புதன், 22 செப்டம்பர், 2021

உறைகிணறுகளா?

படம் - நன்றி - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.  அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.  6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது.  இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.  உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை.  ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன.  அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.


அந்தக்காலத்தில் குடிநீர்க் கிணறுகளில் மூங்கில் மரத்தினால் உறை செய்யப்பட்டிருக்கும்.  இவ்வாறான கிணறுகளில் இருந்த மூங்கில் உறைகள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டன. ஆனால் இந்தக் கிணறுகளின் அடிப்பகுதியில் விழுந்த பானைகள் உடைந்து வட்டவடிவமாக இருக்கும்.



இந்தச் சுடுமண்உறைகிணறுகள் குடிநீர் எடுப்பதற்கானவை அல்ல....
இவற்றின் பயன்பாடு அறிவியல் அடிப்படையிலான ஆய்விற்கு உரியது.

புதன், 15 செப்டம்பர், 2021

மகேந்திர கிரி எங்கே உள்ளது ?


மகேந்திர கிரி  எது 
?

“மகேந்திர கிரி” என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும்.   மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும்.  இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது.   இது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறது விக்கிபீடியா.  https://ta.wikipedia.org/s/f6m

ஆனால்,  “மகேந்திர மலைகள்”  பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயணத்தில் உள்ளது.   பாரத தேசத்தின் தெற்கேயுள்ள குமரிமுனைக்கும்  தெற்கே “ஓரளவு நீரில் மூழ்கிய மகேந்திர மலைகள்” உள்ளன.  இந்த மலைகளைக் கடந்து அனுமன்  சீதாதேவியைத் சென்றான் என்கிறது இராமாயணம்.   மகேந்திரா மலைகள் மற்ற மலைத்தொடர்களைப்போல் உயரமாகவும் இல்லை ஆனால் தாழ்வாகவும் கடலால் சூழப்பட்ட மலைகளாக உள்ளன என்கிறது இராமாயணம்.

        வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையில் பார்த்தால்,  ஓரளவு கடலில்  மூழ்கியும் மூழ்காமலும் கடலால் சூழ்ந்த மலைகள் கன்னியாகுமரிக்கும் தெற்கே உள்ளன.   இந்த மலைகள் “இலட்சத் தீவுகள்” என்று அழைக்கப்படுகின்றன.     வால்மீகியின் விளக்கப்படிப் பார்த்தால் இன்றைய இலட்சத்தீவுக் கூட்டமே  “மகேந்திர கிரி” என்பதில் ஐயமில்லை.    சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் “பன்மலை அடுக்கம்” என்ற மலைத்தொடரே மகேந்திரகிரி என்று வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது.  பன்மலை அடுக்கமே இலட்சத்தீவு என்று இன்றைய நாளில் வழங்கப்படுகிறது.


Page 7

Kumari was a great Thirtha resorted to by all. Sri Hanuman crossed over to Lanka from this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

चित्रसानुनगः श्रीमान् महेन्द्रः पर्वतोत्तमः।
जातरूपमयः श्रीमान् अवगाडो महार्णवम्॥ Kishkinda Kanda Ch. 41 St. 21.
(Citrsanung ḥ   shreemaan mahendr  parvatottamah)
(gyaaraaroopamayah shreemaan aghagaado mahaarnavam.)

This was the Second Sangam Age. The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in Sri Valmiki Ramayana (supra).

The Second Deluge.
Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean. Once more the Pandyas had to go further north and found a new capital. This time it was at Manalure. This was the city so constantly referred to in the Mahabaratha. References in the Mahabharata. The references to * Pandya" "Dramida", " Manalure" etc. in the following excerpts from the Mahabaratha are interesting.

समुद्र तीरेण शनैः मणलूरं जगामह ।  Adhi. 235–St. 20.
(samudr teere shanaih  samudr teere shanaih)

दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम् ।
ततोरत्नान्युपादाय पाण्ड्यस्यविषयं ययौ ॥Sabha 33-St. 20.
(dooten Tarācā cōḻaṉ vijitatrāmittaram)
(Ttortnanyupaday  Pāṇyasyaviṣayaṁ yayau.)

पाण्ड्यं द्रमिडराजानं श्वशुर मलयध्वजम् ।
सदूतैस्तं वशेकृत्वा मणलूरेश्वरं तदा ॥Sabha 33-St. 29.
(Paandyan  Dramiḍa rājānaṁ   Śvaśuraṁ  Malayadhvajam.)
(Sootasantan  Vaśēkr̥tvā  Maṇalūr ēśvaraṁ  tada)

ताम्रपर्णीं ततो गत्वा कन्यातीर्थमतीत्य च ।
दक्षिणां च दिशं सवाँ विजित्य कुरुनन्दनः ॥ Sabha 32-St. 75.
(Taamraparnee  Tatō  gatva  Kan'yātīrthamatīya   ch.)
(dakshinaan ch dishan   savau shijisy Kurunandanaḥ  )



கடல் கொண்ட கபாடபுரம்

கடல் கொண்ட கபாடபுரம்.
https://youtu.be/6xR9cM9yeZw?t=250

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கீழடியில் கிடைத்த சிறு கொண்டை

சூழியம் விழுங்குசிறு கொண்டை

கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில் அகரத்தில் கிடைத்த அருள்மிகு மீனாட்சியம்மன்  கொண்டை



அகரம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் பொம்மை 
-----------------------------------
திருப்புவனம்:கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் சுடுமண் பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.  அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, பானைகள், பானை ஓடுகள், நத்தை கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 
மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 65 செ.மீ., ஆழத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முக பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்கள், மூக்கு, பெருத்த உதடு ஆகியவற்றுடன் நெற்றியிலும், காதிலும் ஆபரணங்கள் உள்ளன.
தலைமுடியை இடதுபுறம் பெரிதாக கொண்டை போட்டுள்ளது போன்று,இந்த பொம்மை முகம் கலைநயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. முகத்தை சுற்றிலும் அழகூட்ட சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் பெண் முகம் கொண்ட பொம்மை அச்சுகள், தங்ககாசு, தங்க காதணி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2803206 
 ஜூலை 16, 2021  01:29
------------------------------------------------------------------


நரியை பரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.  இத்திருவிளையாடலை யெல்லாம் சோமசுந்தரர் மீனாட்சியிடம் கூறித் தமது திருக்கோயிலில் வீற்றிருந்தார்.

533
நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவிழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

தீக் கடவுள், தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும், கொய்யப்பட்ட தளிர்போல், நெருப்புக் கொழுந்து விட்டேரிகின்ற வேள்விக் குண்டத்தின்கண்; அழகியதாக விரிந்த இதழ் களையுடைய தாமலை மலர், அப்போதே விரியப்பெற்று, நெருங்கிய தளிர் களையுடைய மணமுள்ள ஒரு கொடியானது, தோன்றி மேலெழுவதைப் போலவும்

534. 
விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப.

விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை
வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்
கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை
சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.

ஒளிவிட்டு விளங்கா நின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறிய கொண்டையானது,  வட்டமாகிய சந்திரனிடத்துள்ள, சிறிய முயலாகிய களங்கத்தை ஒக்கவும், அச்சூழியத்தில் கட்டித் தொங்க விட்ட, ஒளியினையுடைய முத்துமாலை, மேல் சுட்டப்பட்ட சந்திரனினின்றும்,  விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும் 

     சூழியம் - கொண்டையைச் சுற்றியணியும் முத்தானியன்ற
அணி. அதனாற் கவரப்பட்டுக் கொண்டை சிறிதே தோன்றிற்று.
மதியினிடத்துள்ள கறையை மானென்றும் முயலென்றும் கூறுதல்
வழக்கு. சூழியத்திற்கு வட்டமாகிய மதியும், கொண்டைக்கு அதனுட்
களங்கமும், முத்துத் தொங்கலுக்குக் கீழ்நோக்கிச் செல்லும் அதன்
கிரணமும் உவமைகளாம். சுட்டி யென்பதனை ஓர் அணியாகக்
கொண்டுரைப்பாருமுளர்; பொருந்துமேற் கொள்க. (16)

535
தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.

இனிய குதலையுடன்கூடிய இனிய அமுதமானது,  மார்பின் வழியாகச் சிந்தியதுபோல, இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெப்பமாகிய ஒளியை உண்டு, வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின்  மாலையானது ஒளி வீசவும் 

குதலை - பொருளறிய வாராத இளஞ்சொல். அமுதம் -
வாயூறல்; பேசும் பொழுது ஊறல் ஓழுகுமாகலின் ‘குதலை
யின்னமுதம்’ என்றார்.


2836.
சாய்ந்த கொண்டையுந் திருமுடிச் சாத்தும்வாள் வைரம்
வேய்ந்த கண்டியுந் தொடிகளுங் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும்வெண் கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்த மகம்பிரி யாதழ கெறிப்ப.

சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்
ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.

ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,  திருமுடிச்சாத்தும் - திருமுடிப்பாகையும், ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிககளும், 
வீரவளைகளும்  குண்டலங்களும், வினைகளைச் சினந்து போக்கும் திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெள்ளிய ஆடையும் கவசமும், (மெய்ப்பொருளை) ஆராய்ந்தறிந்த தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காது அழகினை வீசவும்.

திருமுடிச்சாத்து - தலைப்பாகை. குதிரைச் சேவகனானமைக்
கேற்பச் சாய்ந்த கொண்டையும், திருமுடிச்சாத்தும் முதலியன
உடையனானானென்க.





 

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

சங்கப்பாடலில் கடல்கோள்

 முல்லைக்கலி – 104வது பாடல்

இப்பாடலில் பாண்டிநாட்டைக் கடல்கொண்ட நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.  இது பாண்டிநாட்டில் கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக உள்ளது.  

 “தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொள்கிறான். 

கடலின் மிகுந்த அலைகள் பாண்டிநாட்டினுள் புகுந்து அழித்ததால்,  நாட்டின் பரப்பைக் கூட்டவேண்டி, மனத்தில் சேர்வின்றி, பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் ஆயர் (இடையர் குலத்தினர்) வாழ்கின்றனர் என்கிறது இந்தப் பாடல்.


மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்

மெலிவின்றி, மேல் சென்று மேவார்நாடு இடம்பட

புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்

தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய

நல்லினத்து ஆயர் ….

எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.

பாடியவர் - சோழன் நல்லுருத்திரன். 

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தலைப்புகளின் பட்டியல்

 1) கடல்கொண்ட பொதிகை 

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/09/blog-post_15.html

2) கடல்கோள்களும் கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/09/blog-post_14.html

3) மணிமேகலை  குறிப்பிடும் கடல்கோள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/09/blog-post_10.html

4) மகாபாரதத்தில் குமரிக்கோடு, மகேந்திரமலை, கவாடபுரம், மணலூர்,  (கீழடி), ஆலவாய், மதுரை பற்றிய குறிப்புகள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/09/blog-post_2.html

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_27.html

5) மதுரைக்கு வந்த சுனாமியும், அரியலூருக்கு வந்த சுனாமியும்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/08/blog-post.html

6) கடல்கோளும் கடலூர் பாறைகளும்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/07/blog-post_29.html

7) மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/blog-post_24.html

8) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (வத்தலக்குண்டு)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/5_73.html

9) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/5_21.html

10) வங்கக் கடலில் உருவான கடல்கோள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/blog-post_32.html

11)மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/5.html


12) திருச்செந்தூருக்கு வந்த சுனாமி பிரளயம் பேர்த்த பாறைகள் (பகுதி 3 அ)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/blog-post.html

13) ஆலவாயும் அலைவாயும் (திருவாலவாய் , திருச்சீரலைவாய் - பெயர்க்காரணம் )

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/blog-post_19.html

14) பரிபாடலில் புவி அறிவியல் கோட்பாடு

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/10/blog-post_46.html

15) இனி சுனாமி வருமா? வராதா?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/10/blog-post_16.html

16) தமிழ் அறிந்த வையையும் வைகையும்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/09/blog-post_30.html

17) மதுரையும் கூடல்நகரும் திருவாலவாயும்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/09/blog-post_27.html

18) கீழடி அல்ல, இது கூடல்நகர் .

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html

19) கடல்கொண்ட கொடைக்கானல் !

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/03/blog-post_9.html

20) மதுரை - மலைகளின் மையம்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/02/blog-post_17.html

21) லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/02/blog-post.html

22) பெருஞ்சுனாமியில் தோன்றிய வண்ணவண்ண பொக்குப் பாறைகள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/01/theory-of-tsunamis.html

23) பிரளயம் பிளந்த பாறைகள்  மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/12/6.html

24) கபாடபுரம், இரண்டாம் தமிழ்ச் சங்கம்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/11/blog-post.html

25) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8 ) ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது 

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/08/blog-post_31.html

26) கடல்கோள் என்றால் என்ன?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/08/blog-post.html

27) வடதிசையதுவே வான்தோய் இமயம்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/08/blog-post_6.html

28) திருப்பதி , கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா மலைகளும், பென்னாறும்  உருவானது எப்படி ?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_91.html

29) கீழடியை அழித்தது வைகை ஆற்றுப் பெருக்கா ? அல்லது கடல்கோளா ?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_25.html

30)இராமாயணத்தில் கபாடபுரம், மகாபாரதத்தில் மணலூர்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_12.html

31) மணலூர் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பெறும் ஆலவாய் என்ற மதுரை.

கிஸ்கிந்தா காண்டத்தில் பாண்டியர், திராமிட, மணலூர் பற்றிய குறிப்புகள்.

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post.html

32) இந்துஸ்தான் என்றால் என்ன ?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/05/blog-post_26.html

33) "மலி திரை ஊர்ந்து” திருமலை

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/05/blog-post_16.html

34) மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர் எதனால் உண்டானது?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2015/04/blog-post.html

35) கூடல் இலங்கு குருமணி (கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2016/10/blog-post.html

36) Indian Emperors and Foreign Emperors தடாதகைப் பிராட்டியின்  திருமணத்திற்கு வந்திருந்த அரசர்கள்

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2017/12/blog-post_10.html

37)  மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 9) பஞ்சம்தாங்கி மலை உருவானது

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/01/9.html

38) தரணி ஆண்ட தமிழர் (தடாதகைப் பிராட்டியார்)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/02/17.html

39) இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் (கவாடபுரம்) இதுவா?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/03/blog-post_39.html

40) மொரிசியசு முதற் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையாக இருக்குமா ?

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/03/blog-post_6.html

41) மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பரம்பரை

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/03/blog-post_7.html


வியாழன், 12 ஆகஸ்ட், 2021

திருவிளையாடல் புராணத்தில் கடல்கோள் பதிவுகள் (சலதி வெள்ளம் - Tsunami)

 

திருவிளையாடல் புராணத்தில்

கடல்கோள் பதிவுகள்

 (சலதி வெள்ளம் - Tsunami)

(கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்) [1]

 

            நமக்குத் தேவைப்படும் மருந்து நாம் சாப்பிடும் வடிவத்தில் அப்படியே கிடைக்காது, அதை அப்படியே விற்கவும் முடியாது.  மருந்துத் தயாரிப்பாளர் உற்பத்தி செய்த மருந்தை முதலில் ஒரு கூடு (capsule) போட்டு பத்திரப்படுத்தி, 10 எண்ணிக்கையில் கூட்டுமருந்தை ஒரு அட்டையில் அடைத்து, 10 அட்டைகளை ஒரு அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பார்கள். இதுபோல் தான் புராணக்கதைகளும், பல்வேறு படிநிலைகளைத் தாண்டி, அது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நாம் அட்டைகளை நீக்கி விட்டு கூட்டு மாத்திரையைச் சாப்பிடுவது போன்று, திருவிளையாடல் புராணத்தில் “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறப்பட்டுள்ள கதைகளுக்குள் தமிழரின் அறிவுசார் மரபுவழியிலான மனிதவாழ்வியில், புவியியல், கடல்கோள் பற்றிய செய்திகள் ஏராளமாகப் புதைந்திருப்பதைக் காணலாம். திருவிளையாடற் புராணத்தில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ள கடல்கோள் பதிவுகளைத் தொகுத்துச் சுருக்கி இக் கட்டுரை வழங்கப்படுகிறது.

            2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர்.  திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது.  கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார்.  

            திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது[2]. ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது[3].

            எனினும், பாண்டியநாட்டின் தலைநகராகிய  மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களை மட்டுமே திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்ற காரணத்தினால், பாண்டியநாடும் மதுரையும் சலதிவெள்ளத்தால் (கடல்கோளால்) அழிந்த நிகழ்வுகள் மட்டுமே விரிவாகப் பாடப்பெற்றுள்ளன.

            திருவிளையாடற் புராணமானது, மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருவாலவாய்க்காண்டம் என்று மூன்று காண்டங்களாகக் கடல்கோள் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன, எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. ஆனால், இவ்வாறு கடல்கோளின் அடிப்படையில் காண்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள ஒரே இலக்கியமாகத் திருவிளையாடல் புராணம் மட்டுமே இணைத்தில் காணக் கிடைக்கிறது.

 

1)பேரழிவுகளை உண்டாக்கிய பெருஞ்சுனாமி எது?

(What was the deadliest tsunami in history?)

“டிசம்பர் 26, 2004 அன்று, இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான சுனாமி ஒன்று நடந்தது. 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். 11 நாடுகளின் கடற்கரைகளில் மோதிய 15 மீட்டர் (50 அடி) உயர அலைகளைத் தூண்டியது. சுனாமியின் நேரடி விளைவுகளில் 275,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.  தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, முதலான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  சுனாமிக்குப் பின்னர், பல இலட்சம் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமலும், உணவு உடை இல்லாமலும், நோயால் பாதிக்கப்பட்டனர்” என்கிறது புவியியல் புள்ளிவிபரங்கள்[4].

            ஆனால், 2004 ஆம் வருடம் தோன்றிய சுனாமியைவிடப் பன்மடங்கு பெரிய அழிவை ஏற்படுத்திய கடல்கோள் (A deadliest mega tsunami) பற்றித் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

 

 

            இந்தக் கடல்கோளில் அழிந்தவை - ஊழிக்காலத்தில், பிரளயத்தினால்[5] வங்கக்கடலில் தோன்றிய பெரிய கடல்வெள்ளத்துள், அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த முடிகளை(முகடுகளை) உடைய மலைவகைகளும், மூழ்கி ஒழிந்தன என்கிறது புராணம்[6]. 

            இந்தக் கடல்கோளில் அழியாமல் இருந்தவை - அருள்மிகு மதுரை மீனாட்சி திருக்கோயிலும், வானினின்று இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை குளமும், இடபமலையும் (அழகர்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுமலையும், பன்றிமலையும் முதலிய இடங்களும், அந்தக் கடல்வெள்ளத்தால் அழியாதனவாக இருந்தன என்கிறது புராணம்[7].  அதாவது மலைகளும் கற்றளிகளும் மட்டுமே சுனாமியினால் அடித்துச் செல்லப்படாமல் இருந்தன என்கிறது புராணம்.

            இந்தக் கடல்கோளுக்குப் பின் தோன்றியவை - கடல்வெள்ளம் வற்றிய பிறகு, சிவபெருமான், முன் இருந்த தன்மை போலவே உலகந் தோன்றுமாறு அருள்புரிந்தார்.  தேவர்களையும் மக்களையும் மற்றைப் பறவைகளையும் விலங்குகளையும் தோற்றுவித்தார்.  சந்திரன் சூரியன் தீ ஆகிய மூன்றும் உலகிற்கு ஒளி வழங்குகின்றன.  சிவபெருமான் இந்த மூன்றின் மரபில், முன்போலவே, திங்கள் மரபினர் பாண்டியரும், ஞாயிற்றின்மரபினர் சோழரும், அங்கி மரபினர் சேரரும் என மூன்று தமிழ் மன்னர்களையும் தந்தருளினான்” என்கிறது புராணம்[8].  அதாவது புற்பூண்டு மரஞ்செடிகொடி மாக்கள் மனிதர் என எல்லா உயிர்களும் இந்தக் கடல்கோளுக்குப் பின்னர் மீண்டும் தோன்றின என்கிறது புராணம்.

2) எத்தனை கடல்கோள்கள் பதிவாகி உள்ளன?

(How many recorded tsunamis have there been?)

            மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களைக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணமானது, பாண்டியநாட்டின் தலைநகரான மதுரையுடன் தொடர்புடைய நான்கு கடல்கோள்களைப் (கடல்வெள்ளங்களைப்) பற்றிக் குறிப்பிடுகிறது.

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 1 - திருவிளையாடற் புராணம் 4ஆவது படலமாகிய “தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலத்தில் ” மதுரைக்கு ஏழுகடல்களும் வந்தன என்றொரு குறிப்பு கூறப்பட்டது.   மலையத்துவச பாண்டியன்[9]  என்ற பாண்டி மன்னனின் மனைவி காஞ்சனமாலை.  இவர்களது மகள் தடாதகைப் பிராட்டியார்.  தடாதக் பிராட்டியாரை மணந்துகொண்டு அருள்மிகு சோமசுந்தரேசுவரர் மதுரையை ஆண்டுவந்தார்.  அப்போது ஒருநாள் காஞ்சனமாலை கடலில் நீராடவேண்டும் என விரும்பினாள். காஞ்சனமாலை கடலில் நீராடுவதற்காகச் சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன(சுனாமி) என்கிறது இந்தப் புராணக்கதை.

புராணம் குறிப்பிடும் கடல்கோள் 2 -   திருவிளையாடற் புராணம் 13ஆவது படலமாகிய “கடல்சுவற வேல்விட்ட படலத்தில்”, சுந்தரபாண்டியனின் மகனான உக்கிர குமாரன் ஆட்சிக்காலத்தில், மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாம்.   உக்கிரகுமாரன் வேல் எறிந்து அந்தக் கடல்வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினான் என்கிறது இந்தப் புராணக் கதை. 

            உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி காந்திமதி ஆவாள்.  இவள் மதுரைக்கு அருகில் இருந்த மணவூரைச் (கீழடி அருகே உள்ள ஊர்) சேர்ந்தவள் என்கிறது புராணம்.   இந்நாளில் கீழடியருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள நகரமான பண்டைய பாண்டியர்களின் தலைநகரமான மதுரையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் இந்தத் தொன்மையான நகரம் கடல்கோளால் அழிந்துள்ளது என்றும் இந்தப் புராணக் கதையின் வழியாக அறியமுடிகிறது.

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 3 -   திருவிளையாடற் புராணம் 18 ஆவது படலமாகிய “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலத்தில்”, கடல்கோளுக்குப் பின்னர் உண்டான பெருமழை பற்றிய செய்தியைக் கூறுகிறது இந்தப் புராணக்கதை.

            வீரபாண்டியன் என்ற உக்கிரபாண்டியனின் மகன் அபிடேகபாண்டியன்.  அபிடேகபாண்டியனது ஆட்சிக்காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி (சுனாமி) மதுரையை அழிக்க வந்ததது.  பாண்டியனது வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவபெருமான் நான்குமேகங்களை அனுப்பிக் கடல்நீரை உறிஞ்சுமாறு செய்தார்.  நான்கு மேகங்களும் சந்து இல்லாமல் கூடிநின்று கடல்நீரை உறிஞ்சியதால் கடல்நீர் முற்றிலுமாக வற்றிப்போனது.  பூமியானது பழைய இயல்பிற்குத் திரும்பியது என்கிறது புராணம்[10].             

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 4 -   திருவிளையாடற் புராணம் 49 ஆவது படலமாகிய “திருவாலவாயான படலத்தில்”, அழகுமிக்க அதுலகீர்த்தி என்னும் பாண்டியனின் மகனாகிய கீர்த்திபூடண பாண்டியன் செங்கோலோச்சி வரும் காலத்தில், பிரளயம் ஏற்பட்டு, கரிய கடல்கள் ஏழும், ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லையைக்கடந்து, விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும், நிலைபெயருமாறு, பிரளயமாக ஒன்றோடொன்று கோத்தன[11].  அந்தப் பெரிய கடல் வெள்ளத்துள் (பெருஞ் சுனாமியுள்) மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த முடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன[12] என்கிறது புராணம்.

            கடல்கோளிற்குப் (சுனாமிக்குப்) பின்னர் தோன்றிய, வங்கிய சேகர வழுதி மன்னன் மதுரை நகரை மீண்டும் அமைத்தான்[13] என்கிறது புராணம்.

             

 

3) கொதித்து எழுந்த கடல் -

How big is a tsunami?

“அலாஸ்காவின் லிட்டூயா விரிகுடாவில் 1720 அடி உயரத்தில் சுனாமி ஏற்பட்டது.  ஜூலை 9, 1958 இரவு, அலாஸ்கா பன்ஹான்டில் நடந்த நிலநடுக்கம் லிட்டூயா விரிகுடாவின் வடகிழக்கு கரையிலிருந்து சுமார் 30.6 மில்லியன் கன மீட்டர் பாறை, சுமார் 914 மீட்டர் உயரத்தில் இருந்து நீரில் மூழ்கி சுனாமியை உருவாக்கியது.  அலைகளின் சக்தி அனைத்து மரங்களையும் தாவரங்களையும் கடல் மட்டத்திலிருந்து 1720 அடி (524 மீட்டர்) உயரத்தில் இருந்து அகற்றியது. கோடிக்கணக்கான மரங்கள் பிடுங்கப்பட்டு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இது இதுவரை அறியப்படாத மிக உயர்ந்த அலை” என்கின்றது புவியியல் புள்ளிவிபரம்[14].    

            ஆனால் சுந்தரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் உண்டான கடல்கோளின் போது, கடல்அலையானது அண்டத்தின் (Universe) முகட்டினைத் தடவும் உயரத்திற்கு எழுந்தது என்கிறது புராணம்.   “சந்திரனது துண்டத்தின் தொகுதி போலும், சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டு ஒலிக்குமாறு தள்ளி, மிக வெள்ளிய நுரைகள் ததும்பவும், ஆண் சுறாக்கள் மேலே சுழலவும், குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசுகின்ற, அலை வரிசைகள், அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவவும், ஏழு கடல்களும் ஆரவாரித்து எழுந்தன[15].  

            எழுகடல் தெரு - அதைக் கண்ட மதுரை மக்கள் நடுங்க, கலியுக முடிவின்கண் பிரமனது படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல, பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது, எல்லாப் புவனங்களையும் கீழ்ப்படுத்திய திரு ஆணையினாலே, அவ்விறைவனது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, தீர்த்தக் குளத்தில் சென்று அடங்கின[16].  எட்டு நிறத்தில் பொற்றாமரைக் குளத்தில் கடல்நீர் - ஏழுகடல் களின் கடல்நீரும் பொன்நிறமுடைய மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் வந்து சேர்ந்து தங்கிய காரணத்தினால், பொற்றாமரைக் குளமானது பொன்நிறமும் சேர்ந்து மொத்தம் எட்டு நிறங்களுடன் காட்சியளித்தது என்கிறது புராணம்[17].

            கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் - படகுகள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, சூரியனுடன் சேர்ந்துள்ள சந்திரன் மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராகு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும், மேகங்கள்  மதுரையை மறைத்தற்கு வருதலை ஒத்திருந்தது. இதை வேறு எவ்வாறு சொல்வது?[18]

 

 

பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -  வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக, வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக, பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.

 

4) கடல்வெள்ளத்தின் (சுனாமியின்) ஒலி

                      ஊழிக்காலத்தில் கடலுக்குள் உண்டான நிலச்சரிவினால் (பிரளயத்தினால்) ”இரண்டு கடல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிப் போர் செய்தனவாம்”.    தாடாதகைப் பிராட்டியார் மதுரையிலிருந்து படை நடத்தி இமயம்வரை சென்று வெற்றி பெறுகிறார்.  மேலும் திருக்கைலாயத்தின் மீதும்                 படையெடுக்கத் துணிந்து செல்கிறார்.  இச்செய்தி அறிந்த நந்திதேவர்  பூதகணங்களை போருக்கு ஏவுகிறார்.  தடாதகைப் பிராட்டியாரின் படைகளும் நந்திதேவர் ஏவிய பூதிகணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போர் செய்கின்றன. அச்செயலானது, கடலுங் கடலும் மோதிப் போர் செய்வது போன்று இருந்ததாம்[19].   சூலப்படைகளையும், மழுவாட் படைகளையும், பெரிய ஈட்டிகளையும், சக்கரப் (திகிரிப்) படைகளையும், எறிபடைகளையும், சிறிய ஈட்டிகளையும், வாட்படைகளையும், தண்டங்களையும், கலப்பைகளையும், நஞ்சினைக் கொட்டுகின்ற வேற்படைகளையும், வீரர்கள் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரிக்கும் ஆரவாரங்கள், ஊழிக்காலத்தில் ஒலிக்கும் கடலின் ஒலிகளை ஒத்தன[20] என்கிறது புராணம்.

 

5) ‘சுர்’ என வற்றிய சுனாமி -  

            பிரளயத்தினால் நிலச்சரிவுகள் உண்டாவதை முன்னமே கணித்துக் கண்டறிய இயலாது. பிரளயத்தினால் உண்டாகும் கடல்கோள்களைத் தடுக்கவும் இயலாது. ஆனால் கடல்வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகக் கடற்கரை ஓரங்களில் “சுனாமி தடுப்புச் சுவர்கள்“ அமைத்துக் கடல்வெள்ளத்தின் சீற்றத்தைக் குறைக்க முற்படுகின்றனர்.

பாண்டிய நாட்டிற்குள் கடல்வெள்ளம் வந்துகொண்டிருந்த போது, உக்கிரபாண்டியன் “வேல் எறிந்து” கடல்வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினான் என்கிறது புராணம்.  வளை வேல் செண்டு என்ற மூன்று ஆயுதங்களை உக்கிரபாண்டியனுக்கு அவனது தந்தையான சுந்தரபாண்டியன் வழங்கினார் என்றும், கடல்வெள்ளத்தின் மீது வேல் எறிந்து தடுத்தான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
           

(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)

 

உக்கிரப் பெருவழுதியாகிய பாண்டியன் கூறிய வேலாயுதத்தை எடுத்து வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று[21] என்று புராணம் குறிப்பிடுகிறது. கோளை உக்கிரபாண்டியன் “வேல் எறிந்து” தடுத்து நிறுத்தினான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.     உக்கிரபாண்டியன் பயன்படுத்திய இந்த “வேலாயுதம்” கூரிய முனையை உடையது என்றும் அதை வலமாகச் சுழற்றி வீசினான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.  வாளைச் சுழற்றலாம், வேலைச் சுழற்ற முடியுமா?  கடலில் வேல் எறிந்தால் சுர் என்று கடல்வற்றுமா? வேல் பற்றிய பிற விளக்கங்கள் ஏதும் திருவிளையாடற் புராணத்தில் காணக் கிடைக்காத காரணத்தினால், கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தடுத்து நிறுத்தத் தமிழ் மன்னர் “வேல்” என்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை மட்டும் திருவிளையாடற் புராணத்தின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

6) கடல்கோளுக்குப் (பெருஞ் சுனாமிக்குப்) பின்னர்?

What will happen after Tsunami?

            பிரளயத்தினால் கடல்கோள் உண்டாகிக் கடல்வெள்ளத்தினால் நாடுநகரங்கள் அடித்துச் செல்லப்பட்ட பின்னர், எங்கும் பள்ளங்கள் தோன்றி அவற்றில் கடல்நீர் தேங்கி யிருந்தன என்றும், மேகங்கள் கூடிக் கடுமையான பெருமழை பெய்து கடல்நீரை யெல்லாம் போக்கின என்கிறது புராணம்[22].              ஏழு முகில்கள் தோன்றி, கடல் வற்றியது என்று சொல்லுமாறு நீரினைக் குடித்து மேலெழுந்து, உடல் கறுத்து, மின்னல் வீசி, இடித்து மழையினைப் பொழிந்தது என்கிறது புராணம்[23].

            கடல்வெள்ளத்தினைத் (சுனாமியைத்) தொடர்ந்து பெருமழை பெய்யும் என்கிறது புராணம்.

            திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ள கடல்கோள் கடல்வெள்ளம் பற்றிய செய்திகள் பலவும் புனைவுகளாகவே கருதப்பெற்று வந்தன.   2004 நடைபெற்ற கடல்கோளிற்குப் (சுனாமிக்குப்) பின்னர் திருவிளையாடற் புராணக் கருத்துகள் அந்நாளில் பாண்டியநாட்டில் நடந்த நிகழ்வுகளைத்தான் கூறுகிறது என்பது தெளிவாகிறது.   கடல்வெள்ளம் (சுனாமி) பற்றிய விரிவான விளக்கம் அடங்கிய நூலாகத் திருவிளையாடற் புராணம் விளங்குகிறது.

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

           

நன்றி - இக்கட்டுரையில் எடுத்தாளப் பெற்றுள்ள திருவிளையாடற் புராணம் பாடல்கள் அனைத்தும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (TAMIL VIRTUAL ACADEMY) இணையதளத்திலிருந்து எடுக்கப் பெற்றுள்ளன.  தமிழ் இணையக் கல்விக்கழகத்தினருக்கு நன்றி.   http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

இயற்கைப் பேரழிவுகளும் மீட்டெடுப்புகளும்

நிலம், நீர், தீ, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) என்ற பஞ்ச பூதங்களால் ஆனது இந்தப் புவிவாழ்வியல்.   இந்த ஐந்தில் ஏதொன்றினால் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய பேரழிவை மனிதர்களுக்கும் ஏனைய பிற உயிரினங்களுக்கும் உண்டாக்கி விடுகின்றன.  நிலப்பிளவுகள் நிலச்சரிவுகள், ஆற்றுவெள்ளம் கடல்வெள்ளம் (சுனாமி), போர் மற்றும் இராசாயண அணுஉலை விபத்துகள், மற்றும் காட்டுத்தீ, விண்கற்கள் வால்நட்சத்திரங்கள் முதலியவைகளால் அழிவுகள் உண்டாகின்றன.

            பஞ்ச பூதங்களாலும் மனிதர்களாலும் எத்தனையோ இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் அந்தந்த இடத்தில் உள்ள மனிதர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.  ஆனால், கடல்வெள்ளத்தால் (சுனாமியினால்) உண்டாகும் அழிவுகளே மிகவும் ஆபத்தானவைகளாக உள்ளன?  ஐந்தாறு நிமிடங்களில் தொடங்கி ஐந்தாறு மணி நேரத்திற்குள் எல்லாம் அழிந்து முடிந்துவிடுகிறது.  கடல்தாண்டியுள்ள நாடு நகரங்களில் உள்ளவர்களையும் அழித்துவிடுகிறது.

 

கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) உண்டாகும் பேரழிவுகளில் இருந்து மனித உயிர்களைக் காப்பது எப்படி?

 

 

 

1) கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) இருந்து தப்பித்து விடலாமா?

Can you outrun a tsunami?

            பெரிதும் வாய்ப்பில்லை. நிலப்பகுதியில் ஆறுகள் ஓடும் இடங்களே பள்ளமாக இருக்கும்.  கடல்வெள்ளமானது (சுனாமியானது) முதலில் ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகத்துவாரங்களின் வழியாகவே நிலத்தினுள் பரவும்.  எனவே கடல்வெள்ளம் ஏற்படும்போது கடற்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்.  கடலின் நடுவேயுள்ள கப்பல்களில் இருப்பவர்களுக்கும், மலைகளில் வாழ்பவர்களுக்கும் கடல்கோளால் பாதிப்பு இருக்காது, அல்லது மிகவும் குறைவாக இருக்கும். 

 

 

கடல்கோள் நிகழும்போது, உயரமான இடங்களுக்கு வேகமாகப் பயணம் செய்து தப்பிக்கலாம்.

            கடல்கோள் கடல்வெள்ளம் பற்றி விரிவாகக் கூறும் திருவிளையாடற் புராணத்தில் கடல்கோளின்போது யாரும் தப்பிப் பிழைத்ததாகக் குறிப்புகள் ஏதும் வாசிக்கக் கிடைக்கவில்லை. 

            கடல்வெள்ளம் உண்டாகித் தரையைத் தாக்கி அழித்து, அதன் சீற்றம் குறைந்திடச் சிலமணி நேரங்களே ஆகும்.  இந்தச் சிலமணி நேரங்கள் மட்டும் கடல்வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டால் போதும். 

 


           

எப்படித் தப்பிப் பிழைப்பது?

            இப்போதிருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சிலமணிநேரங்கள் வரை மனிதன் வாழக்கூடிய வகையிலான மிகப்பெரிய பலூன்களைத் தயாரிக்கலாம்.  இந்நாட்களில் மகிழுந்துகள் விபத்திற்கு உள்ளாகும்போது, விபத்தில் நசுங்கிவிடாமல் தப்பிப்பதற்காகப் பலூன்களை வடிவமைத்துள்ளனர்.  அதுபோன்று கடல்வெள்ளம் தாக்கும் போது, மிகப்பெரிய பலூன்களின் உள்ளே சென்று பாதுகாப்பாகத் தங்கிடலாம்.  கடல்வெள்ளத்தின் (சுனாமியின்) சீற்றம் குறைந்த பின்னர் அந்தப் பலூன்களிலிருந்து வெளியே வரலாம்.  இதை போன்றதொரு அமைப்பை அறிவியலாளர்கள் உருவாக்கலாம்.   இது சாத்தியமான ஒன்றே ஆகும். 

            கோடானுகோடி பணத்தைச் செலவு செய்து கடல்கோள் (சுனாமி) எச்சரிக்கைக் கருவிகளை அமைத்துள்ளனர்.  அத்துடன் கடற்கரை யோரம் உள்ள ஒவ்வொருவருக்கும் இதுபோன்றதொரு பலூனை வழங்கி, அவர்களுக்குப் பயிற்சியும் அளித்தால், கடல்வெள்ளத்தினால் உயிர்ச்சேதம் என்பது மிகமிகக் குறைய வாய்ப்புகள் உள்ளன.

 

 

2) கடல்கோளை முன்கூட்டியே கண்டறிய இயலுமா?

Can you predict a tsunami?

வாய்ப்பில்லை.

            கடலுக்கு அடியில் அயனங்கள் எப்போது புரளும், எப்போது பிரளயம் ஏற்படும் என்று கருவிகளால் கணிப்பது அரிது.  எனவே பிரளயம் நிலநடுக்கம் மற்றும் கடல்வெள்ளம் இவற்றை அறிவியல் அடிப்படையில் முன்னரே கணித்திட வாய்ப்புகள் இல்லை.  கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்றபட்ட பின்னரே அதை உணர்ந்து கொள்ள இயலும். 

            புராணத்தில் கடல்கோள்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகக் குறிப்புகள் ஏதும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

            நிலநடுக்கங்கள் ஏற்பட்ட இடத்தில் அன்றைய கோள்நிலைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் ஒருவேளை கோள்நிலைகளுக்கும் நிலநடுக்கங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியலாம்.

 

 

3) பெரும் அழிவை உண்டாக்கக்கூடிய கடல்கோள் மீண்டும் ஒருமுறை நிகழ வாய்ப்புள்ளதா?  Is a mega tsunami possible?

            ஆமாம், உள்ளது.  புவியியல் அடிப்படையில் மீண்டும் கடல்கோள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.   திருவிளையாடற் புராணமும் “பாண்டியருக்கு எதிரி கடல்” என்று கூறுகிறது.

            புவியியல்- தென்னிந்தியாவை அழிக்க வல்ல மற்றொரு கடல்கோள் உண்டாவற்கு வாய்ப்புகள் உள்ளன.  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கிழக்கே இருந்த மாபெரும் நிலத்திட்டு கடலில் மூழ்கி அழிந்துள்ளது.  இதன் காரணமாகவே கடல்கோள்கள் ஏற்பட்டு தமிழகத்தைத் தாக்கியுள்ளது.  அந்தமான் நிக்கோபார் நிலத்திட்டுகளில் எஞ்சியுள்ள திட்டுகளும் சரிந்து விழுந்து கடலில் மூழ்கினால், தென்னிந்தியா ஸ்ரீலங்கா வங்காளதேசம் மியான்மார் ஆகிய நாடுகளை அழிக்கவல்ல ஓர் மாபெரும் கடல்கோள் நடைபெறச் சாத்தியம் உள்ளது.

            புராணம்- சுந்தரபாண்டியன் அவனது மகனான உக்கிரபாண்டியனுக்கு மணவூரைச் (தற்போது அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி அருகேயுள்ள ஊர்) சேர்ந்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்து, நாட்டை ஆளுமாறு பட்டம் சூட்டி வைக்கிறான்.  அப்போது சுந்தரபாண்டியன் உக்கிரபாண்டியனுக்கு, வளை(பூமராங்) வேல் செண்டு என்ற மூன்று ஆயுதங்களைக் கொடுத்து உபதேசம் வழங்குகிறான். “புதல்வனே, கேட்பாயாக, தேவேந்திரனும் கடலும் நினக்குப் பெரிய பகையாகும்; அழகிய மேருமலை இறுமாப்புறும், அப்போது இந்திரன் முடி சிதறுமாறு, இந்த வளையினைக்கொண்டு எறிவாய். கடலின் கண் இந்த வேற்படையை விடுவாய், இந்தச் செண்டினால், மேருவைத் (இமயமலையைத்) தாக்குவாய்” என்று கூறி, அம் மூன்று ஆயுதங்களையும் எடுத்துக் கொடுத்தருளினான்[24] என்கிறது புராணம்.   அதாவது, பாண்டியருக்குக் கடல் பகையாகும் என்று புராணம் குறிப்பிடுகிறது.  திருவிளையாடற் புராணத்தின் இந்தக் கருத்தின் அடிப்படையில் மீண்டும் கடல்கோள் தமிழகத்தைத் தாக்க வாய்ப்புகள் உள்ளன.

            கடலின் நடுவே பாம்பின்மீது பள்ளிகொண்டுள்ள அனந்தசயனப் பெருமாளை நினைவிற் கொள்ள வேண்டும்.  பெருமாள் படுத்திற்கும் பாம்பு போன்று, அடுக்கடுக்கான நிலத்திட்டுக்களைக் கொண்டது இந்தோனேசியா நிலத்திட்டு. பாம்பின் தோலில் உள்ள செதில்கள் போன்று, இந்தோனேசியாபெருந்திட்டில் (indonesia plate) சிறுசிறு ஒழுங்கற்ற நிலத்திட்டுகள் (faults) உள்ளன.  இவ்வாறு உள்ள சிறுசிறு செதில்கள் எப்போதாவது பெயர்ந்து விழுகின்றன.  இவ்வாறு கடலுக்கு உள்ளே சிறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழும்போது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

           

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?

            இதை உறுதியாகக் கூற இயலாது. செதில் போன்ற அமைப்புடைய நிலத்திட்டுக்கள் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், கோள்களின் நிலைகளுக்கும் தொடர்புகள் (correlation)ஏதேனும் உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும். இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

            மற்றபடி, கங்கை பூமியில் இறங்கிக் கங்கையின் கசடுகள் படிந்து, அதனால் இந்தோனேசியா நிலத்திட்டுகள் உருவாகிப் பல யுகங்கள் ஆகிவிட்டன.  நிலம் நன்றாக இறுகி விட்டது.  இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.  அச்சமில்லாமல் இக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

---------------------------------------

 

 

 


 

ஊழிதோறும் ஓங்கும் ஓங்கல்[25]

கடல்கோள்களும் (சுனாமிகளும்) மலைகளும்

 

இந்தியத் துணைக்கண்டம் ஆசியக்கண்டத்துடன் மோதுவதால் இமயமலை உயர்ந்துகொண்டே இருக்கிறதா? என்று புவியியலாளர்கள் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.  ஆனால் இமயமலையானது ஊழிக்காலங்களில் உயர்கிறது என்கிறது திருவிளையாடற் புராணம்.

 

ஊழ், ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?

            “ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள்.   புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும், புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

            திருக்குறளில் ஊழ் என்று ஓர் அதிகாரமே உள்ளது.  இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது.  “ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி யெனப்படு வார்“ என்று எல்லாவற்றையும் அழித்துவிடும் ஊழியையும்,  எந்த ஊழியிலும் அழியாமல் நிற்கும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது. திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.  திருவிளையாடல் புராணத்தில் 19 பாடல்களில் 'ஊழி' இடம் பெற்றுள்ளது[26].

 

1) ஊழி தோறும் ஓங்கும் இமயமலை

            “இந்தியத் துணைக்கண்டம் ஆசியக்கண்டத்துடன் மோதுகின்ற காரணத்தினால் இமயமலைத்தொடரானது உயர்ந்துகொண்டே உள்ளது” என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.  ஆனால் எந்தவிதமான அறிவியல் உபகரணங்களும் கண்டறியப்படாத புராண காலத்தில் எழுதப்பெற்ற திருவிளையாடற் புராணத்தில், இமயமலைத்தொடரானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் ஓங்கி உயர்கிறது என்றொரு புவியியல் கோட்பாடு கூறப்பட்டுள்ளது.

 

1) இமயலைத் தொடரில் திருக்கையலாயத்தின் சிறப்பினைக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணத்தின் 202 பாடலனது, திருக்கைலாயத்தை “ஓங்கியகல்” (ஓங்கல்) என்று குறிப்பிடுகிறது.  இந்த பூமி நிலைகெட்டு அழியும் நாளிலும், இமயமலையானது அதனுடைய வலிமை (உரம்) குன்றாது ஓங்கி நின்று ஊழி நிகழ்வுகளின் போதெல்லாம் மேலும் உயர்ந்து ஓங்கி நிற்கும் இந்த ஓங்கி உயர்ந்த கல்லினால் ஆன இமயமலை என்கிறது புராணம்.

“புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்”

 

 


2) தடாதகைப் பிராட்டியார் இமயமலைவரை படையெடுத்துச் சென்ற செய்தியைக் குறிப்பிடும் 625ஆவது பாடலும் திருக்கைலாயத்தை “ஊழிதோறும் ஓங்கும் ஓங்கல்” என்று குறிப்பிடுகிறது.
குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப் பிராட்டியார், ஒலிக்கின்ற பல இயங்களின் ஒலியையும், யானைகளும், தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், வீரர்களும், செல்கின்ற ஒலியையும் ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு,
ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார்.

 

“சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்”

 

            உலகின் மிகமிக உயரமான பல சிகரங்களை உடையதான நீண்டதொரு மலைத்தொடராக இமயமலை உள்ளது.  அதனால் கடல் காற்று ஆகியவன்றினால் ஊழிக்காலத்தில் அழிவுகள் ஏற்பட்டாலும் அந்த அந்த அழிவுகளின் எச்சம் இமயமலையின் மீது படிந்து இமயமலையின் உயரம் உயர்ந்து கொண்டே செல்லும். 

           

2) மலைகளின் மையம் மதுரை

            மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், சிவலிங்கத்திற்குத் தென்கிழக்கே உள்ள பொற்றாமரைத் தீர்த்தமானது பரமேசுவனால் உருவாக்கப்பட்டது என்றும், சிவபெருமான் மூன்றுதலையையுடைய சூலத்தை எடுத்துத் கீழே ஊன்றினான் என்றும்,  அது இந்தப் பூமியின் “முதுபார் கீண்டு[27]” (முதுமையான நிலத்திட்டைப் பிளந்து) பாதாலங் கீண்டு (பூமியின் அடியில் உள்ள நிலத்திட்டையும் பிளந்து), எட்டுக் கைகளை யுடைய நான்முகனது அண்ட கடாகத்தையும்[28] ஊடுருவிச் சென்றது என்றும்,   இதனால் பூமியை சுற்றிலும் இருந்த கடல்நீரானது “ஊழிக் காலத்தில் பொங்கி எழுந்த கடல்நீர்” போன்று பொற்றாமரைக் குளத்தில் பொங்கி மேலாங்கி வந்தது என்றும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[29]. 

            பொற்றாமரைக் குளத்தின் ஆழம் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அறியப்பெற வேண்டிய ஒன்று. ஆனால் மதுரைக்குக் கிழக்கு வடக்கு மேற்கு திசைகளில் முறையே மலம்பட்டி மலையும், அரிட்டாபட்டி யானைமலைகளும், நாகமலையும் உள்ளன.  இந்த மலைகளின் நீட்சியானது மதுரையில் சந்திக்கின்றன.  அதாவது இந்த மலைகளின் அடிப்பகுதி அல்லது தொடக்கம் மதுரையின் கீழே பாதாளத்தில் உள்ளது.  இந்த மலைகளின் நீட்டியானது மதுரையில் இருப்பதைக் கூகுள் புவிப்படத்தின் வழியாகக் காணக்கூடியதாக உள்ளது.

 

 

           

3) கடல்வெள்ளத்தினால் ( சுனாமியால் ) சிவகளை மலைத்தொடர் உருவானது

 

 மலிதிரை ஊர்ந்து மண்கடல் வெளவலின்

மெலிவின்று மேற்சென்று மேவார் நாடிடம்படப்

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன் -(கலி. 104)

            “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது” என்றால் அதற்கான தடையங்கள் தமிழகத்தில் காணக்கிடைக்கின்றனவா?

            ஆம், கிடக்கின்றன!   மதுரைக்குக் கிழக்கே உண்டான பிரளயத்தினால் வங்கக் கடலில் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி அனைத்தும் அழிந்து போயின என்கிறது திருவிளையாடற் புராணம்.  கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.

 

 

            வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதற்கான வழித்தடத்தைக் கூகுள் புவிப்படத்தில் காணும்படி கிடைக்கிறது.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ‘ஏரல்’ அருகே உள்ள ‘சிவகளை என்ற ஊருக்கு வடமேற்கேயும், பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளதைக் காணமுடிகிறது.

 

 

 

 

முருகன் அசுரனை வெற்ற இடமான திருச்செந்தூர் கடற்கரையோரம் உள்ளது. திருச்செந்தூர் அருகே கரையைக் கடந்த கடல்வெள்ளத்தினால், இந்த இரண்டு மண்மலைகளும் தோன்றித் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

            தென்னிந்தியா முழுவதும் குறிப்பாகத் தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், மண்குன்றுகள் தோன்றியிருப்பதற்கும், கிரானைட் மலைகளின் மேலே மண்கட்டிகள் அல்லது பொக்குப்பாறைகள் படிந்துள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்?  பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

 

--------------------------------------

 



[1] கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

(மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம்)

28 அ, குருநாதர் கோயில் தெரு,  கோட்டையூர் - 630 106

தொடர்பு எண்கள் - 824 826 6418, 944350 1912

மின்னஞ்சல்-kalairajan26@gmail.com /முகநூல்-kalairajan.krishnan

[3] “கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி

ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்

பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்

பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த தன்றே” (திருவிளையாடற் புராணம் 2330)

[5] பிரளயம் - மலைகளின் நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர்.  இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் (fault) புரண்டு பெயர்ந்து சரிந்து விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.

 

[6] “அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத

எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி

நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண்” (திருவிளையாடற் புராணம் 2331)

 

[7] “தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்

வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த

கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்

ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத” (2332)

 

[8][8] வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்

உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்

புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்

தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான். (2333)

 

[9]  “மலையத்துவ பாண்டியன்” என்ற பெயரால் மலையைத் துவசம் செய்த (அழித்த, சிதைத்த) பாண்டியன் என்பது பொருளாகிறது.  பன்மலையடுக்கத்துப் பஃறுளியாறும் இவன் காலத்தில் அழிந்திருக்கலாம். மலைக ளெல்லாம் அழிந்த ஊழிக் காலத்தில் இவன் ஆட்சி செய்தவனாக இருக்கலாம்.

[10] “முறையிட்ட செழியனெதிர் முறுவலித்தஞ் சலையென்னாக்

கறையிட்டு விண்புரந்த கந்தரசுந் தரக்கடவுள்

துறையிட்டு வருகடலைச் சுவறப்போய்ப் பருகுமெனப்

பிறையிட்ட திருச்சடையியற் பெயனான்கும் வரவிடுத்தான்” (1304).

 

“நிவப்புற வெழுந்த நான்கு மேகமு நிமிர்ந்து வாய்விட்

டுவர்ப்புறு கடலை வாரி யுறிஞ்சின வுறிஞ்ச லோடுஞ்

சிவப்பெருங் கடவுள் யார்க்குந் தேவெனத் தெளிந்தோ ரேழு

பவப்பெரும் பௌவம் போலப் பசையற வறந்த தன்றே” (1305).           

 

[11] “கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி

ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்

பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்

பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே”

 

[12]அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத

எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி

நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண்”

[13] திருவிளையாடற் புராணம் பாடல் எண் 2334.

[14] https://geology.com/records/biggest-tsunami.shtml

[15]துண்டமதித் திரளனைய சுரிவளைவாய் விடவுதைத்து

வெண்டவள நுரைததும்பச் சுறாவேறு மிசைகொட்பத்

தண்டரள மணித்தொகுதி யெடுத்தெறியுந் தரங்கநிரை

அண்டநெடு முகடுரிஞ்ச வார்த்தெழுந்த கடலேழும்” (888)

 

[16]காணுமா நகர்பனிப்பக் கலிமுடிவி னயன்படைப்புக்

கோணுமா றெழுந்ததெனக் கொதித்தெழுந்த கடலரவம்

பூணுநா யகனகில புவனமெலாங் கடந்ததிரு

ஆணையா லவனடிசென் றடைந்தார்போ லடங்கியதால்”. (889)

 

[17] “தன்வண்ண மெழுகடலன் றனிவண்ண மொடுகலந்து

பொன்வண்ண நறும்பொகுட்டுப் பூம்பொய்கை பொலிவெய்தி

மின்வண்ணச் சடைதாழ வெள்ளிமணி மன்றாடும்

மன்வண்ண மெனவெட்டு வண்ணமொடும் வயங்கியதால்”.(890)

 

[18] வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்

கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்

வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்

அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)

[19] வென்றிக் கணத்தை விடுத்தான் கனமீது* பெய்த

குன்றிக் கணம்போற் கழல்கண்ணழல் கொப்ப ளிப்பச்

சென்றிக் கனைய மொழியாள்பெருஞ் சேனை யோடும்

ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே.(629)

 

[20] சூலங் கண்மழுப் படைதோமர நேமி பிண்டி

பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில்

ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக்

காலங் கலிக்குங் கடல்போன்ற களம ரார்ப்பு. (630)

[21] “எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை

மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட

அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்

கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே”. (1046)

[22] கதிர்மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருண னேய

அதிர்கடல் வறப்பச் செய்த வாடலீ தனையா னேய

முதிர்மழை யேழின் மேலு முன்னைநான் முகிலும் போக்கி

மதுரைநான் மாடக் கூட லாக்கிய வண்ணஞ் சொல்வாம் “.(1309)

 

[23]நளிர்புனன் மதுரை மூதூர் நாயக னாட றன்னைத்

தெளிகில னாகிப் பின்னுஞ் செழுமுகி லேழுங் கூவிக்

குளிர்கடல் வறந்த தென்னக் குடித்தெழுந் திடித்துப் பெய்யா

ஒளிவளர் மதுரை முற்று மொல்லெனக் களைமி னென்றான்” (1311.)

 

[24] “மைந்த கேட்டி யிந்திரனுங் கடலு முனக்கு வான்பகையாஞ்

சந்த மேருத் தருக்கடையுஞ் சதவேள் விக்கோன் முடிசிதற

இந்த வளைகொண் டெறிகடலி லிவ்வேல் விடுதி யிச்செண்டால்

அந்த மேருத் தனைப்புடையென் றெடுத்துக் கொடுத்தா னவைமூன்றும்” (1027).

 

[25] கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

(மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம்)

28 அ, குருநாதர் கோயில் தெரு,  கோட்டையூர் - 630 106

தொடர்பு எண்கள் - 824 826 6418, 944350 1912

மின்னஞ்சல்-kalairajan26@gmail.com /முகநூல்-kalairajan.krishnan

[27] கீண்டு = கீழ்ந்து

[28] கடாகம் = அண்ட கோளகத்தின் புறவோடு

[29] அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர் என்ன
ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம் ஆக்கிக்
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.  (265.)