சனி, 2 செப்டம்பர், 2023

ஓம் கபர்திநே நம: ஆகாய கங்கை பூமியில் சிவபெருமானின் ஜடாமுடியில் இறங்கியது.

#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம் 

சிவபெருமானின் அஷ்டோத்தர சதநாமாவில் உரைக்கப்பட்டுள்ள திருநாமங்களில் ஒன்று

ஓம் கபர்திநே நம: 

|| ओं कपर्दिने नमः || 

 கங்காப்ரவாஹமுள்ள ஜடாமண்டல முடையவர். ஜடைமீது பட்டதால் கங்கை அதிக பாவனமானது. அந்த கங்கை கோரமான கலியின் பாபத்தை அகற்றவல்லது கபர்தியின் த்யாநமும் நமஸ்காரமும் அங்ஙனமே. (கூர்ம புராணம்) இதுவும் சுருதிபிரஸித்த திருநாமம். 

"பர்வ பூர்த்தௌ” என்ற தாதுவிலிருந்து பிரவாஹம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ப" எனும் சப்தம் தோன்றிற்று. “க” என்பது ஜலமெனும் அர்த்தங்கொண்ட சொல் “கப” எனில் ஜலப்ரவாஹமென்று பொருள். அது கங்காபிரவாஹமாம். அதை“தாயதி” சுத்தம் செய்கிறது என்று கபர்த்த சப்தத்தின் அர்த்தம். கங்காஜலத்தைச் சுத்தம் செய்யும் ஜடையை உள்ளவர் என்பது பதார்த்தம்.

"புண்ணியமான சிவன் தலைமீது புண்யமான கங்கை விழுந்து, சிவனங்கத்தில்பட்ட ஜலம் பவித்ரமென மஹருஷிகள் அதில் ஸ்நாநம் செய்தார்கள்" என ஸ்ரீமத் ராமாயணம் கூறுகிறது. 

 'அபவித்ரனாயினும் பவித்ரனாயினும் ஸர்வ அவஸ்தைகளை அடைந்தவனாயினும் எவன் தேவனான ஈசானனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தனாவான்.” என சிவதர்மோத்தரம் அருள்கிறது. 

 “தானே சுத்தனானவன் கங்கையையும் அதிசுத்தமாக்கித் தரிப்பவன். அத்தகையவனை த்யாநம் செய்தால் நமது மலங்கள் அகலும்” என இத்திருநாமம் விளக்குகிறது.

ஸ்ரீ சிவநாம அஷ்டோத்தர சதம் மூலமும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஸ்ரீ பாஸ்கரராயர் ஆகியோர் கருத்தைத் தழுவி ஸாஹித்ய வாங்முக பூஷணம் பிரம்மஸ்ரீ ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா இயற்றிய தமிழுரையும் என்னும் நூலில்(1950) இருந்து...

நன்றி - இது முகநூல் நண்பரின் பதிவு. நண்பருக்கு நன்றி. 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக