந்திரன் முதலான ஒன்பது கோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிற்கும் சுனாமிக்கும் தொடர்பு  (correlation)உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.   இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம்,
ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 29 (16.10.2019) புதன் கிழமை

(நன்றி -- படம் இணையத்தில் இருந்து எடுத்தது.  இந்தப் படத்தை இணையத்தில் பதிவு செய்தோருக்கு நன்றி)

புதன், 9 அக்டோபர், 2019

கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

கீழடி அகழாய்வு, 
தொல்லியலாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.


தமிழக தொல்லியல்துறையின் அறிக்கையை ஆங்கிலம் சீனம் உருது இந்தி மற்றும் கீழை நாடுகளின் மொழிகளில் வெளியிட வேண்டும்.  இந்த அறிக்கையை இந்த மொழிகளில் ஆவணப்படமாகமாகவும் வெளியிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் மற்றோரும் தமிழரின் தொன்மையை மற்றோரும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

கூலிக்கு ஆட்களைக் கூட்டி வந்துதான் அகழாய்வு செய்யவேண்டும் என்பதில்லையே. மதுரையில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தாலே போதும். 100 ஏக்கரையும் மிகவும் குறைந்த செலவில் விரைவாக அகழாய்வு செய்திடலாமே.

கட்டுமானங்கள் கண்டறியப்படும்போது கொத்தனார்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். சுடுமண் பானைகள் கண்டறியுப்படும்போது குயவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.  சும்மா பார்வையாளராக வருவோரின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.  பல்வேறு அறிஞர்களும் அவரவர் கருத்துக்களை கூறிட வேண்டும்.  அனைவரின் கருத்துக்களையும் தொல்லியல் துறையினர் வரவேற்க வேண்டும்.  எல்லோர் கருத்துக்களையும் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனது விரும்பம்.  இவ்வாறு அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிவதே சங்கம். இதுவே தமிழரின் பண்பாட்டுக் கூறு.

என்ன, நான் சொல்வது சரிதானே 😏

ஆலவாய் போற்றுவோம்,
கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 1 அக்டோபர், 2019

What is the timeline of the tsunami event according to you?

I checked your blog. Your theory about ganga (or tarim basin?) is some thing very unique.  What is the timeline of the tsunami event according to you?
balasundaram ramaswamy

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
என்னிடம் கேட்டால்,


நான் புவியியல் அறிஞனல்ல.  ஆனால் புராணம் கூறும் கடல்கோள்கள் பற்றிப் படித்துள்ளேன் என்றேன்.  நீங்கள் படித்தறிந்ததன் அடிப்படையிலேயே கூறுங்கள், இனி சுனாமி வரும் வாய்ப்புகள் உள்ளனவா? எப்போது வரும்? என்று மீண்டும் கேட்டார்.

நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   
பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.  இவ்வாறு பரவி இந்தோனேசியா நிலத்திட்டு உருவாகியுள்ளது. கங்கைநீர் பாய்ந்தோடி இந்த நிலத்திட்டு உருவாகியுள்ளதால் இது  அடுக்கடுக்கான (bedding)நிலமைப்பைக் கொண்டுள்ளது.  அடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault) உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


ஆன்மிக அடிப்படையில் விளக்குவது என்றால், கடலில் பாம்பின்மீது பள்ளிகொண்டுள்ள பெருமாளை நினைவிற் கொள்ள வேண்டும்.  பெருமாள் படுத்திற்கும் பாம்பு போன்று இந்தோனேசியா நிலத்திட்டு உள்ளது. இந்தோனேசியா நிலத்திட்டு சுருண்டு படுத்துள்ள பாம்பின் உடலைப் போன்று ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்கான நிலத்திட்டுக்களைக் கொண்டுள்ளது.  பாம்பின் தோலில் உள்ள செதில்கள் போன்று, இந்தோனேசியாபெருந்திட்டில் (indonesia plate)சிறுசிறு ஒழுங்கற்ற நிலத்திட்டுகள் (faults) உள்ளன.  இவ்வாறு உள்ள சிறுசிறு செதில்கள் எப்போதாவது பெயர்ந்து விழுகின்றன.  இவ்வாறு கடலுக்கு உள்ளே சிறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழும்போது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 





நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   பிரளயம் என்பது நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது. கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.

இவ்வாறு பரவியதால்தான் இந்தோனேசியா நிலத்திட்டு முழுவதும் உருவாகியுள்ளது. கங்கை என்ற வீண்ணீர்க் கோளினால் உருவான இந்த நிலத்திட்டு bedding முறையிலான அமைப்பைக் கொண்டது.  இதில் fault உள்ள இடங்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?  
இதை உறுதியாகக் கூற இயலாது.
செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  சொல்லியே ஆக வேண்டும், இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், ஒன்பது கோள்களின் ( sun, moon, .....raghu, kethu - 9 planets) நிலைகளுக்கும் தொடர்புகள்  (correlation)ஏதேனும் உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.

இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  கங்கை பூமியில் இறங்கி,  அதனால் இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.  இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.

எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 14 ( 01.10.2019) செவ்வாய்கிழமை

https://www.facebook.com/topentertainment2/videos/529182420959030/